http://www.studyofastrology.com/2017/12/2017-2020_1.html?m=1
Friday, 22 December 2017
Thursday, 21 December 2017
ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக
ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக
நம்மிடம் இருக்கும் தோஷங்களுக்கெல்லாம் காரணம் நாம் ஒரு காலத்தில் செய்த பாவ செயல்கள் தான். நாம் சில நற்காரியங்களை செய்வதன் மூலம் இந்த தோஷங்களில் இருந்து எளிதாக விடுபட முடியும். என்னசெய்து தோஷங்களை போக்கலாம்
நம்மால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் ஆகியவற்றை கொடுப்பதன் மூலம் நம் தோஷங்கள் விலகும். இதை ஒரே ஒரு முறை கொடுப்பதால் பெரிதாக பயன் இல்லை. நம்மால் முடியும்போதெல்லாம் கொடுக்க வேண்டும். இதன் மூலன் சந்திர பகவானின் ஆசிகள் நமக்கு பறி பூரணமாக கிடைக்கும்.
வயதான ஏழைகள் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவுவது, ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போன்ற செயல்கள் மூலம் குருபகவானின் அருள் பெற்று தோஷங்கள் விலகும்.
ஈமச்சடங்கை செய்யும் அளவிற்கு கூட வசதி இல்லாதவர்களுக்கு அதை செய்ய பணம் கொடுத்து உதவுவதன் மூலம் சனி பகவானின் ஆசிகளை பெறலாம்.
நோயுற்று, கோவில்களில் பிச்சை எடுக்கும் ஏழைகளுக்கு வயிறார சாப்பாடு போடுவது, ஏழைகளின் மருத்துவ செலவிற்கு உதவுவது போன்ற செயல்களை செய்வதன் மூலம் சூரிய பகவானின் ஆசிகளை பெறுவதோடு தோஷங்களும் விலகும்.
உடுத்த ஒரு நல்ல ஆடை கூட இல்லாத ஏழைகளுக்கு புதன் கிழமைகளில் ஆடைகளை தானமாக கொடுப்பது, ஏழைகளுக்கு புதன் கிழமைகளில் வயிறார சாப்பாடு போடுவதன் மூலம் புதன்பகவானின் அருள் பெறுவதோடு தோஷங்களும் விலகும்.
தீயவர்களோடு சேராமல் இருப்பது, நாகத்தை தெய்வமாக மதிப்பது, இக்கட்டில் இருக்கும் நாகத்தை காப்பது. யாரேனும் நாகத்தை கொன்றிருந்தால் அதற்கு பாலூற்றி எரிப்பது போன்ற செயல்கள் மூலம் ராகு மற்றும் கேது பகவானின் அருளை பெறுவதோடு தோஷங்களும் விலகும்.
செய்யும் தொழிலை தெய்வமாக மதிப்பது, நாம் வாழும் இடத்தையும், தொழில் செய்யும் இடத்தையும் தொட்டு வணங்கி பூமாதேவிக்கு மரியாதை செலுத்துவது, ஏழை பெண்களின் திருமண செலவிற்கு உதவுவது போன்ற செயல்கள் மூலம் தோஷம் விலகும்.
கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும்.
1. பவம் - சிங்கம்
2. பாலவம் - புலி
3. கௌலவம் - பன்றி
4. தைதிலம் - கழுகு
5. கரம் - யானை
6. வணிஜை - எருது
7. பத்ரம் - கோழி
8. சகுனி - காக்கை
9. சதுஷ்பாதம் - நாய்
10. நாகவம் - பாம்பு
11. கிமுஸ்துக்னம் - புழு
மேலே காணப்படும் 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.
கீழே தரப்பட்டுள்ள குணாதிசயங்கள் பெற்றிருப்பினும் , அவர்களின் தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே மேலதிகமாக பிரதிபலிக்கின்றார்கள்.
1. பவ கரணம் (சிங்கம் )
எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.
எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.
2. பாலவ கரணம் (புலி)
சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும்
குணமுடையவருமாவார்.
சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும்
குணமுடையவருமாவார்.
3. கெளலவ கரணம் (பன்றி)
அரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.
அரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.
4. தைதுலை கரணம் (கழுதை)
தருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.
தருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.
5. கரசை கரணம் (யானை)
அரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், பெண் நேயரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.
அரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், பெண் நேயரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.
6. வணிசை கரணம் (எருது)
கற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும், பெண் நேயருமாவர்.
கற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும், பெண் நேயருமாவர்.
7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)
ஆண்மைக்குறைவுள்ளவர் , மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.
ஆண்மைக்குறைவுள்ளவர் , மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.
8. சகுனி கரணம் (காகம்)
நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.
நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.
9. சதுஷ்பாத கரணம் (நாய்)
பெண் பிரியரும், வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபியும், தீய நடத்தையுடையவருமாவார்.
பெண் பிரியரும், வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபியும், தீய நடத்தையுடையவருமாவார்.
10. நாகவ கரணம் (பாம்பு)
துன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.
துன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.
11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)
தாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.
தாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.
இவைகள் கரணத்திற்குறிய பொதுவான பலன்களாக இருக்கும்.
இப்போது திருமண முறிவுக்கான காரணங்களை பார்ப்போம் .
கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சுகித்திருக்கும்.
மற்ற சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு அமைத்துக்கொள்ளும்.
காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி, கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி இல்லை.
குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது.
உதாரணமாக கோழியின் (சேவலின்) , காகத்தின் கலவி என்பது சில நொடிகளே,
ஆனால் நாய்,பன்றி,கழுதை,புழு போன்றவற்றின் கலவி நேரம் மிக கூடுதலாகும்.
உதாரணத்திற்கு ஒரு கோழி (பத்திரை கரணம்)அல்லது காகத்தின் (சகுனி கரணம்) கரணத்தில் பிறந்த ஆணின் கலவி நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும்.
ஆனால் ஒரு பன்றியின் (கௌலவம் கரணம்) நாயின் (சதுஷ்பாதம் கரணம்) கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும்.
இதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார்கள் பெரியோர்.
Friday, 15 December 2017
சகஸ்ரநாம லிங்கங்களின் பெயர்கள்.....
1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி லிங்கம் 11 அங்கு லிங்கம் 12 அசரிய லிங்கம் 13 அசுர லிங்கம் 14 அசை லிங்கம் 15 அசோக லிங்கம் 16 அச்சு லிங்கம் 17 அஞ்சா லிங்கம் 18 அட்ட லிங்கம் 19 அட்ச லிங்கம் 20 அட்சதை லிங்கம் 21 அட்டோ லிங்கம் 22 அடிமுடி லிங்கம் 23 அடி லிங்கம் 24 அணணா லிங்கம் 25 அண்ட லிங்கம் 26 அணி லிங்கம் 27 அணு லிங்கம் 28 அத்தி லிங்கம் 29 அதழ் லிங்கம் 30 அதிபதி லிங்கம் 31 அதிர்ஷ்ட லிங்கம் 32 அதிய லிங்கம் 33 அதிசய லிங்கம் 34 அதீத லிங்கம் 35 அந்தார லிங்கம் 36 அந்தி லிங்கம் 37 அநந்தசாயி லிங்கம் 38 அநலி லிங்கம் 39 அநேக லிங்கம் 40 அப்ப லிங்கம் 41 அப்பு லிங்கம் 42 அபய லிங்கம் 43 அபி லிங்கம் 44 அபிநய லிங்கம் 45 அபிஷேக லிங்கம் 46 அம்பல லிங்கம் 47 அம்பி லிங்கம் 48 அம்புசி லிங்கம் 49 அம்ம லிங்கம் 50 அமல லிங்கம் 51 அமர லிங்கம் 52 அமராவதி லிங்கம் 53 அமிர்த லிங்கம் 54 அர்ச்சனை லிங்கம் 55 அர்ச்சுண லிங்கம் 56 அர்த்த லிங்கம் 57அரச லிங்கம் 58 அரவ லிங்கம் 59 அரங்க லிங்கம் 60 அரம்பை லிங்கம் 61 அரளி லிங்கம் 62 அரி லிங்கம் 63 அரிணி லிங்கம் 64 அரிமா லிங்கம் 65 அருக லிங்கம் 66 அருணை லிங்கம் 67 அருமணி லிங்கம் 68 அரும்பு லிங்கம் 69 அருளி லிங்கம் 70 அரூப லிங்கம் 71 அல்லி லிங்கம் 72 அலை லிங்கம் 73 அவைய லிங்கம் 74 அழகு லிங்கம் 75 அளத்தி லிங்கம் 76 அற லிங்கம் 77 அறிவு லிங்கம் 78 அன்பு லிங்கம் 79 அன்புரு லிங்கம் 80 அன்ன லிங்கம் 81 அனுதாபி லிங்கம் 82 அனுபூதி லிங்கம் 83 அஷ்ட லிங்கம் 84 ஆக்கை லிங்கம் 85 ஆகம லிங்கம் 86ஆகாய லிங்கம் 87 ஆசான லிங்கம் 88 ஆசிரிய லிங்கம் 89 ஆசி லிங்கம் 90 ஆட லிங்கம் 91 ஆடரி லிங்கம் 92 ஆண் லிங்கம் 93 ஆண்டி லிங்கம் 94 ஆணுரு லிங்கம் 95 ஆத்ம லிங்கம் 96 ஆதார லிங்கம் 97 ஆதி லிங்கம் 98 ஆதிரி லிங்கம் 99 ஆதிசேவி லிங்கம் 100 ஆதிரை லிங்கம் 101 ஆதினா லிங்கம் 102 ஆபேரி லிங்கம் 103 ஆமிர லிங்கம் 104 ஆமை லிங்கம் 105 ஆய லிங்கம் 106 ஆயதி லிங்கம் 107 ஆர்த்தி லிங்கம் 108 ஆரண்ய லிங்கம் 109 ஆரண லிங்கம் 110 ஆராதனை லிங்கம் 111 ஆராபி லிங்கம் 112 ஆரூர லிங்கம் 113 ஆரோக்ய லிங்கம் 114 ஆலகால லிங்கம் 115 ஆலவாய் லிங்கம் 116 ஆலால லிங்கம் 117 ஆலி லிங்கம் 118 ஆவார லிங்கம் 119 ஆவி லிங்கம் 120 ஆவே லிங்கம் 121 ஆவுடை லிங்கம் 122 ஆழி லிங்கம் 123 ஆனந்த லிங்கம் 124 இக்கு லிங்கம் 125 இசை லிங்கம் 126 இடப லிங்கம் 127 இணை லிங்கம் 128 இதய லிங்கம் 129 இந்திர லிங்கம் 130 இமய லிங்கம் 131 இமை லிங்கம் 132 இரட்டை லிங்கம் 133 இராம லிங்கம் 134 இலக்கிய லிங்கம் 135 இலாப லிங்கம் 136 இளைய லிங்கம் 137 இறவா லிங்கம் 138 இறை லிங்கம் 139 இனிமை லிங்கம் 140 ஈகை லிங்கம் 141 ஈசான்ய லிங்கம் 142 ஈட லிங்கம் 143 ஈடண லிங்கம் 144 ஈடித லிங்கம் 145 ஈடிலி லிங்கம் 146 ஈர்ப்பு லிங்கம் 147 ஈழ லிங்கம் 148 ஈஸ்வர லிங்கம் 149 ஈஸ்வரி லிங்கம் 150 உக்ர லிங்கம் 151 உச்சி லிங்கம் 152 உசித லிங்கம் 153 உடம்பி லிங்கம் 154 உடுக்கை லிங்கம் 155 உணர் லிங்கம் 156 உத்தம லிங்கம் 157 உத்ராட்ச லிங்கம் 158 உதய லிங்கம் 159 உதிர லிங்கம் 160 உப்பிலி லிங்கம் 161 உப்பு லிங்கம் 162 உப லிங்கம் 163 உபதேச லிங்கம் 164 உபய லிங்கம் 165 உமா லிங்கம் 166 உமை லிங்கம் 167 உயிர் லிங்கம் 168 உரி லிங்கம் 169 உரு லிங்கம் 170 உருணி லிங்கம் 171 உருமணி லிங்கம் 172 உவப்பு லிங்கம் 173 உழவு லிங்கம் 174 உழுவை லிங்கம் 175 உற்சவ லிங்கம் 176 உன்னி லிங்கம் 177 ஊக்க லிங்கம் 178 ஊசி லிங்கம் 179 ஊதா லிங்கம் 180 ஊருணி லிங்கம் 181 ஊழி லிங்கம் 182 ஊற்று லிங்கம் 183 எட்டி லிங்கம் 184 எட்டு லிங்கம் 185 எதனா லிங்கம் 186 எந்தை லிங்கம் 187 எம லிங்கம் 188 எருது லிங்கம் 189 எல்லை லிங்கம் 190 எளிய லிங்கம் 191 எழிலி லிங்கம் 192 எழுத்தறி லிங்கம் 193 என்குரு லிங்கம் 194 ஏக லிங்கம் 195 ஏகம லிங்கம் 196 ஏகா லிங்கம் 197 ஏகாம்பர லிங்கம் 198 ஏகாந்த லிங்கம் 199 ஏடக லிங்கம் 200 ஏந்திழை லிங்கம் 201 ஏம லிங்கம் 202 ஏர் லிங்கம் 203 ஏரி லிங்கம் 204 ஏவச லிங்கம் 205 ஏழிசை லிங்கம் 206 ஏறு லிங்கம் 207 ஏனாதி லிங்கம் 208 ஐங்கர லிங்கம் 209 ஐய லிங்கம் 210 ஐராவத லிங்கம் 211 ஒப்பிலா லிங்கம் 212 ஒப்பிலி லிங்கம் 213 ஒருமை லிங்கம் 214 ஒளி லிங்கம் 215 ஓசை லிங்கம் 216 ஓடேந்தி லிங்கம் 217 ஓம் லிங்கம் 218 ஓம்கார லிங்கம் 219 ஓவிய லிங்கம் 220 ஔடத லிங்கம் 221 ஔவை லிங்கம் 222 கங்கா லிங்கம் 223 கச்ச லிங்கம் 224 கண்ட லிங்கம் 225 கடம்ப லிங்கம் 226 கடார லிங்கம் 227 கடிகை லிங்கம் 228 கடை லிங்கம் 229 கதிர் லிங்கம் 230 கதலி லிங்கம் 231 கந்த லிங்கம் 232 கபால லிங்கம் 233 கபில லிங்கம் 234 கமல லிங்கம் 235 கயா லிங்கம் 236 கயிலை லிங்கம் 237 கர்ண லிங்கம் 238 கர்ப்ப லிங்கம் 239 கரண லிங்கம் 240 கரு லிங்கம் 241 கருட லிங்கம் 242 கருமை லிங்கம் 243 கருணை லிங்கம் 244 கல்ப லிங்கம் 245 கல்வி லிங்கம் 246 கலி லிங்கம் 247கலை லிங்கம் 248 கவி லிங்கம் 249 கற்பக லிங்கம் 250 கற்பூர லிங்கம் 251 கன்னி லிங்கம் 252 கன லிங்கம் 253 கனக லிங்கம் 254 கனி லிங்கம் 255 கஸ்தூரி லிங்கம் 256 கஜ லிங்கம் 257 கருணாகர லிங்கம் 258 காசி லிங்கம் 259 காஞ்சி லிங்கம் 260 காடக லிங்கம் 261 காத்த லிங்கம் 262 காதம்பரி லிங்கம் 263 காந்த லிங்கம் 264 காப்பு லிங்கம் 265 காம லிங்கம் 266 கார் லிங்கம் 267கார்த்திகைலிங்கம் 268 காரண லிங்கம் 269 கால லிங்கம் 270 காவி லிங்கம் 271காவிய லிங்கம் 272 காவேரி லிங்கம் 273 காளி லிங்கம் 274 காளத்தி லிங்கம் 275 காளை லிங்கம் 276 கான லிங்கம் 277கிண்கிணி லிங்கம் 278 கிரி லிங்கம் 279 கிரியை லிங்கம் 280 கிரீட லிங்கம் 281 கிருப லிங்கம் 282 கிள்ளை லிங்கம் 283 கீத லிங்கம் 284 கீர்த்தி லிங்கம் 285 கீர்த்தன லிங்கம் 286 குக லிங்கம் 287 குங்கும லிங்கம் 288 குஞ்சு லிங்கம் 289 குட லிங்கம் 290 குடுமி லிங்கம் 291 குண லிங்கம் 292 குணக்ரி லிங்கம் 293 குபேர லிங்கம் 294 குருதி லிங்கம் 295 குமர லிங்கம் 296 குமரி லிங்கம் 297 குமுத லிங்கம் 298 குல லிங்கம் 299 குழலி லிங்கம் 300 குழவி லிங்கம் 301 குழை லிங்கம் 302 குற்றால லிங்கம் 303 குன்று லிங்கம் 304 குண்டலி லிங்கம் 305 குந்த லிங்கம் 306 கும்ப லிங்கம் 307 குரவ லிங்கம் 308 குறிஞ்சி லிங்கம் 309 கூததாடி லிங்கம் 310 கூத்து லிங்கம் 311 கூர்ம லிங்கம் 312 கெஜ லிங்கம் 313 கேச லிங்கம் 314 கேசரி லிங்கம் 315 கேசவ லிங்கம் 316 கேடிலி லிங்கம் 317 கேதார் லிங்கம் 318 கேள்வி லிங்கம் 319 கைலாய லிங்கம் 320 கொங்கு லிங்கம் 321 கொடி லிங்கம் 322 கொடு லிங்கம் 323 கொளஞ்சி லிங்கம் 324 கொற்றை லிங்கம் 325 கொன்றை லிங்கம் 326 கோ லிங்கம் 327 கோகழி லிங்கம் 328 கோகுல லிங்கம் 329 கோட்டை லிங்கம் 330 கோடி லிங்கம் 331 கோண் லிங்கம் 332 கோண லிங்கம் 333 கோதண்ட லிங்கம் 334 கோதை லிங்கம் 335 கோப லிங்கம் 336 கோபி லிங்கம் 337 கோமதி லிங்கம் 338 கோல லிங்கம் 339 கௌசிக லிங்கம் 340 கௌதம லிங்கம் 341 கௌரி லிங்கம் 342 சக்தி லிங்கம் 343 சக்கர லிங்கம் 344 சகஸ்ர லிங்கம் 345 சகல லிங்கம் 346 சங்க லிங்கம் 347 சங்கம லிங்கம் 348 சங்கர லிங்கம் 349 சங்கு லிங்கம் 350 சஞ்சீவி லிங்கம் 351 சடாட்சர லிங்கம் 352 சடைமுடி லிங்கம் 353 சண்முக லிங்கம் 354 சத்திய லிங்கம் 355 சதங்கை லிங்கம் 356சதய லிங்கம் 357 சதா லிங்கம் 358 சதாசிவ லிங்கம் 359 சதுர் லிங்கம் 360 சதுர்த்தி லிங்கம் 361 சதுரங்க லிங்கம் 362 சதுரகிரி லிங்கம் 363 சந்த லிங்கம் 364 சந்திர லிங்கம் 365 சந்தன லிங்கம் 366 சந்தான லிங்கம் 367 சப்த லிங்கம் 368 சபா லிங்கம் 369 சம்பந்த லிங்கம் 370 சம்பு லிங்கம் 371 சமுத்திர லிங்கம் 372 சயன லிங்கம் 373 சர்வேஸ லிங்கம் 374 சரச லிங்கம் 375 சரீர லிங்கம் 376 சவரி லிங்கம் 377 சற்குண லிங்கம் 378 சஹான லிங்கம் 379 சற்குரு லிங்கம் 380 சாட்சி லிங்கம் 381 சாணக்ய லிங்கம் 382 சாதக லிங்கம் 383 சாதனை லிங்கம் 384 சாதி லிங்கம் 385 சாது லிங்கம் 386 சாந்த லிங்கம் 387 சாந்து லிங்கம் 388 சாம்ப லிங்கம் 389 சாமுண்டி லிங்கம் 390 சிகர லிங்கம் 391 சிகா லிங்கம் 392 சிகரி லிங்கம் 393 சிகை லிங்கம் 394 சிங்கார லிங்கம் 395 சிசு லிங்கம் 396 சித்தி லிங்கம் 397 சித்திரை லிங்கம் 398 சிந்தாமணிலிங்கம் 399 சிந்து லிங்கம் 400 சிநேக லிங்கம் 401 சிப்பி லிங்கம் 402 சிபி லிங்கம் 403 சிம்ம லிங்கம் 404 சிர லிங்கம் 405 சிரஞ்சீவி லிங்கம் 406 சிரபதி லிங்கம் 407 சிருஷ்டி லிங்கம் 408 சிலம்பு லிங்கம் 409 சிவ லிங்கம் 410 சிவகதி லிங்கம் 411 சிவாய லிங்கம் 412 சிற்பவ லிங்கம் 413 சினை லிங்கம் 414 சிஷ்ட லிங்கம் 415 சீதன லிங்கம் 416 சீதாரி லிங்கம் 417 சீமை லிங்கம் 418 சீர்மை லிங்கம் 419 சீற்ற லிங்கம் 420 சீனி லிங்கம் 421 சுக்கிர லிங்கம் 422 சுக லிங்கம் 423 சுகந்த லிங்கம் 424 சுகநிதி லிங்கம் 425 சுகுண லிங்கம் 426 சுடர் லிங்கம் 427 சுத்த லிங்கம் 428 சுதர்சண லிங்கம் 429 சுந்தர லிங்கம் 430 சுந்தரி லிங்கம் 431 சுப்பு லிங்கம் 432 சுமித்ர லிங்கம் 433 சுய லிங்கம் 434 சுயம்பு லிங்கம் 435 சுரபி லிங்கம் 436 சுருதி லிங்கம் 437 சுருளி லிங்கம் 438 சுரை லிங்கம் 439 சுவடி லிங்கம் 440 சுவடு லிங்கம் 441 சுவர்ண லிங்கம் 442 சுவாச லிங்கம் 443 சுவாதி லிங்கம் 444 சுனை லிங்கம் 445 சூட்சம லிங்கம் 446 சூர லிங்கம் 447 சூரி லிங்கம் 448 சூரிய லிங்கம் 449 சூல லிங்கம் 450 சூள்முடி லிங்கம் 451 சூளாமணி லிங்கம் 452 செக்கர் லிங்கம் 453 செங்கு லிங்கம் 454 செண்பக லிங்கம் 455 செந்தூர லிங்கம் 456 செம்ம லிங்கம் 457 செம்பாத லிங்கம் 458 செரு லிங்கம் 459 செருக்கு லிங்கம் 460 செல்வ லிங்கம் 461 செழுமை லிங்கம் 462 சேகர லிங்கம் 463 சேலிங்கம் 464 சேது லிங்கம் 465 சேர்ப்பு லிங்கம் 466 சேற்று லிங்கம் 467 சைல லிங்கம் 468 சைவ லிங்கம் 469 சொக்க லிங்கம் 470 சொப்பன லிங்கம் 471 சொர்க்க லிங்கம் 472 சொரூப லிங்கம் 473 சோம லிங்கம் 474 சோண லிங்கம் 475 சோபன லிங்கம் 476 சோலை லிங்கம் 477 சோழ லிங்கம் 478 சோழி லிங்கம் 479 சோற்று லிங்கம் 480 சௌந்தர்ய லிங்கம் 481 சௌந்தர லிங்கம் 482 ஞான லிங்கம் 483 தகழி லிங்கம் 484 தகு லிங்கம் 485 தங்க லிங்கம் 486 தச லிங்கம் 487 தட்சண லிங்கம் 488 தடாக லிங்கம் 489 தத்துவ லிங்கம் 490 தந்த லிங்கம் 491 தந்திர லிங்கம் 492 தமிழ் லிங்கம் 493 தர்பை லிங்கம் 494 தர்ம லிங்கம் 495 தருண லிங்கம் 496 தவ லிங்கம் 497 தளிர் லிங்கம் 498 தன லிங்கம் 499 தனி லிங்கம் 500 தவசி லிங்கம் 501 தாண்டக லிங்கம் 502 தாண்டவ லிங்கம் 503 தாமு லிங்கம் 504 தாய் லிங்கம் 505 தார லிங்கம் 506 தாழி லிங்கம் 507 தாழை லிங்கம் 508 தாள லிங்கம் 509 தான்ய லிங்கம் 510 தாரகை லிங்கம் 511 திக்கு லிங்கம் 512 திகம்பர லிங்கம் 513 திகழ் லிங்கம் 514 தியாக லிங்கம் 515 தியான லிங்கம் 516 திரி லிங்கம் 517 திரிபுர லிங்கம் 518 திரு லிங்கம் 519 திருமேனி லிங்கம் 520 திருவடி லிங்கம் 521 திருவாசக லிங்கம் 522 திருவாத லிங்கம் 523 திலக லிங்கம் 524 திவ்ய லிங்கம் 525 தீ லிங்கம் 526 தீட்சை லிங்கம் 527 தீர்க்க லிங்கம் 528 தீர்த்த லிங்கம் 529 தீப லிங்கம் 530 தீர லிங்கம் 531 தீர்ப்பு லிங்கம் 532 துதி லிங்கம் 533 துர்கை லிங்கம் 534 துருவ லிங்கம் 535 துலா லிங்கம் 536 துளசி லிங்கம் 537 துறவு லிங்கம் 538 தூங்கா லிங்கம் 539 தூண்டா லிங்கம் 540 தூமணி லிங்கம் 541 தூய லிங்கம் 542 தூளி லிங்கம் 543 தெங்கு லிங்கம் 544 தெய்வ லிங்கம் 545 தெரிவை லிங்கம் 546 தெளி லிங்கம் 547 தென்னவ லிங்கம் 548 தேக லிங்கம் 549 தேகனி லிங்கம் 550 தேகி லிங்கம் 551 தேச லிங்கம் 552 தேசு லிங்கம் 553 தேயு லிங்கம் 554 தேர லிங்கம் 555 தேவ லிங்கம் 556 தேவபத லிங்கம் 557 தேவாதி லிங்கம் 558 தேவு லிங்கம் 559 தேன் லிங்கம் 560 தேன்மணி லிங்கம் 561 தேன லிங்கம் 562 தேனுக லிங்கம் 563 தைரிய லிங்கம் 564 தொகை லிங்கம் 565 தொட்டி லிங்கம் 566 தொடி லிங்கம் 567 தொடைய லிங்கம் 568 தொண்டக லிங்கம் 569 தொண்டை லிங்கம் 570 தொல் லிங்கம் 571 தோகச லிங்கம் 572 தோண்டி லிங்கம் 573 தோணி லிங்கம் 574 தோத்திர லிங்கம் 575 தோரண லிங்கம் 576 தோரி லிங்கம் 577 தோழ லிங்கம் 578 தோன்ற லிங்கம் 579 தௌத லிங்கம் 580 தௌல லிங்கம் 581 நகமுக லிங்கம் 582 நகு லிங்கம் 583 நகை லிங்கம் 584 நங்கை லிங்கம் 585 நசை லிங்கம் 586 நஞ்சு லிங்கம் 587 நடன லிங்கம் 588 நடம்புரி லிங்கம் 589 நடு லிங்கம் 590 நதி லிங்கம் 591 நந்தி லிங்கம் 592 நம்பி லிங்கம் 593 நம லிங்கம் 594 நயன லிங்கம் 595 நர்மதை லிங்கம் 596 நலமிகு லிங்கம் 597 நவ லிங்கம் 598 நவமணி லிங்கம் 599 நவிர லிங்கம் 600 நற்குண லிங்கம் 601 நற்றுணை லிங்கம் 602 நறுமண லிங்கம் 603 நன்மணி லிங்கம் 604 நன்மை லிங்கம் 605 நனி லிங்கம் 606 நா லிங்கம் 607 நாக லிங்கம் 608 நாச்சி லிங்கம் 609 நாசி லிங்கம் 610 நாட லிங்கம் 611 நாடி லிங்கம் 612 நாத்திர லிங்கம் 613 நாத லிங்கம் 614 நாரண லிங்கம் 615 நாரணி லிங்கம் 616 நாரி லிங்கம் 617 நாபிச லிங்கம் 618 நாயன லிங்கம் 619 நாயாடி லிங்கம் 620 நாவ லிங்கம் 621 நாற்கர லிங்கம் 622 நான்மறை லிங்கம் 623 நான்முக லிங்கம் 624 நிகர் லிங்கம் 625 நித்தில லிங்கம் 626 நித்ய லிங்கம் 627 நிதர்சண லிங்கம் 628 நிதி லிங்கம் 629 நிபவ லிங்கம் 630 நிர்மல லிங்கம் 631 நிரஞ்சன லிங்கம் 632 நிரம்ப லிங்கம் 633 நிருதி லிங்கம் 634 நிமல லிங்கம் 635 நில லிங்கம் 636 நிலை லிங்கம் 637 நிவேத லிங்கம் 638 நிறை லிங்கம் 639 நிஜ லிங்கம் 640 நிசாக லிங்கம் 641 நீடு லிங்கம் 642 நீடுநீர் லிங்கம் 643 நீத்தவ லிங்கம் 644 நீதி லிங்கம் 645 நீர்ம லிங்கம் 646 நீரச லிங்கம் 647 நீரேறு லிங்கம் 648 நீல லிங்கம் 649 நீள்முடி லிங்கம் 650 நீறாடி லிங்கம் 651 நீறு லிங்கம் 652 நுதற் லிங்கம் 653 நுதி லிங்கம் 654 நூதன லிங்கம் 655 நெகிழ் லிங்கம் 656 நெஞ்சு லிங்கம் 657 நெட்ட லிங்கம் 658 நெடு லிங்கம் 659 நெய் லிங்கம் 660 நெற்றி லிங்கம் 661 நெறி லிங்கம் 662 நேச லிங்கம் 663 நேர் லிங்கம் 664 நைச்சி லிங்கம் 665 நைவேத்ய லிங்கம் 666 நொச்சி லிங்கம் 667 நோக்கு லிங்கம் 668 நோன்பு லிங்கம் 669 பசு லிங்கம் 670 பசுவ லிங்கம் 671 பசுபதி லிங்கம் 672 பஞ்ச லிங்கம் 673 பஞ்சாட்சர லிங்கம் 674 பட்டக லிங்கம் 675 படரி லிங்கம் 676 படிக லிங்கம் 677 பண்டார லிங்கம் 678 பண்டித லிங்கம் 679 பத்ம லிங்கம் 680 பத்ர லிங்கம் 681 பத்திர லிங்கம் 682 பதி லிங்கம் 683 பதிக லிங்கம் 684 பர்வத லிங்கம் 685 பரசு லிங்கம் 686 பரத லிங்கம் 687 பரம லிங்கம் 688 பரமாத்ம லிங்கம் 689 பரமேஸ்வர லிங்கம் 690 பரணி லிங்கம் 691 பரிதி லிங்கம் 692 பவண லிங்கம் 693 பவணி லிங்கம் 694 பவநந்தி லிங்கம் 695 பவழ லிங்கம் 696 பவாணி லிங்கம் 697 பவித்ர லிங்கம் 698 பளிங்கு லிங்கம் 699 பன்னக லிங்கம் 700 பனி லிங்கம் 701 பரகதி லிங்கம் 702 பராங்க லிங்கம் 703 பராபர லிங்கம் 704 பவநாச லிங்கம் 705 பா லிங்கம் 706 பாக்ய லிங்கம் 707 பாக லிங்கம் 708 பாச லிங்கம் 709 பாசறை லிங்கம் 710 பாசுர லிங்கம் 711 பாத லிங்கம் 712 பாதாள லிங்கம் 713 பாதி லிங்கம் 714 பாதிரி லிங்கம் 715 பார்வதி லிங்கம் 716 பாரதி லிங்கம் 717 பாராயண லிங்கம் 718 பாரி லிங்கம் 719 பாரிஜாத லிங்கம் 720 பாயிர லிங்கம் 721 பாலக லிங்கம் 723 பாலா லிங்கம் 723 பாவை லிங்கம் 724 பானு லிங்கம் 725 பாஷான லிங்கம் 726 பாகோட லிங்கம் 727 பாசுபத லிங்கம் 728 பாணிக லிங்கம் 729 பார்த்திப லிங்கம் 730 பாநேமி லிங்கம் 731 பாம்பு லிங்கம் 732 பாழி லிங்கம் 733 பிச்சி லிங்கம் 734 பிச்சை லிங்கம் 735 பிட்டு லிங்கம் 736 பிடரி லிங்கம் 737 பிடாரி லிங்கம் 738 பிடி லிங்கம் 739 பிண்ட லிங்கம் 740 பித்த லிங்கம் 741 பிதா லிங்கம் 742 பிம்ப லிங்கம் 743 பிரகதி லிங்கம் 744 பிரகாச லிங்கம் 745 பிரசன்ன லிங்கம் 746 பிரணவ லிங்கம் 747 பிரதர்சன லிங்கம் 748 பிரபாகர லிங்கம் 749 பிரபு லிங்கம் 750 பிரம்ம லிங்கம் 751 பிரம்பு லிங்கம் 752 பிரமிள லிங்கம் 753 பிராண லிங்கம் 754 பிராசித லிங்கம் 755 பிரிய லிங்கம் 756 பிரேம லிங்கம் 757 பிள்ளை லிங்கம் 758 பிழம்பு லிங்கம் 759 பிறவி லிங்கம் 760 பிறை லிங்கம் 761 பீச லிங்கம் 762 பீட லிங்கம் 763 பீடு லிங்கம் 764 பீத லிங்கம் 765 பீதகார லிங்கம் 766 பீதசார லிங்கம் 767 பீதமணி லிங்கம் 768 பீதாம்பர லிங்கம் 769 பீர லிங்கம் 770 பீம லிங்கம் 771 புகழ் லிங்கம் 772 புங்கவ லிங்கம் 773 புங்கவி லிங்கம் 774 புடக லிங்கம் 775 புண்ணிய லிங்கம் 776 புத்தி லிங்கம் 777 புத்ர லிங்கம் 778 புதிர் லிங்கம் 779 புது லிங்கம் 780 புரட்சி லிங்கம் 781 புரவு லிங்கம் 782 பராண லிங்கம் 783 புரி லிங்கம் 784 புருஷ லிங்கம் 785 புருவ லிங்கம் 786 புலரி லிங்கம் 787 புலி லிங்கம் 788 புவன லிங்கம் 789 புற்று லிங்கம் 790 புற லிங்கம் 791 புன்னை லிங்கம் 792 புனித லிங்கம் 793 புனை லிங்கம் 794 புஜங்க லிங்கம் 795 புஷ்கர லிங்கம் 796 புஷ்ப லிங்கம் 797 பூசனை லிங்கம் 798 பூத லிங்கம் 799 பூதர லிங்கம் 800 பூதி லிங்கம் 801 பூபதி லிங்கம் 802 பூபால லிங்கம் 803 பூதவணி லிங்கம் 804 பூர்ண லிங்கம் 805 பூர்த்தி லிங்கம் 806 பூர்வ லிங்கம் 807 பூரணி லிங்கம் 808 பூமித லிங்கம் 809 பூமுக லிங்கம் 810 பூவிழி லிங்கம் 811 பூலோக லிங்கம் 812 பூஜித லிங்கம் 813 பெண் லிங்கம் 814 பெண்பாக லிங்கம் 815 பெரு லிங்கம் 816 பேரின்ப லிங்கம் 817 பேழை லிங்கம் 818 பைரவி லிங்கம் 819பொன்னம்பலலிங்கம் 820 பொன்னி லிங்கம் 821 பொருந லிங்கம் 822 பொருப்பு லிங்கம் 823 பொழி லிங்கம் 824 பொய்கை லிங்கம் 825 போக லிங்கம் 826 போதக லிங்கம் 827 போதன லிங்கம் 828 போதி லிங்கம் 829 போற்றி லிங்கம் 830 போனக லிங்கம் 831 பௌதிக லிங்கம் 832பௌர்ணமி லிங்கம் 833 மகர லிங்கம் 834 மகவு லிங்கம் 835 மகா லிங்கம் 836 மகிழ லிங்கம் 837 மகுட லிங்கம் 838 மகுடி லிங்கம் 839 மகேச லிங்கம் 840 மகேஸ்வர லிங்கம் 841 மங்கள லிங்கம் 842 மஞ்சரி லிங்கம் 843 மஞ்சு லிங்கம் 844 மண லிங்கம் 845 மணி லிங்கம் 846 மதன லிங்கம் 847 மதி லிங்கம் 848 மந்தாரை லிங்கம் 849 மந்திர லிங்கம் 850 மயான லிங்கம் 851 மயூர லிங்கம் 852 மரகத லிங்கம் 853 மருக லிங்கம் 854 மருத லிங்கம் 855 மருது லிங்கம் 856 மலர் லிங்கம் 857 மழலை லிங்கம் 858 மவுலி லிங்கம் 859 மன்னாதி லிங்கம் 860 மனித லிங்கம் 861 மனோ லிங்கம் 862 மலை லிங்கம் 863 மாங்கல்ய லிங்கம் 864 மாசறு லிங்கம் 865 மாசி லிங்கம் 866 மாசிவ லிங்கம் 867 மாட்சி லிங்கம் 868 மாணிக்க லிங்கம் 869 மாதங்கி லிங்கம் 870 மாதவ லிங்கம் 871 மாதவி லிங்கம் 872 மாது லிங்கம் 873 மாதேவி லிங்கம் 874 மாமிச லிங்கம் 875 மாயை லிங்கம் 876 மாலை லிங்கம் 877 மார்க்க லிங்கம் 878 மிசை லிங்கம் 879 மிண்டை லிங்கம் 880 மீளி லிங்கம் 881 மீன லிங்கம் 882 முக்கனீ லிங்கம் 883 முக்தி லிங்கம் 884 முகுந்த லிங்கம் 885 முடி லிங்கம் 886 முத்து லிங்கம் 887 மும்மல லிங்கம் 888 முரசு லிங்கம் 889 முருக லிங்கம் 890 முல்லை லிங்கம் 891 முனி லிங்கம் 892 மூர்த்தி லிங்கம் 893 மூல லிங்கம் 894 மெய் லிங்கம் 895 மேக லிங்கம் 896 மேதினி லிங்கம் 897 மேவி லிங்கம் 898 மேனி லிங்கம் 899 மொழி லிங்கம் 900 மொட்டு லிங்கம் 901 மோட்ச லிங்கம் 902 மோன லிங்கம் 903 மோலி லிங்கம் 904 மௌன லிங்கம் 905 யதி லிங்கம் 906 யாக லிங்கம் 907 யாசக லிங்கம் 908 யாத்திரை லிங்கம் 909 யுக்தி லிங்கம் 910 யுவ லிங்கம் 911 யோக லிங்கம் 912 யோகி லிங்கம் 913 ரகசிய லிங்கம் 914 ரம்ய லிங்கம் 915 ரமண லிங்கம் 916 ரத்தின லிங்கம் 917 ரத லிங்கம் 918 ராக லிங்கம் 919 ராட்சச லிங்கம் 920 ராவண லிங்கம் 921 ராஜ லிங்கம் 922 ரிஷப லிங்கம் 923 ரிஷி லிங்கம் 924 ருத்ர லிங்கம் 925 ரூப லிங்கம் 926 ரௌத்திர லிங்கம் 927 லகரி லிங்கம் 928 லாவண்ய லிங்கம் 929 லீலா லிங்கம் 930 லோக லிங்கம் 931 வசந்த லிங்கம் 932 வஞ்சி லிங்கம் 933 வடுக லிங்கம் 934 வர்ம லிங்கம் 935 வர லிங்கம் 936 வருண லிங்கம் 937 வல்லப லிங்கம் 938 வழக்கு லிங்கம் 939 வள்ளுவ லிங்கம் 940 வளர் லிங்கம் 941 வன லிங்கம் 942 வனப்பு லிங்கம் 943 வஜ்ர லிங்கம் 944 வாகை லிங்கம் 945 வாசி லிங்கம் 946 வாணி லிங்கம் 947 வாயு லிங்கம் 948 வார்ப்பு லிங்கம் 949 வாழ்க லிங்கம் 950 வான லிங்கம் 951 வானாதி லிங்கம் 952 வார்சடை லிங்கம் 953 விக்ர லிங்கம் 954 விக்ரம லிங்கம் 955 விகட லிங்கம் 956 விகார லிங்கம் 957 விகிர்த லிங்கம் 958 வசித்ர லிங்கம் 959 விடங்க லிங்கம் 960 வித்தக லிங்கம் 961 விதி லிங்கம் 962 விது லிங்கம் 963 விந்தை லிங்கம் 964 விநாசக லிங்கம் 965 விபீஷ்ண லிங்கம் 966 விபூதி லிங்கம் 967 விமல லிங்கம் 968 வியூக லிங்கம் 969 விருட்சக லிங்கம் 970 வில்வ லிங்கம் 971 விளம்பி லிங்கம் 972 விழி லிங்கம் 973 வினைதீர் லிங்கம் 974 வினோத லிங்கம் 975 விஜய லிங்கம் 976 விஷ்ணு லிங்கம் 977 விஸ்வ லிங்கம் 978 விஸ்வேஸ்வரலிங்கம் 979 வீர லிங்கம் 980 வீணை லிங்கம் 981 வெற்றி லிங்கம் 982 வெற்பு லிங்கம் 983 வெள்ளி லிங்கம் 984 வேங்கட லிங்கம் 985 வேங்கை லிங்கம் 986 வேட்டுவ லிங்கம் 987 வேத லிங்கம் 988 வேதாந்த லிங்கம் 989 வேம்பு லிங்கம் 990 வேழ லிங்கம் 991 வேள்வி லிங்கம் 992 வைகை லிங்கம் 993 வைர லிங்கம் 994 வைத்திய லிங்கம் 995 வைய லிங்கம் 996 ஜடா லிங்கம் 997 ஜதி லிங்கம் 998 ஜல லிங்கம் 999 ஜீவ லிங்கம் 1000 ஜெக லிங்கம் 1001 ஜெய லிங்கம் 1002 ஜென்ம லிங்கம் 1003 ஜோதி லிங்கம் 1004 ஸ்ரீ லிங்கம் 1005 ஸோபித லிங்கம் 1006 ஹேம லிங்கம் 1007 ஐஸ்வர்ய லிங்கம் 1008 சுப லிங்கம்🙏💐🙏
ராம்
ராம்
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் #மஹாலிங்கேஸ்வரர் கோவில், #திருவிடைமருதூர்
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் #மஹாலிங்கேஸ்வரர் கோவில், #திருவிடைமருதூர்
பாடல் பெற்ற தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 30-வது தலமாக இருப்பது திருவிடைமருதூர். இது ஒரு சிறந்த பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம். முன் பிறவியில் ஆலயத்தை இடித்தல், சாமி சிலையை திருடுதல் பொன்ற பாவச் செயல்களை செய்தவர்கள், இப்பிறவியில் அந்தணர் ஒருவரை கொல்லுதல், பெண்ணிடம் ஆசை காட்டி அவளை மணம் செய்துகொள்கிறேன் என்ற பொய் சொல்லி அவளுடன் கூடி இருந்துவிட்டு பின்பு அப்பெண்ணை ஏமாற்றுதல், அல்லது இதற்கு சமமான பாவங்களை செய்தாலோ, ஜாதக ரீதியாக ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்திருந்தாலோ ஒருவருக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.
இத்தகைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கி, நிவாரணம் பெறவும், உரிய பரிகாரம் செய்துகொள்ளவும் சிறந்த தலம் திருவிடைமருதூர்.
இறைவன் பெயர்: மஹாலிங்கேஸ்வரர்
இறைவி பெயர்: பிருஹத் சுந்தரகுசாம்பிகை, நன்முலைநாயகி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் 5, திருஞானசம்பந்தர் பதிகம் 5, சுந்தரர் பதிகம் 1 என, மொத்தம் 11 பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு மஹாலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திருவிடைமருதூர்,
திருவிடைமருதூர் அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம் – 612 104.
இவ்வாலயம், தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை - 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.
தலத்தின் சிறப்பு
திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை, வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில், அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்துகொண்டிருக்கும்போது வழியில், உறங்கிக்கொண்டிருந்த ஒரு அந்தணன், குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும், ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அத்துடன், அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.
சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன், மதுரை சோமசுந்தரரை வணங்கி இவற்றில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரரும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த அரசனுக்கு, தன் நாட்டின் மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன், சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்தொடர்ந்து கோவிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன.
ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டிய நாடு திரும்பினான். இதை நினைவுகூரும் வகையில், இன்றளவும் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இன்றும் அக்கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் பிரம்மஹத்தியை, நாம் கிழக்கு கோபுர வாயில் உள்ளே நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் இடதுபுறம் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதைக் காணலாம். மன்னர் சென்ற வழியில் மீண்டும் திரும்பி வருவார். அவரை மீண்டும் பிடித்துக்கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி அமர்ந்துள்ளது என்பது ஐதீகம்.
திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலம் வடமருதூர்; தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூர். இவை இரண்டுக்கும் இடையே உள்ள இத்தலம் இடைமருதூர் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர்.
நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் இவ்வாலயம், மத்யார்ஜுனம் என்று வழங்கப்படுகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புகளாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்தவகையில், இந்தத் திருவிடைமருதூர், இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புகள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும், நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால், இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்துக்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து, மேகராகக்குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களை பாராயணம் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.
இக்கோவில் மூன்று பிராகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிராகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
1. அஸ்வமேதப் பிராகாரம்
இது வெளிப் பிராகாரமாகும். இந்தப் பிராகாரத்தில் கோவிலை வலம் வருதல், அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.
2. கொடுமுடிப் பிராகாரம்
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிராகாரமாகும். இப்பிராகாரத்தை வலம் வருதல், சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
3. ப்ரணவப் பிராகாரம்
இது மூன்றாவதாகவும், உள்ளே இருக்கக்கூடியதுமான பிராகாரமாகும். இப்பிராகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள், திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை –
திருவலஞ்சுழி - விநாயகர்
சுவாமிமலை - முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)
திருவாரூர் - சோமஸ்கந்தர்
சிதம்பரம் - நடராஜர்
ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி
திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்
திருசேய்நல்லூர் - சண்டிகேஸ்வரர்
சீர்காழி - பைரவர்
சூரியனார்கோவில் - நவக்கிரகம்
இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர், தன்னைத்தானே அர்ச்சித்துக்கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்குப் போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாசுரனை கொன்ற பாவம் நீங்க மூகாம்பிகை இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டாள். மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில், பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் தனிச் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீர்த்தச் சிறப்பு
கோயில்கள் பலவற்றுள்ளும், இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில், அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவற்றில், ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே, கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.
இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்துபோனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முக்தி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.
பிரமஹத்தி தோஷம், மற்றும் பல தோஷங்களை தீர்க்கும் தலமாக விளங்கும் திருவிடைமருதூர் தலத்துக்குச் சென்று மஹாலிங்கேஸ்ரரை ஒருமுறை வழிபட்டு வாருங்கள். பிறப்பால் அந்தணனான ராவணனை வதம் செய்ததால் ஶ்ரீராமரும் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு அதனின்று விடுபட, தேவிபட்டிணத்தில் கடலில் நவக்கிகரகங்களை ஸ்தாபித்து வழிபட்டார் என்றால், இந்த தோஷத்தின் பாதிப்பு பற்றி புரிந்துகொள்ளலாம். நாமும் பிரம்மஹத்தி தோஷம் விலக திருவிடைமருதூர் சென்று பரிகாரங்கள் செய்து வாழ்க்கையில் நன்மை அடைவோம்.
பாடல் பெற்ற தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 30-வது தலமாக இருப்பது திருவிடைமருதூர். இது ஒரு சிறந்த பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம். முன் பிறவியில் ஆலயத்தை இடித்தல், சாமி சிலையை திருடுதல் பொன்ற பாவச் செயல்களை செய்தவர்கள், இப்பிறவியில் அந்தணர் ஒருவரை கொல்லுதல், பெண்ணிடம் ஆசை காட்டி அவளை மணம் செய்துகொள்கிறேன் என்ற பொய் சொல்லி அவளுடன் கூடி இருந்துவிட்டு பின்பு அப்பெண்ணை ஏமாற்றுதல், அல்லது இதற்கு சமமான பாவங்களை செய்தாலோ, ஜாதக ரீதியாக ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்திருந்தாலோ ஒருவருக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.
இத்தகைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கி, நிவாரணம் பெறவும், உரிய பரிகாரம் செய்துகொள்ளவும் சிறந்த தலம் திருவிடைமருதூர்.
இறைவன் பெயர்: மஹாலிங்கேஸ்வரர்
இறைவி பெயர்: பிருஹத் சுந்தரகுசாம்பிகை, நன்முலைநாயகி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் 5, திருஞானசம்பந்தர் பதிகம் 5, சுந்தரர் பதிகம் 1 என, மொத்தம் 11 பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு மஹாலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திருவிடைமருதூர்,
திருவிடைமருதூர் அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம் – 612 104.
இவ்வாலயம், தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை - 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.
தலத்தின் சிறப்பு
திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை, வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில், அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்துகொண்டிருக்கும்போது வழியில், உறங்கிக்கொண்டிருந்த ஒரு அந்தணன், குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும், ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அத்துடன், அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.
சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன், மதுரை சோமசுந்தரரை வணங்கி இவற்றில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரரும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த அரசனுக்கு, தன் நாட்டின் மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன், சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்தொடர்ந்து கோவிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன.
ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டிய நாடு திரும்பினான். இதை நினைவுகூரும் வகையில், இன்றளவும் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இன்றும் அக்கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் பிரம்மஹத்தியை, நாம் கிழக்கு கோபுர வாயில் உள்ளே நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் இடதுபுறம் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதைக் காணலாம். மன்னர் சென்ற வழியில் மீண்டும் திரும்பி வருவார். அவரை மீண்டும் பிடித்துக்கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி அமர்ந்துள்ளது என்பது ஐதீகம்.
திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலம் வடமருதூர்; தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூர். இவை இரண்டுக்கும் இடையே உள்ள இத்தலம் இடைமருதூர் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர்.
நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் இவ்வாலயம், மத்யார்ஜுனம் என்று வழங்கப்படுகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புகளாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்தவகையில், இந்தத் திருவிடைமருதூர், இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புகள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும், நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால், இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்துக்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து, மேகராகக்குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களை பாராயணம் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.
இக்கோவில் மூன்று பிராகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிராகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
1. அஸ்வமேதப் பிராகாரம்
இது வெளிப் பிராகாரமாகும். இந்தப் பிராகாரத்தில் கோவிலை வலம் வருதல், அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.
2. கொடுமுடிப் பிராகாரம்
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிராகாரமாகும். இப்பிராகாரத்தை வலம் வருதல், சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
3. ப்ரணவப் பிராகாரம்
இது மூன்றாவதாகவும், உள்ளே இருக்கக்கூடியதுமான பிராகாரமாகும். இப்பிராகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள், திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை –
திருவலஞ்சுழி - விநாயகர்
சுவாமிமலை - முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)
திருவாரூர் - சோமஸ்கந்தர்
சிதம்பரம் - நடராஜர்
ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி
திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்
திருசேய்நல்லூர் - சண்டிகேஸ்வரர்
சீர்காழி - பைரவர்
சூரியனார்கோவில் - நவக்கிரகம்
இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர், தன்னைத்தானே அர்ச்சித்துக்கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்குப் போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாசுரனை கொன்ற பாவம் நீங்க மூகாம்பிகை இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டாள். மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில், பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் தனிச் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீர்த்தச் சிறப்பு
கோயில்கள் பலவற்றுள்ளும், இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில், அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவற்றில், ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே, கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.
இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்துபோனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முக்தி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.
பிரமஹத்தி தோஷம், மற்றும் பல தோஷங்களை தீர்க்கும் தலமாக விளங்கும் திருவிடைமருதூர் தலத்துக்குச் சென்று மஹாலிங்கேஸ்ரரை ஒருமுறை வழிபட்டு வாருங்கள். பிறப்பால் அந்தணனான ராவணனை வதம் செய்ததால் ஶ்ரீராமரும் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு அதனின்று விடுபட, தேவிபட்டிணத்தில் கடலில் நவக்கிகரகங்களை ஸ்தாபித்து வழிபட்டார் என்றால், இந்த தோஷத்தின் பாதிப்பு பற்றி புரிந்துகொள்ளலாம். நாமும் பிரம்மஹத்தி தோஷம் விலக திருவிடைமருதூர் சென்று பரிகாரங்கள் செய்து வாழ்க்கையில் நன்மை அடைவோம்.
Friday, 8 December 2017
செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் ஏன் பணம் கொடுக்கக் கூடாது ?
செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் ஏன் பணம் கொடுக்கக் கூடாது
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பதற்கான அர்த்தம் ...
செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது.
இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.
இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.
எனவே முடிந்தளவு, அதற்க்கு முந்தைய நாளோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ செலவை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பணப்பற்றாக்குறையினை தவிர்க்கலாம் என்பது நம்பிக்கை.
தசாபுத்தி பலன்கள்
லக்கினாதிபன் தசை /புத்தி
லக்கினாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் உடல் நலமும் பிரகாசமும் மகிழ்ச்சியும் உண்டாகும் மனத்திற்கு உற்காக மளிக்கத்தக்க நன்மைகளும் சுபகாரியங்களும் நடைபெறும், புகழும் பெருமையும் உண்டாகும் நினைத்த காரியங்கள் நன்மை பெறும் லக்கினாதிபனுடைய பலத்திற்குத் தகுந்தபடி செல்வமும், வசதியும் உடைய வாழ்க்கை அமையும்.
லக்கினாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் யோகம் உண்டாகும். குடும்ப சுகம் பெருகும் நல்வாக்கும், கௌரவமும் வாக்கினால் இலாபங்களும் உண்டாகும்.
லக்கினாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதரர்களால் நன்மையும் தனக்கு வேண்டிய காரியங்களை செய்வதற்குத் தக்க துணைவர்கள் மற்றும் உதவியாட்கள் தாமாகவே உண்டாவதும் தமது மனோ தைரியத்தால் வெற்றியும் புகழும் அமைவதும் யோக சுகத்தில் லயிப்பும் சகோரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.
லக்கினாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாயால் அல்லது மாமன் வர்க்கத்தாரால் நன்மைகளும் வித்தையும் வீடுவாகனங்கள் சேர்வதும் அவற்றால் இலாபங்கள் உண்டாவதும் தன் சகோதரர்களுக்குப் பொருள் இலாபங்கள் ஏற்பட்டு அதனால் தானும் லாபங்கள் அடைதலும் வியாபார விருத்தியும் தொடர்ந்து மேன்மைகளும் உண்டாகும்.
லக்கினாதிபன் ஐந்தாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திரர்களால் லாபங்களும் தன் புத்தியாலும் வித்தைகளாலும் மேலான புகழ் இவற்றை அடைவதும் மற்றும் உபதேசம் பெறுவது வீடு வாகனங்களால் லாபங்கள் உண்டாவதும் ஆகும். லக்கினாதிபன் ஐந்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தசை ஆரம்பத்தில் புத்திரசோகம் ஏற்படும் என்பது சிலர் கருத்து.
லக்கினாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அக்காலத்தில் பகை, வம்புகுகள், கடன்கள் நோய்கள் முதலியவற்றால் பலவிதமான கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும். மனைவியை இழக்க நேரிடும். தன் மக்களின் சம்பாத்தியத்தால் வாழ்க்கை நடத்த நேரிடும் தாயாதிகளால் குடும்ப சிக்கல்கள் பாகப் பிரிவினை போன்ற தொல்லைகளும் உண்டாகும். கோயில் சொத்துக்களை அனுபவிக்கவும் அவ்வழியாகவே நஷ்டங்களை அடையவும் நேரிடும்.
லக்கினாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் திருமணம் மகப்பேறு போன்ற நன்மைகள் உண்டாகும் அல்லது தன் மகளுக்கு மணம் செய்து கொடுத்து பேரப்பிள்ளைகளை அடைவதும் கூடும். கூட்டு வியாபாரம் அமையும். வழக்குகளில் வெற்றி பெற்று தன் பகைவரின் சொத்துக்களை அடையவும் கூடும் பிராயணங்களால் இலாபங்கள் உண்டாகும்.
லக்கினாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மரண பயம் அல்லது அதற்குச் சமமான கண்டங்கள் உண்டாகும். கடனால் அவமானங்கள் ஏற்படும். திருடர்களுடன் சம்பந்தம் எற்படும். அதனால் சிறை தண்டனைகள் அனுபவிக்கும் படியாகவும் நேரலாம். பலவிதமான கஷ்ட நஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும்.
லக்கினாதிபன் ஒன்பதாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவியால் பாக்கிய விருத்தியும் சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். சகல விதங்களிலும் மேலான சுகங்கள் நிறைந்த வாழ்க்கை உண்டாகம் தன் சகோதரனுக்கும் நன்மை உண்டாகும்.
லக்கினாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேன்மை வியாபார விருத்தி தன் பெயர் நாலாதிசைகளிலும் பரவுதல், அந்நிய நாடுகளிலும் வியாபாரத் தொடர்புகள் ஏற்படல், வியாபார நிமித்தமாகவும் தீர்த்தயாத்திரை ஸ்தல தரிசனம் போன்ற காரியங்களுக்காவும் பிரயாணங்கள் முதலியவை ஏற்படும்.
லக்கினாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதங்களிலும் பொருள் லாபம் ஏற்படும். தன் மூத்த சகோதரர்ருக்கு லாபங்கள் சுகபாக்கிய விருத்திகளும் உண்டாகும். தன் பிள்ளைகளுக்கு திருமண பாக்கியம் மகப்பேறு முதலியன உண்டாகும். பெண் தொடர்பு ஏற்படும், தாய்க்கு மரணம் ஏற்படும்.
லக்கினாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சொத்துக்களை துறந்து பற்றற்ற வாழ்க்கையும் மோட்ச மார்க்கத்தில் மனம் செல்வதும் மந்திர வித்தைகள் இரகசியமான விஷயங்கள் மற்றும் பிறவிக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் அறிய முற்படுதலும் போன்ற பலன்கள் உண்டாகும். பக்தி சிரத்தை அதிகமாகும். லக்கினாதிபன் கெட்டுப்போயிருந்தால் கஞ்சத்தனமும் பெரும் சூது, கபடத்தனம் முதலானவற்றின் மூலம் பணம் சேர்க்க முயற்சியும் அதனால் சில தோல்விகளும் நஷ்டங்களும் அன்னியர் மனைவியின் சேர்க்கையும் அதனால் அவமானம் பொருட்செலவுகளும் உண்டாகும்.
மேற்படி பலன்களை மற்ற திசைகளில் லக்கினாதிபனுடைய புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்துத் பலன் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கிரகத்திற்கு இரண்டு ஆதிபத்தியம் ஏற்பட்டால் அந்த இரண்டில் எந்த வீட்டில் அமைந்துள்ளதோ அதற்குரிய பலனையே விசேஷமாக செய்யும் அப்படித் தன் சொந்த வீடுகளில் ஒன்றியிருக்காமல் வேறு வீடுகளில் இருக்கும்போது லக்கினத்தை எண்ணும்போது முதலாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை தன் திசை அல்லது புத்தி நடைபெறும் காலத்தில் பாதிவரையிலும் நடத்திப் பிறகு இரண்டாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை நடத்துவார். லக்கினாதிபன் அஷ்டமாதிபதியாகவும் ஆகும் பொழுது (மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், துலாலக்கனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்) தன் திசையின் பிற்பகுதியிலும் லக்கினாதிபனுக்குரிய யோக பலன்களை நடத்துவர்.
இரண்டாமாதிபன் தசை/புத்தி
இரண்டாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பண விஷயங்களிலேயே அதிகமான கவனமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் பிறர் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தை விருத்தி செய்து மேலான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பலமான முயற்சிகள் எடுத்துக்கொள்வது. அதனால் நன்மைகளும் உண்டாகும். பிறர் காரியங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதாவது மைனர் சொத்துக்களுக்கு கார்டியன் ஆகுதல் அல்லது மற்றவர்களுடைய பண்ணைகள் எஸ்டேட்டுகள் போன்றவற்றை நிர்வாகம் செய்வது போன்ற பொறுப்புகள் உண்டாகும்.
இரண்டாமாதிபன் இரண்டில் இருந்து திசை நடைபெற்றால் பலவிதமான தனலாபங்களும் இரண்டு அல்லது மூன்று செயல்பாடுகளை மேற்கொள்வதும், குடும்பங்கள் உண்டாவதும் தன் வாக்கினால் தொல்லை உண்டாவதும் ஏற்படும்.
இரண்டாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியரின் சொத்துக்கள் மனைவியர் முதலான அனுபவித்தலும் தெய்வ நிந்தை செய்வதும் சகோதரர்களுக்கு பொருட் செலவும் மற்றும் ஜாதகருக்கு தைரிய குறைவும் உண்டாகும். மேற்படி இரண்டாமாதிபன் சுபனாக இருந்தால் அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பொது நன்மைக்காக பாடுபடுவார். இரண்டாமாதிபன் செவ்வாயாக இருந்து மூன்றாம் இடத்தில் பாவரோடு சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டு இருந்தால் தைரியமிக்க கொள்ளைக்காரனாவான்.
இரண்டாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஆசிரியத் தொழில் அல்லது வாகனத் தொழில் மூலம் தன லாபங்கள் உண்டாகும். தாயாரின் சொத்தை அடைவான். குடும்ப சுகமும் நன்மைகளும் உண்டாகும். தன் சகோரர்களை ஆதரிக்க வேண்டியதாக அல்லது அவர்களுக்காகச் செலவு செய்ய வேண்டியதாக ஏற்படும்.
இரண்டாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்தி லாபம், வீட்டிலிருந்தே தொழில் நடத்தி அமோகமான சம்பாத்தியம் அடைதல், லாட்டரி பந்தயம் போன்றவற்றில் வெற்றிகள், தன் காலத்திலேயே தன் பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுதிவைத்தல் அல்லது அவர்களை மேலான நிலைமைக்கு கொண்டு வருதல் போன்ற பலன்கள் ஏற்படும்.
இரண்டாமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் கடனாளியாக இருப்பதும் கடன்களால் தொல்லைகளும் வழக்குகளும் உண்டாவதும் தாய் மாமனால் சகாயமும் உண்டாகும். பகைவரால் பொருட் சேதமும் நஷ்டங்களும் உண்டாகும். முழங்கால்கள் தொடைகளில் வாத ரோகங்கள் அல்லது வேறு விதமான நோய்களும் உண்டாகும்.
இரண்டாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அந்நியரால் தன லாபங்களும் மனைவியால் சம்பாத்தியமும் உண்டாகும். வைத்தியத் தொழிலில் அல்லது வியாபாரப்பிரதிநிதிப் போன்ற உத்தியோகங்களில் பிரயாணம் செய்வதன் மூலமாக சம்பாத்தியம் ஏற்படும். மனைவிக்கும் தாய்க்கும் அபவாதங்கள் உண்டாகும்.
இரண்டாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் வீடு வாசல் முதலான சொத்துக்கள் நஷ்டமும் தரித்திர வாழ்க்கையும் வெறும் வாய் சாமர்த்தியத்தாலேயே பிழைக்க நேர்வதும், குடும்ப சுகம் கெடுவதும், பின் சகோதரர்களுக்குப் பொருள் விரயமும் கஷ்டங்களும் உண்டாகும்.
இரண்டாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான வழிகளிலும் தனலாபங்களும் சுகசௌக்கியங்களும் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் விருத்தியாகும். தன் சகோதரர்களுக்கு உதவியும் நன்மையும் செய்ய நேரிடும்.
இரண்டாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் அமோகமான தனலாபங்களும் புது சொத்துக்களில் நிர்வாகம் தன் கைக்கு வருவதும் அதிகமான காம வேட்கையும் அதன் காரணமாக செலவுகளும் ஒன்றிரண்டு புத்திர சோகங்களும் உண்டாகும். புத்திர பாக்கியம் குறைவு என்றும் சொல்வார்கள்.
இரண்டாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் முதல் இல்லாமலேயே வியாபாரம் நடத்தி அதிகமான இலாபங்களை அடைவதும், பந்தய சூதாட்ட வியாபாரங்கள், பணத்தை வட்டிக்கு விடல் போன்றவற்றில் அதிகமான இலாபங்களும், தன் வாக்கினாலேயே லாபம் அடையும்படியான எழுத்து பேச்சுத் துறைகளால் அதிகமான செல்வப்பெருக்கும் உன்னதமான நிலைமையும் உண்டாகும்.
இரண்டாமாதிபன் பனிரெண்டில் இருந்து தசை /புத்தி நடத்தினால் செல்வம் யாவற்றையும் இழந்து தேசாந்திரம் போக நேர்வதும் அந்நியரின் பராமரிப்பில் இருப்பதும் அல்லது சிறையில் இருக்க நேர்வதும் தன் மூத்த மகனுக்கு நோயின் கஷ்டங்களும் உண்டாகும்.
மேற்படி பலன்களை மற்ற திசைகளில் இரண்டாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்து பலன்களை அறியவும்.
மூன்றாமாதிபன் தசை/புத்தி
மூன்றாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஆரம்பகாலத்தில் மற்றவர்களை அண்டி தொழில் செய்து அல்லது மற்றவர்களிடம் உத்தியோகம் பார்த்து ஜீவனம் செய்து பிறகு தன் சொந்த முயற்சியாலும் மனோதைரியத்தாலும் படிப்படியாக உயர்ந்து மேல் நிலைக்கு வரமுடியும் தனக்கு எப்பொழுதும் யாராவது சகாயம் செய்ய முன் வருவார்கள் மூர்க்கத்தனமான காரியங்களில் பிரவேசமும், அதனால் கஷ்டங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சியின்றி இருப்பதும் அன்னியருக்கு பாரமாக ஜீவனம் நடத்துவதும் அன்னியர் சொத்துக்களின் மேல் ஆசையும் நண்பர்கள் சகோதரர்களுக்கு வேண்டாதவனாக இருக்கும் நிலைமையும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் கோழைத்தனமும் ரோகங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனோதைரியமும் எவரையும் வசப்படுத்திவிடும் தன்மையும் எங்கும் தனக்கு நண்பர்களையும் உதவிசெய்பவர்களையும் உண்டாக்கி கொள்ளும் தன்மையும் பகைவர்களை சுலபமாக வெற்றி கொள்வதும் பின் சகோதரர்களுக்கு மேன்மையும் அதிகமான சந்ததிகள் உண்டாவதும் ஆன மேலான பலன்கள் உண்டாகும்.
மூன்றாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சகோதரர்களுக்கு மேன்மையும் தனக்கு வசதிகள் சுபங்கள் குறைவும் எப்பொழுதும் தான் மற்றவர்களுக்காகத் தன் சுகவசதிகளை விட்டுக் கொடுத்து அவர்களுக்காக அலைய நேர்வதும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் கஷ்டங்களும் அவளால் சுகக்குறைவும் தன் பிள்ளைகளுக்கு மேன்மையும் சகோதரர்களுக்கு நன்மைகளும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஆறாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் குடும்ப கலகமும், சகோதரர்களுடன் விரோதமும் தன் பிள்ளைகளுக்குச் சம்பாத்தியம் ஏற்படுதலும் தன் வயதிலும் மூத்த பெண்களிடம் தகாத இச்சை உண்டாதலும் அன்னியர் உடைமைகள் தன் வசமாதலும் மாமன் வர்க்கத்தார்க்கு உடல் நலக்குறைவும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அரசாங்க விரோதம், பொதுஜனப்பகை, திருடனாக அல்லது அன்னிய ஸ்திரீகளிடம் தொடர்பு உடையவனாக வாழ்க்கை நடத்தல் பலவிதமான கஷ்டங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதர நஷ்டமும் தனக்கொரு உதவி இல்லாமல் திக்கில்லாமல் அலைதலும் கொடூர பாவ செயல்களில் விருப்பமும் அன்னியரால் அல்லது அரசாங்கத்தால் தண்டனைகளை அனுபவிப்பதும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்த தசை /புத்தி நடத்தினால் சகோதரர்களுக்கு பாக்கிய விரத்தியும் தனக்கு மனைவியால் மேன்மை உண்டாவதும் தகப்பனுக்குக் கஷ்டங்களும் கெட்டப் பெயரும் பிதுர்ரார்ஜித சொத்துக்கள் விரயமும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் தொல்லைகளும் மற்றவர் சகாயத்தால் தொழிலில் மேன்மை அடைவதும் பிறர் சொத்துக்களும் தன் வசமாதலும் அன்னியப் பெண் ஒருத்தியின் தொடர்பு உண்டாவதுமான பலன்கள் நடைபெறும்.
மூன்றாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தன லாபங்களும் எப்பொழுதும் காமவேட்கையும் அதனால் பொருட் செலவும் உடல் நலக்குறைவும் உண்டாகும், அன்னியரிடம் வேலை செய்வதால் அல்லது அன்னியரால் தன லாபங்கள் உண்டாகும்.
மூனறாமாதிபன் பனிரெட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் கெட்ட வழிகளில் சம்பாத்தியமும் பெண்களால் லாபங்களும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையும் தந்தைக்குத் திருட்டு பட்டம் அல்லது கெட்டப் பெயரும் உண்டாகும்.
மேற்படி பலன்களை மற்ற திசைகளில் மூன்றாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்து பலன் அறிந்து கொள்ள வேண்டும்.
நான்காமாதிபன் தசை/புத்தி
நான்காமாதிபன் லக்கினத்தில் தசை /புத்தி நடத்தினால் உயர்ந்த கல்வியை அடைவதும் தாயால் சுகமும் எப்பொழுதும் சொந்த வீடு வாகனம் முதலான வசதிகள் உடைய வாழ்க்கை உண்டாவது, தன்னுடைய கல்வி செல்வம் முதலானவற்றை விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அடக்கமாகப் போகும் சுபாவமும் உண்டாகும்.
நான்காமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் நிலம் வீடு வாகனங்கள் முதலானவற்றிலிருந்து வருமானங்களும் தான் கற்ற வித்தையால் நல்ல சம்பாத்தியமும் உண்டாகும். ஆசை நாயகிகள் ஏற்படுவர் கெட்ட சகவாசங்களும் உண்டாகும். சகல வசதிகளும் உடைய வாழ்க்கை அமையும்.
நான்காமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சகோதரர்களுக்கு சுகபாக்கியங்கள் விருத்தியாகும். செல்வமும் வசதிகளும் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும்.
நான்காமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மேலான கல்வியும் ஞானமும் புத்தியும் உண்டாகும். மந்திரி பதவி போன்ற பெரிய பதவிகள் உண்டாகும். பலவிதமான சுகங்களும் சௌக்கியங்களும் உண்டாகும் உற்றார் உறவினர், சகோகரர்கள் பந்துக்கள் புடை சூழ எல்லோருக்கும் இனியவனாக வாழ்க்கை நடத்துவான்.
நான்காமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மிகவும் மேலான வாழ்க்கையே உண்டாகும் பக்தியும் மேலான விஷயங்களில் ஈடுபாடும் சொந்த சம்பாத்தியங்களால் மேன்மையும் உண்டாகும்.
நான்காமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பகைவர்களால் சுபக்குறைவும் தன் வீடு முதலான சொத்துக்கள் அன்னியர்களால் அபகரிக்கப்படுதலும் தன் தாயே தன் விரோதமாதலும் திருட்டுத்தனம் போன்ற கெட்ட காரியங்களில் பிரவேசமும் பில்லி சூனியம் போன்றவைகளால் கஷ்டங்களும் உபாதைகளும் உண்டாவதுமாகும்.
நான்காமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் மனைவியால் சுகபாக்கியங்கள் அடைய நேரிடும். மாமனார் வீட்டு மாப்பிள்ளையாக ஆகிவிடுவதும் உண்டு. மற்றவர் முன்னிலையில் ஊமைப்போல் இருக்கும்படியான நடத்தையும் ஏற்படும். வித்தை வாகனம், புகழ் எல்லா வசதிகளம் உண்டாகும்.
நான்காமாதிபன் எட்டாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஏதாவத ஒரு முயற்சியில் சுகங்களைத் தியாகம் செய்து வாழ நேரிடும். பெரிய விஞ்ஞானிகள், புதுமைகளைக் கண்டு பிடிப்பவர்கள் யாத்ரீகர்கள் மலை ஏறிகள் ஞானிகள் முதலியவர்களின் ஜாதகங்களில் இப்படிப்பட்ட கிரக அமைப்பு ஏற்படுவதுண்டு.
நான்காமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பித்ரு பாக்கியத்தினால் சுகபாக்கியங்களை அடைவதும் கல்வி மேன்மையும் வாகனசுகமும், தந்தையின் தொழில் அல்லது அவரால் ஸ்தாபிக்கப்பட்ட வியாபார ஸ்தாபனத்தால் மேன்மையும் சகல சுகங்களும் உண்டாகும். டாக்ஸி, பஸ் தொழில்கள் மேன்மையடையும்.
நான்காமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேன்மையால் சுகபாக்கியங்களை அடைவான். தன் சொந்த முயற்சியால் ஒரு தொழிலை ஸ்தாபித்து பிரபலமாக மேன்மைக்கு கொண்டு வர முடியும் தீர்த்த யாத்திரை ஸ்தலதரிசனம் போன்ற புண்ணிய லாபங்களும் ஏற்படும்.
நான்காமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சி இன்றியே சகல சுகபோகங்களும் வந்தடைவதும் பொழுது போக்காக செய்யும் தொழில்களாலும் நல்ல லாபங்களும் ஆயினும் மனதில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருப்பினும் இளமையிலேயே தாயை இழந்து விட நேர்வதும் உண்டு.
நான்காமாதிபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எப்போதும் நோயாளியாக இருப்பான். தன் சொந்த முயற்சியில் சுயராஜ்ஜித சொத்துக்களைச் சம்பாத்திப்பான் பலவித தான தர்மங்களைச் செய்து புகழடைவான். எவ்வளவு சம்பாதித்த போதிலும் தான் ஒரு சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் மனக்குறையுடன் இருக்கும்படி நேரிடும்.
ஐந்தாமாதிபன் தசை/புத்தி
ஐந்தாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சொந்த முயற்சியாலும் தாயாதிகள் ஆதரவாலும் முன்னுக்கு வருவான் இரகசியங்களை அறியக்கூடிய சாமர்த்தியமும் திறமையும் உண்டாவதால் சோதிடம் மாந்திரீகம் போன்றவற்றில் திறமையும் புகழும் ஏற்படும். சூரியன் அல்லது புதனாக இருந்தால் துப்பறியும் வேலை பூமிக்கு அடியில் புதைந்துள்ள பொருள்களை கண்டு பிடித்தல் போன்ற திறமைகளும் உண்டாகும். செல்வமும் புகழும் ஏற்பட்டு மேலான வாழ்க்கை அமையும்.
ஐந்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எதிர்பாராத தனலாபங்கள் உண்டாகும். பந்தயம் சூதாட்டம் ஹேஷ்ய வியாபாரங்கள் முதலியவற்றில் லாபங்கள் உண்டாகும். வெகு செல்வந்தராகவும் முன்கோபியாகவும் இருக்க நேரிடும்.
ஐந்தாமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் பொருள் இலாபம், காமசுகம் முதலியவை பற்றிய சிந்தனையாக இருப்பதும் வெகுகாலம் கழித்து புத்திர பாக்கியம் உண்டாதலும் தன் பிள்ளைகளிலோன்று பிரபலம் அடைந்து தனக்கு உதவியாக அமைவதும் உண்டாகும். புத்திர தோஷங்களும் ஏற்படும்.
ஐந்தாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தனமும், புகழும் சுக வாழ்க்கையும் உண்டாகும். பெண்ணாக இருந்தால் நீண்டகாலம் தாய் வீட்டிலேயே இருந்து சகல சௌக்கியமாக இருப்பாள். மந்திரி பதவி அல்லது பெரிய ஆசிரியர் பதவியும் உண்டாகும். கல்வி மேன்மையால் புகழும் இலாபங்களும் உண்டாகும். பெரிய பதவியும் கிடைக்கும்.
ஐந்தாமாதிபன் ஐந்தாமிடத்திலேயே இருந்து தசை /புத்தி நடத்தினால் அத்திசையின் ஆரம்பத்தில் புத்திர தோஷங்கள் உண்டாகும். மேலான அறிவும் ஞானமும் உலகம் புகழத்தக்க குரு பதவியை அடைவதும் உண்டாகும் கல்விச் செருக்கால் சட்டென்று கோபம் கொள்பவராக இருப்பார்.
ஐந்தாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் பிள்ளைகளே தனக்குச் சத்துரு ஆதலும் அவர்களால் மனோ வியாகூலங்களும் உண்டாகும். பிள்ளைகள் சுய சம்பாத்தியத்தால் முன்னுக்கு வருவார்கள்.
ஐந்தாமாதிபன் ஏழாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தன லாபங்களும் தன் எதிரிகளையும் வசப்படுத்தி நடத்தும் திறமையும் மேலான பதவியும் புகழும் மேலும் மேலும் முன்னேற்றங்களும் உண்டாகும்.
ஐந்தாமாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் காசநோய் அல்லது வயிற்று நோய்களால் பலத்தத் தொல்லைகளும் நல்ல மனமில்லாதவராக வெறுக்கத் தக்க நடத்தையும் புத்திரசுகம் இல்லாமையும் உண்டாகும். பெரும்பாலும் பெண் குழந்ததைகளே உண்டாகும்.
ஐந்தாமாதிபன் ஒன்பது அல்லது பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகல பாக்கியங்களும் நிறைந்த மேலான வாழ்க்கை உண்டாகும், எல்லோராலும் புகழ்ந்து பாராட்டத்தக்க பெரிய ஆசிரியர் அல்லது கவிஞராகப் புகழ் பெறுவார். அரசர்களுக்குச் சமானமான வாழ்க்கை உண்டாகும். தன் குழந்தைகளும் மேலுக்கு வந்து புகழும் பெருமையும் எல்லோராலும் கொண்டாடத்தக்க நிலையும் அடைவார்கள்.
ஐந்தாமதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெகு செல்வமும் அநேக புத்திரர்களும், அதிகமான புகழும் உண்டாகும். ஜனத் தலைமையும் புகழும் உண்டாகும்.
ஐந்தாமாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தனக்குப் புத்திரர் இல்லாமல் தத்து எடுத்து அல்லது விலைக்கு ஒரு பிள்ளையை வாங்கி வளர்க்க நேரிடும். புத்திரபாக்கியம் ஏற்பட்ட போதிலும் தன் மக்கள் தன்னை விட்டுப் பிரிந்தோ, மறைந்தோ, போகும்படியாக நேரிடும் தனக்கும் பிள்ளைகளுக்கும் சரியான உறவு இருக்காது. பிள்ளைகளால் கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாகும், சதாகலமும் காமசிந்தையாய் பொருள் விரயம் செய்ய நேரிடுவது உண்டு.
ஆறாமாதிபன் தசை/புத்தி
ஆறாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் நோயளியாக அல்லது கடனாளியாக இருப்பதும் விபத்துக்குள்ளாக நேர்தலும் வழக்கு வியாஜ்ஜியங்களில் மனோ துக்கம் அடைதலும் மரணத்திற்குச் சமமானகண்டங்களும் ஏற்படும்.
ஆறாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் நிலையான தனமில்லாது அவதிபடுதல் தன் சொத்துக்கள் அன்னியரால் கவரப்படல் வாக்கினால் விரோதங்கள் ஏற்படுதல் குடும்ப சுகமின்மை முதலான தீயபலன்கள் நடைபெறும் பகைவர் அல்லது கள்வராலும் நோய்களாலும் பொருள் நஷ்டங்கள் உண்டாகும்.
ஆறாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பொருள் லாபங்களும் அன்னியர் பொருள்களை தான் அபகரித்தலும் நண்பர்கள் சகோதரர்களுடன் விரோதங்களும் பொய் வஞ்சகம் கோள் சொல்லுதல் போன்ற கெட்ட குணங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தரித்திரம் எவ்விதத்திலும் சுகம் இல்லாமை சரியான கல்வி இல்லாததால் கீழான வேலைகளைச் செய்து பிழைத்தல் கஷ்ட ஜீவனம் முதலானவை உண்டாகும்.
ஆறாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர நஷ்டங்களும் புத்திர விரோதங்களும் உண்டாகும் அதிகமான கல்வி வசதியோ சூட்சும அறிவோ ஏற்படாத போதிலும் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்தலும் திருட்டு புத்தியும் தீயவர் நேசமும் கெட்ட காரியங்களில் மனம் செல்வதும் பெண்களிடம் விரோதமும் உண்டாகும்.
ஆறாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால், முரட்டுத் தைரியமும் வீரசாகச செயல்களில் விருப்பமும் அவ்வழியே பணம் சம்பாதித்தலும் தன்னுடைய சொந்த பந்துக்களை விரோதம் செய்து கொண்டு அந்நிய பந்துக்களை அடைவதும் சத்துரு ஜெயமும் அதனால் பணவசதிகளும் உண்டாகும் திடீரென்று கண்டங்களும் ஏற்படலாம்.
ஆறாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு தனக்கு விரோதமாகவும் அல்லது பயத்தால் அடங்கி ஒடுங்கி நடப்பதும் பகை இல்லாமையும் கல்வி செல்வம் இருந்தபோதிலும் தொழில் முதலானவற்றிலும் ஈடுபாடு கொள்ளாமலும் யார்மேலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், அற்ப லாபங்களும் அற்ப சுகங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் அஷ்மத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் திடீரென்று மரணபயம் உண்டாகும் அல்லது சதா ரோகத்துடன் அழுந்திக்கொண்டு கிடக்க நேரிடும். பெண்ணாக இருந்தால் கணவன் மரணமடைவான் தரித்திரமும் கஷ்டங்களும் பலவிதமான துக்கங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தை, தந்தையின் சொத்துக்கள் முதலானவற்றை இழக்க நேரிடுவதும் சுகபாக்கியங்கள் குறைவும் மரம் வெட்டுதல், கல் உடைத்தல் போன்ற தொழில்களைச் செய்து ஜீவிக்க நேர்வதும் உண்டாகும்.
ஆறாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் முடக்கமும், அன்னியர் தயவால் பிழைக்க நேர்வதும் புகழ்கீர்த்தி நஷ்டமும் உண்டாகும் தொழில் அல்லது வியாபாரத்தில் கடன்காரர் அபகரித்துக் கொள்வார்கள் நோயால் பொருள் நாசம் உண்டாகும்.
ஆறாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கஷ்ட ஜீவனமும் மூத்த சகோதரனுக்கு கண்டமும் அன்னிய பெண்களின் சேர்க்கையும் அதனால் பொருள் நஷ்டங்களும் உண்டாகும். அன்னியருடைய சொத்துக்கள், பெண்கள் மேல் நாட்டமும் அவற்றைத் தனக்கு உடைமை ஆக்கிக்கொள்வதும் உண்டாகும்.
ஆறாமாதிபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால், கல்நெஞ்சமும் ஜீவஹிம்சையும், பாவகாரிய சிந்தனையும் கொலை களவு காமம் போன்ற தீய வழிகளிலேயே நடப்பதும் அவ்வழியிலேயே பணத்தைச் சேர்த்துக் தானும் அனுபவிக்காமல் புதைத்து வைப்பதும் தலைமறைவாக வசிக்க நேர்வதும் உண்டாகும்.
ஏழாமாதிபன் தசை/புத்தி
ஏழாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் இளமையில் பெண்களை சுற்றி அலையும் நடத்தையும் எப்பொழுது காமசிந்தனையாய் இருக்கும். மனைவிக்கு அடங்கிய கணவனாக இருப்பதும் அந்நிய பெண்களின் மேல் நாட்டமும் வெளியூர் சஞ்சாரமும் கூட்டு வியாபாரங்களில் இலாபங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பெண்களால் சம்பாத்தியமும் அவர்களாலேயே செலவுகளும் வழக்குகளால் பொருள் நஷ்டமும் அவமானங்கள் அபாயங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் குழந்தைகள் கர்ப்பத்திலேயே இறந்து பிறக்கும் மனைவியால் சுகம் உண்டாகாது சுமாரான இலாபங்களும் வெளியூர் சஞ்சாரமும் பிராயணங்களின் மூலம் நடக்கும் தொழில்களின் விருத்தியும் உண்டாகும்.
ஏழமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அதிகமான காம வேட்கையும் எப்பொழுதும் பெண்களே கதி என்று கிடப்பதும் தன் மனைவிக்கு கெட்டப்பெயர் உண்டாவதும் புதுக்காரியங்களில் ஈடுபாடும் அரசியல் வெற்றிகளும் உண்டாகும்.
ஏழாமதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நல்ல நடத்தையும் குணங்களும் உண்டாவதும் நற்குணமும் நன்னடத்தையும் உடைய மனைவி வாய்க்கப் பெறுவதும் மேலான நடத்தையும் சகல சம்பத்துக்களும் நிரம்பிய வாழ்க்கை உண்டாவதும் கூடும்.
ஏழாமதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் மனைவி தன்னைக்காட்டிலும் அதிகமான காமியாக இருத்தலும், அவளால் பொருள் செலவும் நோய்களும் உண்டாவதும் சுகம் இல்லாமையும் உண்டாகும்.
ஏழாமதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் புகழும் பேறும் அடைவதும், மனைவிக்கு அடங்கி கணவனாக இருப்பதும், தனக்கென்று எதுவும் இல்லாத அற்பஜீவனமும் உண்டாகும்.
ஏழாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நோயாளியான மனைவியை அடைந்து அவளுடைய பணத்திற்காக அல்லது வேறு காரணத்தால் அடிமையைப்போல் இருக்க நேர்வதும் தன் சொத்துக்களை அன்னியரிடம் இழந்து விட நேர்வதும் பிரயாணத்தில் கஷ்டங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னிய ஜாதி மதங்களைச் சேர்ந்த பெண்களின் மேல் மோகமும் பெண்களால் பாக்கியம் உண்டாவதும் அவர்களாலேயே வாழ்க்கை நடைபெறுவதும் உண்டாகும். நீண்ட காலத்திற்கு நன்மை அளிக்கத்தக்க பெரும் காரியங்களிலேயே ஈடுபாடும் ஏற்படும்.
ஏழாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெளியூர் வாசம் அன்னியதேசச் சஞ்சாரம் முதலியன உண்டாகும். வெளியூர்களில் தொழில் உண்டாகும் மனைவி கெட்ட நடத்தை உடையவளாக கெட்ட பெயர் ஏற்படும்.
ஏழாமாதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பெண்களால் அல்லது பெண்கள் விரும்பத்தக்கப்பொருட்களைத் தொழில் அல்லது வியாபாரங்களில் லாபங்களும் அதிகமான காமவேட்கையும் உண்டாகும்.
ஏழாமாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சுய முயற்சியின்றி அந்நியர் சொற்கேட்டு நடப்பதும் தரித்திரமும் கஷ்டங்களும் மனைவிக்கு நோய் ஏற்பட்டு அவளால் பொருட் செலவுகளும் காமவேட்கைக் காரணமாக தன நஷ்டங்களும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் தசை/புத்தி
அஷ்டமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவி உயிருடன் இருக்கும் காலத்திலேயோ அல்லது அவளுக்கு மரணம் எற்படுவதாலோ இரண்டாவது விவாகம் ஒன்று நடைபெறலாம். அந்நியரால் பொருள் நஷ்டங்கள் உண்டாகும். எப்பொழுதும் பொருட் செலவுகளும் தனவிரயங்களும் ஏற்படும். தரித்திர வாழ்க்கையும் அற்ப ஜீவனமும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் இரண்டாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பொருள் நஷ்டங்களும் அந்நியரை நம்பிப் பிழைக்கும் படியான நிலைமையும் குடும்பத்தைவிட்டு பிரிந்து வசிப்பதும் ஆண்டி போன்ற நிலைமையும் தன் சொற்களுக்கு மதிப்பு இல்லாமையும் எல்லோராலும் பரிகாசம் செய்யத்தக்க வாழ்க்கையும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதர நஷ்டம், பூமி, பொருள் நஷ்டங்களும், தைரியமின்மை பலக்குறைவும் நபும்ஸகத் தன்மையும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாய்க்குக் கண்டம், வீடு வாசல் வாகன நஷ்டம், தரித்திர வாழ்க்கை, உற்றார் உறவினர்களைப் பிரிந்து யாருடைய ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியாக இருக்கும் நிலைமை முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர சோகம் உண்டாதல் பைத்தியம் சித்தப்பிரமை அல்லது புத்தி மாறாட்டம் எற்படல் வயிற்றில் ரோகங்கள், வாக்கிய நாசங்கள் மாமன் வர்கத்திற்கும் கஷ்டங்கள் முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சந்ததி நாசம், தனக்கும் கண்டங்கள் சர்பபயம், உயரத்திலிருந்து விழுவதால் அபாயம், வாதரோகத்தால் கால்கள் முடக்கம், பொருள் நஷ்டங்கள் சகலவிதமான துன்பங்களும் உண்டாகும் மரணமும் ஏற்படக்கூடும்.
அஷ்டமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு கண்டம், இரண்டாவது மனைவி ஏற்படல் தன் மருமகனுக்குக் கண்டம், பிரயாணங்களில் அபாயம், அந்நியரால் பொருள்கள் கவரபடல், வழக்கு வியாஜ்ஜியங்களில் தோல்வி போக சக்திக் குறைவு முதலிய பலன்கள் உண்டாகும்.
அஷ்டமாதிபன் அஷ்டமத்திலேயே இருந்து தசை /புத்தி நடத்தினால், வஞ்சனை, களவு போன்ற கெட்ட வழிகளிலும் குறுக்கு வழிகளிலும் பணம் சம்பாதித்தல் மனைவிக்கு கெட்ட பெயர் உண்டாதல் மனைவியின் சம்பாதியத்தால் அல்லது அன்னியர் தனத்தால் பிழைப்பு நடத்துவது போன்ற பலன்கள் உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் துணிந்து பாவங்களை செய்வதும், தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபடுதலும், அன்னியர் சொத்துக்கள், மனைவியர் மீது ஆசை கொண்டு கவர முயற்சிப்பதும் அதனால் கஷ்டங்களையும் அவமானங்களையும் அடைவது தர்மம், ஒழுங்கு மதம் ஆகியவற்றுக்கு எதிரான நடத்தையும் பிரச்சாரம் செய்வதும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் நாசம், பெயர் மங்குதல் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள அல்லது அவற்றைச் செய்ய நேர்தல் நாடுவிட்டுச்செல்லல் சென்றவிடத்தில் எல்லாம் கஷ்டங்கள், பிச்சைக்காரனுக்குச் சமமான வாழ்க்கை முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மூத்த சகோதரன் மரணம், தான் சம்பாதித்த எல்லாப் பொருள்களையும் இழந்து தரித்திரமடைதல், தன் பிள்ளைகளுக்குத் திருமணம் முதலான சுபகாரியங்களைச் செய்து வைக்க முடியாத கஷ்டங்கள், அதனால் மனோதுக்கம் முதலியவை உண்டாகும்.
அஷ்டமாதபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான கஷ்டங்கள் மனோதுக்கங்களும் ஆண்மைக் குறைவும், நித்திரை இல்லாது தவிக்கும் படியான நிலைமையும், கெட்ட நடத்தையும் பாவ காரியங்களில் ஈடுபாடும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் தசை/புத்தி
ஒன்பதாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சியின்றியே பாக்கியங்கள் உண்டாதலும் பொருள் லாபங்கள் சொத்துக்கள் விருத்தி குடும்பசுகம் அதிகரிப்பதும், எண்ணிய காரியங்களில் விருப்பமும் தர்ம சிந்தை மேலான எண்ணங்கள் புகழ் முதலியன விருத்தியாவதும் ஆக மிகவும் மேன்மையான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மேலும் மேலும் பொருட்சேர்க்கையும், சகல வித்தைகளிலும் பண்டிதனாகி புகழும் பெருமையும் அடைவதும் கதா காலட்சேபம் அல்லது ஆன்மீகப் பிரசங்கங்கள் மூலம் தனமும் புகழும் சேர்வதும் மனைவியிடம் அதிகமான பிரியமும் புத்திரபாக்கியங்களும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதரர்கள் உண்டாவர். சகோதரர்களுக்கு நன்மை உண்டாகும். செல்வம் சொத்துக்களின் மேல் அதிகமான இச்சையும் அவற்றை அடைவதற்கான கடும் முயற்சியும் உண்டாகும். தந்தை வழி சொத்துக்களுக்குச் சில விரயங்கள் ஏற்படும்.
ஒன்பதாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வியில் மேன்மையும் அழகாகப் பேசும் சாமர்த்தியமும் பெரிய அதிகாரியாக அல்லது தொழிலதிபராக அல்லது இராஜ்யாதிகாரியாக உயர்வு பெறுவதும் அரசாங்க கொளரவங்களும், புகழும் பாராட்டும் மகோன்னதமான நிலைமையும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தர்ம காரியங்களிலேயே மனம் செல்வது மேலும் மேலும் பாக்கிய விருத்தியும் திருமணம் மக்கட்பேறு போன்ற சுகங்கள் உண்டாவதும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதும் குருபூஜை சிவபூஜை முதலான காரியங்களில் ஈடுபடுதலும் தீர்த்தயாத்திரையும் தயாள குணமும் நீடித்து நிற்கும் படியான தர்மகாரியங்களை செய்து வைத்தலும் அதனால் புகழ் நிலைத்திருக்கும்படியாகச் செய்வதும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஆறாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பித்ரு பாக்கியத்தை இழந்து இளமையிலேயே தரித்திரத்தை அடைவதும் அம்மான்மாரால் வளர்க்கப்படுவதும் நோய்களாலும் பகைவராலும் சொத்துக்கள் அழிவும் கஷ்டங்களும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நல்ல மனைவியும் அவளால் சுகபாக்கியங்களை அடைவதும் உண்டாகும். அவன் திசையில் மேலும் மேலும் பொருள் இலாபங்களும் முயற்சிகளில் வெற்றியும் பிரயாணங்களால் நன்மைகளும் புகழும் சந்தோஷமும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் இளமையிலிருந்தே வறுமை அனுபவிக்க நேரும். தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்கள் நாசம், மூத்த சகோதரர்களுக்குக் கஷ்டங்கள் எவ்வித பாக்கியமும் இன்றி பிறர் கையை எதிர்பார்த்து வாழும்படியான நிலை, மேலும் மேலும் துக்கம் முதலானவை உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பல வழிகளிலும் சொத்து சுகங்கள் உண்டாவதும் இராஜ்யாதிகாரி அல்லது மடாதிபதி போன்ற உயர்ந்த பதவி ஏற்பட்டு புதுச்சொத்துக்களை நிர்வாகம் செய்யும்படியான வாய்ப்புக்கள் உண்டாவதும் தான தர்மங்களால் வெகு புகழை அடைவதும் குடும்பத்தில் சகல நன்மைகளும் ஏற்படுவதும், தன் சகோதரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அற நிலையங்களில் உத்தியோகம் அல்லது அவற்றின் நிர்வாக பொறுப்பை ஏற்றல் கிராமம் நகரம் அல்லது நாட்டின் தலைவராதல் வெகு புகழ் வெகு சம்பாத்தியம் சன்மானங்கள் முதலான சகல நன்மைகளும் உண்டாகும்.
ஒன்பதாமதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அநேகவித சன்மானங்களை அடைவதும் பந்தயம் சூதாட்டம், லாட்டரி போன்றவைகளில் வெற்றியும் காதல் கேளிக்கைகளில் விருப்பமும் தயாளகுணமும் உண்டாகும்.
ஒன்பதாமதிபன் பன்னிரேண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தையின் சொத்துக்கள் விரயமாதல் தரித்திர வாழ்க்கை, மிகவும் கஷ்ட ஜீவனம் முதலியவை உண்டாகும்.
பத்தாமாதிபன் தசை/புத்தி
பத்தாமதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கவித்துவ சக்தியும் தான் இருந்த இடத்திலிருந்தே தொழிலும் புகழும் அடையும் படியான யோகமும் மேலும் மேலும் செல்வமும் புகழும் விருத்தியாவதும் உண்டாகும்.
பத்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எழுத்தாளர் அல்லது பிரசங்கியாக புகழும் பொருளும் அடைதலும் தொழில் விருத்தியும் குடும்ப சுகங்களும் உண்டாகும்.
பத்தாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் விருத்திக் குறைவும் தன் சகோதரர்களை அண்டிப்பிழைக்கும் நிலைமையும், அல்லது சொத்துக்களால் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவனமும் சிறு சிறு தொழில்களை ஆரம்பித்துவிட்டு விடுதலும் எதிலும் நிலையற்ற தன்மையும் உண்டாகும்.
பத்தாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வி மேம்பாட்டால் உயர்ந்த பதவி அடைதலும் வாகன லாபம் அல்லது வாகன சம்பந்தமான விருத்தியும், குருபக்தி, தெய்வபக்தி, முதலானவைகளும் தாய் தந்தையரிடம் விஸ்வாசமும் அவர்களுக்கு நன்மையும் ஏற்படுதலும் புகழ் பராக்கிரமம் பாக்கியம் ஆகியவை விருத்தியாவதும் உண்டாகும்.
பத்தாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தனலாபங்களும் பல தொழில்கள் ஆரம்பித்து நடத்தி வெற்றியடைதலும் தொழிலிலே கவனமாக இருப்பதும் தொழில் சம்பந்ததப்பட்டதையும் வெகு விரைவில் கிரகித்து கொள்ளும் தன்மையும் புத்திர லாபமும் தன் மக்கள் தனக்கு மீறிய அறிவும் செல்வமும் உடையவராதலும் அல்லது தன் பிள்ளைகளிலோருவன் தனக்கு அடங்காமல் பிரிந்து போய் விடுவதுமான பலன்கள் நடைபெறும்.
பத்தாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் தொழில் புகழ் முதலியவற்றை எதிரிகள் கைகொள்வதும் அல்லது அவற்றை வேறொருவனுக்கு விற்றுவிட்டு தான் புதிய தொழிலை ஆரம்பிக்க முயல்வதும் தொழில் இல்லாமல் அலைய நேர்வதும் பிற்பகுதியில் தொழில் வாய்ப்பும் சுகமும் உண்டாவதும் உண்டாகும். மொத்தத்தில் அலைச்சலும் கஷ்டங்களுமே அதிகமாக இருக்கும்.
பத்தாமாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெளியூர் அல்லது அன்னிய நாட்டில் தொழில் ஏற்படுவதும் மனைவியின் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பொறுப்புகள் உண்டாவதும் மனைவியின் பணத்தைக்கொண்டு தொழில் நடத்தி மேலான நிலைக்கு வருதல் போன்ற பலன்கள் உண்டாகும். பாபக்கிரமாக இருந்தால் கெட்ட வழிகளில் சம்பாத்தியம் ஏற்படும்.
பத்தாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நோயின் காரணமாக தொழில் முடக்கம் ஏற்படும். அபவாதம், கெட்டப் பெயர், தொழில் நஷ்டங்கள் பலத்த நஷ்டம் முதலானவை ஏற்படலாம். எவ்வித தொழிலும் இல்லாமலும் அன்னியரை அண்டிப் பிழைக்கும் படியான நிலைமையும் தேசாந்திரம் போகும்படியான நிலைமைகளும் உண்டாகும்.
பத்தாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னை தந்தையர் தெய்வகுருபக்தி அவர்களுக்கு சுகமும் ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் நெறிதவறாத நடத்தையும் ஏற்படுவதும், அதிகமான பாக்யம் புகழ் இல்லாத அடக்கமான வாழ்க்கையும், துறவு பூணும்படியான அல்லது சன்யாச மனப்பான்மையும் உண்டாகும்.
பத்தாமாதிபன் பத்தாமிடத்தலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வி மேன்மையும் மேலான தொழிலில் தலைமை ஸ்தானமும் புகழும் உண்டாகும். தொழிலில் நேர்மையும் முறை பிசகாத பண்பும் சத்திய நெறி நடத்தலும் புகழும் கௌரவமும் உண்டாகும்.
பத்தாமாதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் மேலான நிலைமையும் தன் முயற்சி இன்றியே லாபங்கள் உண்டாதலும் பலவிதமான வருமானங்களால் சொத்து சுகம் ஏற்பட்டு எப்பொழுதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவித்தலும், புத்திரலாபங்களும், புத்திரர்க்கு சுகங்களும் உண்டாவதுமாகும்.
பத்தாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் நஷ்டங்களும் எவ்விதத் தொழிலும் செய்ய சக்தியில்லாதவனாக இருப்பதும் தொழிலில் பகைவரால் நஷ்டங்களும் அடிமைப் பிழைப்பும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் தசை/புத்தி
பதினொன்றாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் பெயர் புகழ் முதலானவற்றைக் கொண்டே சம்பாத்தியங்கள் உண்டாவதும் மிகவும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கையும் நல்ல குணமும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பரந்த நோக்கமும் நாவன்மையும் எழுத்து பேச்சுத் திறமைகளால் பொருள் லாபங்களும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பந்தயசூதாட்ட வியாபாரங்களில் லாபங்களும் புதையல் கிடைத்தது போல் சொத்துக்கள் வந்து சேர்வதும் தன் வாக்கினாலேயே லாபங்களை அடைவதும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். தானாக பொருள் வந்து சேரும். தீர்த்த யாத்திரை மகான்களின் சேர்க்கை முதலியன உண்டாகும். சகோதரர்களுக்கு லாபங்கள் உண்டாகும். ஆலயங்களைக் கட்டுதல், அற நிலையங்களை ஸ்தாபித்தல் போன்ற பொறுப்புக்களையும் ஏற்று நிதி திரட்டி அவற்றை நடத்தி வைக்கும் படியான பாக்கியமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வியால் மிக உயர்ந்த பதவியை அடைதல், ஞானியாதல் எல்லாவிதங்களிலும் சுகசௌக்கியங்கள் நிறைந்த வாழ்க்கையும் சகல நன்மைகளும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர லாபங்கள் ஏற்படுவதும், தனக்குத் தன் புத்திரர்களால் லாபங்கள் உண்டாவதும் மேலும் மேலும் சொத்த சுகங்கள் விருத்தியாவதும் சகலசித்திகளும் நடைபெறும் மாந்திரீகப் ஜோதிடம் போன்ற வித்தைகளும் அறியும் சக்தியும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் பகைவரால் தொல்லைகளும் அன்னிய தேசத்தில் அன்னியரிடம் கைகட்டி பிழைக்கும் படியான நிலைமையும் சொத்து சுகம் இல்லாத பரதேசி போன்ற வாழ்க்கையும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு மரணமும் இரண்டாவது அல்லது மூன்றாவது விவாகம் ஏற்படும். அன்னிய தேசங்களில் சஞ்சரிப்பதன் மூலம் லாபங்கள் உண்டாகும். அதிகமான காமவேட்கையும் அன்னிய ஸ்திரீகளை அடைவதும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன்னுடைய சக்தி யுக்தி உழைப்பு முதலியவற்றால் அன்னியரே லாபம் அடைவார்கள் தனக்கு அற்ப லாபங்களே உண்டாகும். குடும்பத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் படியான நிலைமையும் உண்டாகும். எப்பொழுதும் எதற்காவது ஏங்கிக் கொண்டே இருக்கும கேவலமான வாழ்க்கை உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தான தர்மங்கள் யாக எக்கியங்கள் செய்து புண்ணிய லாபங்களை அடைவதும் அரசர்களாலும் பிரபுக்களாலும் பூஜிக்கத் தக்க நிலைமையும் தர்மம் தவறாத வாழ்க்கையும் மதியூகமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேதையாக விளங்குவதும் தான் கூறும் ஆலோசனைகளுக்காகவே லாபங்களை அடைதலும் தொழிற் திறமைக்காக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க நிலைமையும் சகல சுகங்களும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான லாபங்களும் சுகபாக்கியங்களும் தாமே வந்தடைதலும் அழகிய இளம்பெண்களின் சகவாசமும் கலைத்திறமைகளும் கல்வியால் பிரகாசமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அதிகமான காதல் வேட்கையும் பெண்களை சுலபமாக வசீகரம் செய்யும் சக்தியும் காமலீலைகளால் பொருள் விரயமும் உண்டாகும்.
பன்னிரண்டாமாதிபன் தசை/புத்தி
பன்னிரண்டாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் உடல் நலக்குறைவும் கபம் சம்பந்தமான ரோகங்களும் கல்வியும் செல்வமும் இல்லாத தரித்திர வாழ்க்கையும் உண்டாகும் ஆண்மைக்குறைவு, தாம்பத்திய சுகம் இலலாமையும் உண்டாகும் தன்னம்பிக்கை இன்மையும், சுயமுயற்சி இன்மையும் வாழ்க்கையில் விரக்தியும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தரித்திர வாழ்க்கையும், தன்னுடைய வீடு மனைவி எல்லாவற்றையும் பிரிந்து சுற்றி அலையும் வாழ்க்கையும் விஷ்ணு பக்தியும் தயாள சிந்தையும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கோழைத்தனமும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் சகோதரர் இல்லாமையும் தனக்கு உதவி இல்லாமையும் தானே தனியாக வயிறு வளர்த்துக்கொண்டு போகும் அவல நிலைமையும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாய்க்கு கண்டமும் தரித்திர வாழ்க்கையும் வீடு வாசல் சொத்து சுகங்களை இழந்து விடும்படியான நிலைமையும் கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய வாழ்க்கையில் அக்கறை இல்லாமையும் புத்திர நஷ்டங்களும் புத்திர பாக்கியக் குறைவும் கல்வி இன்மையும் கெட்ட வழிகளில் செல்லும் மனப்போக்கும் தன்புத்திக்குறைவால் தன்னிடம் இருந்த சொத்துக்களையும் இழந்து விடுதலும் மந்த புத்தியின் காரணமாக தன்னுடைய சுகபாக்கியங்கள் எல்லாவற்றையும் இழந்து அலையும்படியான வாழ்க்கையும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னிய ஸ்திரீகளைச் சுற்றி அலைவதும் பாவசிந்தையும் புத்திர சோகங்களும் அன்னியரின் சொத்துக்களைத்தான் அடைதலும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியை இழந்து விடுதலும் அல்லது மனைவியிடம் விருப்பமின்மையும் உடல் நலக்குறைவும் சக்தி இன்மையும் பொருள் நஷ்டங்களும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கெட்ட நடத்தையும் பெண்களால் பொருள் விரயமும் பாவகாரியங்களில் மனம் பிரவேசித்து அலைதலும் நரகத்தை அடையும் படியான பாவங்களைச் செய்தலும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்களை இழத்தல், பெரிய காரியங்களில் ஆர்வமும் முயற்சியும் இல்லாமை கிடைத்தது போதும் என்ற அக்கறை இல்லாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகும் தன்மை, முதலானவை உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியர் காரியங்களைச் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். புத்திரபாக்கியம் இராது. தனக்கென்று தொழில், புகழ் சொத்துக்கள் முதலாவை இல்லாமல் இன்னொருவர் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் படியாக நேரிடும்.
பன்னிரெண்டாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய சுகம் இல்லாமலும் புத்திரபாக்கியம் இல்லாமலும் வாழ்க்கை நடத்த நேரிடும் சொத்து சுகம் இருந்த போதிலும் அனுபவிக்க வாய்ப்பு ஏற்படாது.
பன்னிரெண்டாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியருடைய சொத்துக்கள் மனைவியரை அடைவதும் பாவச் செயல்களில் நாட்டமும் அவற்றில் வெற்றியும் உண்டாகும் தன் பிள்ளைகளால் துக்கமும், பொருள் நாசமும் உண்டாகும் மனைவி மக்களுடன் விரோதமும் குடும்பத்தை விட்டு பிரிந்து அன்னிய ஸ்திரீயிடம் போய் சேர்ந்து விடும்படியான நிலைமையும் ஏற்படும்.
லக்கினாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் யோகம் உண்டாகும். குடும்ப சுகம் பெருகும் நல்வாக்கும், கௌரவமும் வாக்கினால் இலாபங்களும் உண்டாகும்.
லக்கினாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதரர்களால் நன்மையும் தனக்கு வேண்டிய காரியங்களை செய்வதற்குத் தக்க துணைவர்கள் மற்றும் உதவியாட்கள் தாமாகவே உண்டாவதும் தமது மனோ தைரியத்தால் வெற்றியும் புகழும் அமைவதும் யோக சுகத்தில் லயிப்பும் சகோரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.
லக்கினாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாயால் அல்லது மாமன் வர்க்கத்தாரால் நன்மைகளும் வித்தையும் வீடுவாகனங்கள் சேர்வதும் அவற்றால் இலாபங்கள் உண்டாவதும் தன் சகோதரர்களுக்குப் பொருள் இலாபங்கள் ஏற்பட்டு அதனால் தானும் லாபங்கள் அடைதலும் வியாபார விருத்தியும் தொடர்ந்து மேன்மைகளும் உண்டாகும்.
லக்கினாதிபன் ஐந்தாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திரர்களால் லாபங்களும் தன் புத்தியாலும் வித்தைகளாலும் மேலான புகழ் இவற்றை அடைவதும் மற்றும் உபதேசம் பெறுவது வீடு வாகனங்களால் லாபங்கள் உண்டாவதும் ஆகும். லக்கினாதிபன் ஐந்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தசை ஆரம்பத்தில் புத்திரசோகம் ஏற்படும் என்பது சிலர் கருத்து.
லக்கினாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அக்காலத்தில் பகை, வம்புகுகள், கடன்கள் நோய்கள் முதலியவற்றால் பலவிதமான கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும். மனைவியை இழக்க நேரிடும். தன் மக்களின் சம்பாத்தியத்தால் வாழ்க்கை நடத்த நேரிடும் தாயாதிகளால் குடும்ப சிக்கல்கள் பாகப் பிரிவினை போன்ற தொல்லைகளும் உண்டாகும். கோயில் சொத்துக்களை அனுபவிக்கவும் அவ்வழியாகவே நஷ்டங்களை அடையவும் நேரிடும்.
லக்கினாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் திருமணம் மகப்பேறு போன்ற நன்மைகள் உண்டாகும் அல்லது தன் மகளுக்கு மணம் செய்து கொடுத்து பேரப்பிள்ளைகளை அடைவதும் கூடும். கூட்டு வியாபாரம் அமையும். வழக்குகளில் வெற்றி பெற்று தன் பகைவரின் சொத்துக்களை அடையவும் கூடும் பிராயணங்களால் இலாபங்கள் உண்டாகும்.
லக்கினாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மரண பயம் அல்லது அதற்குச் சமமான கண்டங்கள் உண்டாகும். கடனால் அவமானங்கள் ஏற்படும். திருடர்களுடன் சம்பந்தம் எற்படும். அதனால் சிறை தண்டனைகள் அனுபவிக்கும் படியாகவும் நேரலாம். பலவிதமான கஷ்ட நஷ்டங்களும் துன்பங்களும் உண்டாகும்.
லக்கினாதிபன் ஒன்பதாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவியால் பாக்கிய விருத்தியும் சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். சகல விதங்களிலும் மேலான சுகங்கள் நிறைந்த வாழ்க்கை உண்டாகம் தன் சகோதரனுக்கும் நன்மை உண்டாகும்.
லக்கினாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேன்மை வியாபார விருத்தி தன் பெயர் நாலாதிசைகளிலும் பரவுதல், அந்நிய நாடுகளிலும் வியாபாரத் தொடர்புகள் ஏற்படல், வியாபார நிமித்தமாகவும் தீர்த்தயாத்திரை ஸ்தல தரிசனம் போன்ற காரியங்களுக்காவும் பிரயாணங்கள் முதலியவை ஏற்படும்.
லக்கினாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதங்களிலும் பொருள் லாபம் ஏற்படும். தன் மூத்த சகோதரர்ருக்கு லாபங்கள் சுகபாக்கிய விருத்திகளும் உண்டாகும். தன் பிள்ளைகளுக்கு திருமண பாக்கியம் மகப்பேறு முதலியன உண்டாகும். பெண் தொடர்பு ஏற்படும், தாய்க்கு மரணம் ஏற்படும்.
லக்கினாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சொத்துக்களை துறந்து பற்றற்ற வாழ்க்கையும் மோட்ச மார்க்கத்தில் மனம் செல்வதும் மந்திர வித்தைகள் இரகசியமான விஷயங்கள் மற்றும் பிறவிக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் அறிய முற்படுதலும் போன்ற பலன்கள் உண்டாகும். பக்தி சிரத்தை அதிகமாகும். லக்கினாதிபன் கெட்டுப்போயிருந்தால் கஞ்சத்தனமும் பெரும் சூது, கபடத்தனம் முதலானவற்றின் மூலம் பணம் சேர்க்க முயற்சியும் அதனால் சில தோல்விகளும் நஷ்டங்களும் அன்னியர் மனைவியின் சேர்க்கையும் அதனால் அவமானம் பொருட்செலவுகளும் உண்டாகும்.
மேற்படி பலன்களை மற்ற திசைகளில் லக்கினாதிபனுடைய புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்துத் பலன் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கிரகத்திற்கு இரண்டு ஆதிபத்தியம் ஏற்பட்டால் அந்த இரண்டில் எந்த வீட்டில் அமைந்துள்ளதோ அதற்குரிய பலனையே விசேஷமாக செய்யும் அப்படித் தன் சொந்த வீடுகளில் ஒன்றியிருக்காமல் வேறு வீடுகளில் இருக்கும்போது லக்கினத்தை எண்ணும்போது முதலாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை தன் திசை அல்லது புத்தி நடைபெறும் காலத்தில் பாதிவரையிலும் நடத்திப் பிறகு இரண்டாவதாக வரும் ஸ்தானத்தின் பலனை நடத்துவார். லக்கினாதிபன் அஷ்டமாதிபதியாகவும் ஆகும் பொழுது (மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், துலாலக்கனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன்) தன் திசையின் பிற்பகுதியிலும் லக்கினாதிபனுக்குரிய யோக பலன்களை நடத்துவர்.
இரண்டாமாதிபன் தசை/புத்தி
இரண்டாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பண விஷயங்களிலேயே அதிகமான கவனமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் பிறர் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தை விருத்தி செய்து மேலான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பலமான முயற்சிகள் எடுத்துக்கொள்வது. அதனால் நன்மைகளும் உண்டாகும். பிறர் காரியங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதாவது மைனர் சொத்துக்களுக்கு கார்டியன் ஆகுதல் அல்லது மற்றவர்களுடைய பண்ணைகள் எஸ்டேட்டுகள் போன்றவற்றை நிர்வாகம் செய்வது போன்ற பொறுப்புகள் உண்டாகும்.
இரண்டாமாதிபன் இரண்டில் இருந்து திசை நடைபெற்றால் பலவிதமான தனலாபங்களும் இரண்டு அல்லது மூன்று செயல்பாடுகளை மேற்கொள்வதும், குடும்பங்கள் உண்டாவதும் தன் வாக்கினால் தொல்லை உண்டாவதும் ஏற்படும்.
இரண்டாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியரின் சொத்துக்கள் மனைவியர் முதலான அனுபவித்தலும் தெய்வ நிந்தை செய்வதும் சகோதரர்களுக்கு பொருட் செலவும் மற்றும் ஜாதகருக்கு தைரிய குறைவும் உண்டாகும். மேற்படி இரண்டாமாதிபன் சுபனாக இருந்தால் அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு பொது நன்மைக்காக பாடுபடுவார். இரண்டாமாதிபன் செவ்வாயாக இருந்து மூன்றாம் இடத்தில் பாவரோடு சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டு இருந்தால் தைரியமிக்க கொள்ளைக்காரனாவான்.
இரண்டாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஆசிரியத் தொழில் அல்லது வாகனத் தொழில் மூலம் தன லாபங்கள் உண்டாகும். தாயாரின் சொத்தை அடைவான். குடும்ப சுகமும் நன்மைகளும் உண்டாகும். தன் சகோரர்களை ஆதரிக்க வேண்டியதாக அல்லது அவர்களுக்காகச் செலவு செய்ய வேண்டியதாக ஏற்படும்.
இரண்டாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்தி லாபம், வீட்டிலிருந்தே தொழில் நடத்தி அமோகமான சம்பாத்தியம் அடைதல், லாட்டரி பந்தயம் போன்றவற்றில் வெற்றிகள், தன் காலத்திலேயே தன் பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுதிவைத்தல் அல்லது அவர்களை மேலான நிலைமைக்கு கொண்டு வருதல் போன்ற பலன்கள் ஏற்படும்.
இரண்டாமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் கடனாளியாக இருப்பதும் கடன்களால் தொல்லைகளும் வழக்குகளும் உண்டாவதும் தாய் மாமனால் சகாயமும் உண்டாகும். பகைவரால் பொருட் சேதமும் நஷ்டங்களும் உண்டாகும். முழங்கால்கள் தொடைகளில் வாத ரோகங்கள் அல்லது வேறு விதமான நோய்களும் உண்டாகும்.
இரண்டாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அந்நியரால் தன லாபங்களும் மனைவியால் சம்பாத்தியமும் உண்டாகும். வைத்தியத் தொழிலில் அல்லது வியாபாரப்பிரதிநிதிப் போன்ற உத்தியோகங்களில் பிரயாணம் செய்வதன் மூலமாக சம்பாத்தியம் ஏற்படும். மனைவிக்கும் தாய்க்கும் அபவாதங்கள் உண்டாகும்.
இரண்டாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் வீடு வாசல் முதலான சொத்துக்கள் நஷ்டமும் தரித்திர வாழ்க்கையும் வெறும் வாய் சாமர்த்தியத்தாலேயே பிழைக்க நேர்வதும், குடும்ப சுகம் கெடுவதும், பின் சகோதரர்களுக்குப் பொருள் விரயமும் கஷ்டங்களும் உண்டாகும்.
இரண்டாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான வழிகளிலும் தனலாபங்களும் சுகசௌக்கியங்களும் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துக்கள் விருத்தியாகும். தன் சகோதரர்களுக்கு உதவியும் நன்மையும் செய்ய நேரிடும்.
இரண்டாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் அமோகமான தனலாபங்களும் புது சொத்துக்களில் நிர்வாகம் தன் கைக்கு வருவதும் அதிகமான காம வேட்கையும் அதன் காரணமாக செலவுகளும் ஒன்றிரண்டு புத்திர சோகங்களும் உண்டாகும். புத்திர பாக்கியம் குறைவு என்றும் சொல்வார்கள்.
இரண்டாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் முதல் இல்லாமலேயே வியாபாரம் நடத்தி அதிகமான இலாபங்களை அடைவதும், பந்தய சூதாட்ட வியாபாரங்கள், பணத்தை வட்டிக்கு விடல் போன்றவற்றில் அதிகமான இலாபங்களும், தன் வாக்கினாலேயே லாபம் அடையும்படியான எழுத்து பேச்சுத் துறைகளால் அதிகமான செல்வப்பெருக்கும் உன்னதமான நிலைமையும் உண்டாகும்.
இரண்டாமாதிபன் பனிரெண்டில் இருந்து தசை /புத்தி நடத்தினால் செல்வம் யாவற்றையும் இழந்து தேசாந்திரம் போக நேர்வதும் அந்நியரின் பராமரிப்பில் இருப்பதும் அல்லது சிறையில் இருக்க நேர்வதும் தன் மூத்த மகனுக்கு நோயின் கஷ்டங்களும் உண்டாகும்.
மேற்படி பலன்களை மற்ற திசைகளில் இரண்டாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்து பலன்களை அறியவும்.
மூன்றாமாதிபன் தசை/புத்தி
மூன்றாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஆரம்பகாலத்தில் மற்றவர்களை அண்டி தொழில் செய்து அல்லது மற்றவர்களிடம் உத்தியோகம் பார்த்து ஜீவனம் செய்து பிறகு தன் சொந்த முயற்சியாலும் மனோதைரியத்தாலும் படிப்படியாக உயர்ந்து மேல் நிலைக்கு வரமுடியும் தனக்கு எப்பொழுதும் யாராவது சகாயம் செய்ய முன் வருவார்கள் மூர்க்கத்தனமான காரியங்களில் பிரவேசமும், அதனால் கஷ்டங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சியின்றி இருப்பதும் அன்னியருக்கு பாரமாக ஜீவனம் நடத்துவதும் அன்னியர் சொத்துக்களின் மேல் ஆசையும் நண்பர்கள் சகோதரர்களுக்கு வேண்டாதவனாக இருக்கும் நிலைமையும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் கோழைத்தனமும் ரோகங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் மூன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனோதைரியமும் எவரையும் வசப்படுத்திவிடும் தன்மையும் எங்கும் தனக்கு நண்பர்களையும் உதவிசெய்பவர்களையும் உண்டாக்கி கொள்ளும் தன்மையும் பகைவர்களை சுலபமாக வெற்றி கொள்வதும் பின் சகோதரர்களுக்கு மேன்மையும் அதிகமான சந்ததிகள் உண்டாவதும் ஆன மேலான பலன்கள் உண்டாகும்.
மூன்றாமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சகோதரர்களுக்கு மேன்மையும் தனக்கு வசதிகள் சுபங்கள் குறைவும் எப்பொழுதும் தான் மற்றவர்களுக்காகத் தன் சுகவசதிகளை விட்டுக் கொடுத்து அவர்களுக்காக அலைய நேர்வதும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் கஷ்டங்களும் அவளால் சுகக்குறைவும் தன் பிள்ளைகளுக்கு மேன்மையும் சகோதரர்களுக்கு நன்மைகளும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஆறாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் குடும்ப கலகமும், சகோதரர்களுடன் விரோதமும் தன் பிள்ளைகளுக்குச் சம்பாத்தியம் ஏற்படுதலும் தன் வயதிலும் மூத்த பெண்களிடம் தகாத இச்சை உண்டாதலும் அன்னியர் உடைமைகள் தன் வசமாதலும் மாமன் வர்க்கத்தார்க்கு உடல் நலக்குறைவும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் அரசாங்க விரோதம், பொதுஜனப்பகை, திருடனாக அல்லது அன்னிய ஸ்திரீகளிடம் தொடர்பு உடையவனாக வாழ்க்கை நடத்தல் பலவிதமான கஷ்டங்களும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் எட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதர நஷ்டமும் தனக்கொரு உதவி இல்லாமல் திக்கில்லாமல் அலைதலும் கொடூர பாவ செயல்களில் விருப்பமும் அன்னியரால் அல்லது அரசாங்கத்தால் தண்டனைகளை அனுபவிப்பதும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் ஒன்பதாம் இடத்தில் இருந்த தசை /புத்தி நடத்தினால் சகோதரர்களுக்கு பாக்கிய விரத்தியும் தனக்கு மனைவியால் மேன்மை உண்டாவதும் தகப்பனுக்குக் கஷ்டங்களும் கெட்டப் பெயரும் பிதுர்ரார்ஜித சொத்துக்கள் விரயமும் உண்டாகும்.
மூன்றாமாதிபன் பத்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் தொல்லைகளும் மற்றவர் சகாயத்தால் தொழிலில் மேன்மை அடைவதும் பிறர் சொத்துக்களும் தன் வசமாதலும் அன்னியப் பெண் ஒருத்தியின் தொடர்பு உண்டாவதுமான பலன்கள் நடைபெறும்.
மூன்றாமாதிபன் பதினொன்றாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தன லாபங்களும் எப்பொழுதும் காமவேட்கையும் அதனால் பொருட் செலவும் உடல் நலக்குறைவும் உண்டாகும், அன்னியரிடம் வேலை செய்வதால் அல்லது அன்னியரால் தன லாபங்கள் உண்டாகும்.
மூனறாமாதிபன் பனிரெட்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் கெட்ட வழிகளில் சம்பாத்தியமும் பெண்களால் லாபங்களும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையும் தந்தைக்குத் திருட்டு பட்டம் அல்லது கெட்டப் பெயரும் உண்டாகும்.
மேற்படி பலன்களை மற்ற திசைகளில் மூன்றாமாதிபன் புத்தி நடைபெறும் காலங்களுக்கும் இணைத்து பலன் அறிந்து கொள்ள வேண்டும்.
நான்காமாதிபன் தசை/புத்தி
நான்காமாதிபன் லக்கினத்தில் தசை /புத்தி நடத்தினால் உயர்ந்த கல்வியை அடைவதும் தாயால் சுகமும் எப்பொழுதும் சொந்த வீடு வாகனம் முதலான வசதிகள் உடைய வாழ்க்கை உண்டாவது, தன்னுடைய கல்வி செல்வம் முதலானவற்றை விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அடக்கமாகப் போகும் சுபாவமும் உண்டாகும்.
நான்காமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் நிலம் வீடு வாகனங்கள் முதலானவற்றிலிருந்து வருமானங்களும் தான் கற்ற வித்தையால் நல்ல சம்பாத்தியமும் உண்டாகும். ஆசை நாயகிகள் ஏற்படுவர் கெட்ட சகவாசங்களும் உண்டாகும். சகல வசதிகளும் உடைய வாழ்க்கை அமையும்.
நான்காமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சகோதரர்களுக்கு சுகபாக்கியங்கள் விருத்தியாகும். செல்வமும் வசதிகளும் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும்.
நான்காமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மேலான கல்வியும் ஞானமும் புத்தியும் உண்டாகும். மந்திரி பதவி போன்ற பெரிய பதவிகள் உண்டாகும். பலவிதமான சுகங்களும் சௌக்கியங்களும் உண்டாகும் உற்றார் உறவினர், சகோகரர்கள் பந்துக்கள் புடை சூழ எல்லோருக்கும் இனியவனாக வாழ்க்கை நடத்துவான்.
நான்காமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் மிகவும் மேலான வாழ்க்கையே உண்டாகும் பக்தியும் மேலான விஷயங்களில் ஈடுபாடும் சொந்த சம்பாத்தியங்களால் மேன்மையும் உண்டாகும்.
நான்காமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பகைவர்களால் சுபக்குறைவும் தன் வீடு முதலான சொத்துக்கள் அன்னியர்களால் அபகரிக்கப்படுதலும் தன் தாயே தன் விரோதமாதலும் திருட்டுத்தனம் போன்ற கெட்ட காரியங்களில் பிரவேசமும் பில்லி சூனியம் போன்றவைகளால் கஷ்டங்களும் உபாதைகளும் உண்டாவதுமாகும்.
நான்காமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் மனைவியால் சுகபாக்கியங்கள் அடைய நேரிடும். மாமனார் வீட்டு மாப்பிள்ளையாக ஆகிவிடுவதும் உண்டு. மற்றவர் முன்னிலையில் ஊமைப்போல் இருக்கும்படியான நடத்தையும் ஏற்படும். வித்தை வாகனம், புகழ் எல்லா வசதிகளம் உண்டாகும்.
நான்காமாதிபன் எட்டாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் ஏதாவத ஒரு முயற்சியில் சுகங்களைத் தியாகம் செய்து வாழ நேரிடும். பெரிய விஞ்ஞானிகள், புதுமைகளைக் கண்டு பிடிப்பவர்கள் யாத்ரீகர்கள் மலை ஏறிகள் ஞானிகள் முதலியவர்களின் ஜாதகங்களில் இப்படிப்பட்ட கிரக அமைப்பு ஏற்படுவதுண்டு.
நான்காமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பித்ரு பாக்கியத்தினால் சுகபாக்கியங்களை அடைவதும் கல்வி மேன்மையும் வாகனசுகமும், தந்தையின் தொழில் அல்லது அவரால் ஸ்தாபிக்கப்பட்ட வியாபார ஸ்தாபனத்தால் மேன்மையும் சகல சுகங்களும் உண்டாகும். டாக்ஸி, பஸ் தொழில்கள் மேன்மையடையும்.
நான்காமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேன்மையால் சுகபாக்கியங்களை அடைவான். தன் சொந்த முயற்சியால் ஒரு தொழிலை ஸ்தாபித்து பிரபலமாக மேன்மைக்கு கொண்டு வர முடியும் தீர்த்த யாத்திரை ஸ்தலதரிசனம் போன்ற புண்ணிய லாபங்களும் ஏற்படும்.
நான்காமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சி இன்றியே சகல சுகபோகங்களும் வந்தடைவதும் பொழுது போக்காக செய்யும் தொழில்களாலும் நல்ல லாபங்களும் ஆயினும் மனதில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருப்பினும் இளமையிலேயே தாயை இழந்து விட நேர்வதும் உண்டு.
நான்காமாதிபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எப்போதும் நோயாளியாக இருப்பான். தன் சொந்த முயற்சியில் சுயராஜ்ஜித சொத்துக்களைச் சம்பாத்திப்பான் பலவித தான தர்மங்களைச் செய்து புகழடைவான். எவ்வளவு சம்பாதித்த போதிலும் தான் ஒரு சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் மனக்குறையுடன் இருக்கும்படி நேரிடும்.
ஐந்தாமாதிபன் தசை/புத்தி
ஐந்தாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் சொந்த முயற்சியாலும் தாயாதிகள் ஆதரவாலும் முன்னுக்கு வருவான் இரகசியங்களை அறியக்கூடிய சாமர்த்தியமும் திறமையும் உண்டாவதால் சோதிடம் மாந்திரீகம் போன்றவற்றில் திறமையும் புகழும் ஏற்படும். சூரியன் அல்லது புதனாக இருந்தால் துப்பறியும் வேலை பூமிக்கு அடியில் புதைந்துள்ள பொருள்களை கண்டு பிடித்தல் போன்ற திறமைகளும் உண்டாகும். செல்வமும் புகழும் ஏற்பட்டு மேலான வாழ்க்கை அமையும்.
ஐந்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எதிர்பாராத தனலாபங்கள் உண்டாகும். பந்தயம் சூதாட்டம் ஹேஷ்ய வியாபாரங்கள் முதலியவற்றில் லாபங்கள் உண்டாகும். வெகு செல்வந்தராகவும் முன்கோபியாகவும் இருக்க நேரிடும்.
ஐந்தாமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் பொருள் இலாபம், காமசுகம் முதலியவை பற்றிய சிந்தனையாக இருப்பதும் வெகுகாலம் கழித்து புத்திர பாக்கியம் உண்டாதலும் தன் பிள்ளைகளிலோன்று பிரபலம் அடைந்து தனக்கு உதவியாக அமைவதும் உண்டாகும். புத்திர தோஷங்களும் ஏற்படும்.
ஐந்தாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தனமும், புகழும் சுக வாழ்க்கையும் உண்டாகும். பெண்ணாக இருந்தால் நீண்டகாலம் தாய் வீட்டிலேயே இருந்து சகல சௌக்கியமாக இருப்பாள். மந்திரி பதவி அல்லது பெரிய ஆசிரியர் பதவியும் உண்டாகும். கல்வி மேன்மையால் புகழும் இலாபங்களும் உண்டாகும். பெரிய பதவியும் கிடைக்கும்.
ஐந்தாமாதிபன் ஐந்தாமிடத்திலேயே இருந்து தசை /புத்தி நடத்தினால் அத்திசையின் ஆரம்பத்தில் புத்திர தோஷங்கள் உண்டாகும். மேலான அறிவும் ஞானமும் உலகம் புகழத்தக்க குரு பதவியை அடைவதும் உண்டாகும் கல்விச் செருக்கால் சட்டென்று கோபம் கொள்பவராக இருப்பார்.
ஐந்தாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் பிள்ளைகளே தனக்குச் சத்துரு ஆதலும் அவர்களால் மனோ வியாகூலங்களும் உண்டாகும். பிள்ளைகள் சுய சம்பாத்தியத்தால் முன்னுக்கு வருவார்கள்.
ஐந்தாமாதிபன் ஏழாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தன லாபங்களும் தன் எதிரிகளையும் வசப்படுத்தி நடத்தும் திறமையும் மேலான பதவியும் புகழும் மேலும் மேலும் முன்னேற்றங்களும் உண்டாகும்.
ஐந்தாமாதிபன் எட்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் காசநோய் அல்லது வயிற்று நோய்களால் பலத்தத் தொல்லைகளும் நல்ல மனமில்லாதவராக வெறுக்கத் தக்க நடத்தையும் புத்திரசுகம் இல்லாமையும் உண்டாகும். பெரும்பாலும் பெண் குழந்ததைகளே உண்டாகும்.
ஐந்தாமாதிபன் ஒன்பது அல்லது பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகல பாக்கியங்களும் நிறைந்த மேலான வாழ்க்கை உண்டாகும், எல்லோராலும் புகழ்ந்து பாராட்டத்தக்க பெரிய ஆசிரியர் அல்லது கவிஞராகப் புகழ் பெறுவார். அரசர்களுக்குச் சமானமான வாழ்க்கை உண்டாகும். தன் குழந்தைகளும் மேலுக்கு வந்து புகழும் பெருமையும் எல்லோராலும் கொண்டாடத்தக்க நிலையும் அடைவார்கள்.
ஐந்தாமதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெகு செல்வமும் அநேக புத்திரர்களும், அதிகமான புகழும் உண்டாகும். ஜனத் தலைமையும் புகழும் உண்டாகும்.
ஐந்தாமாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தனக்குப் புத்திரர் இல்லாமல் தத்து எடுத்து அல்லது விலைக்கு ஒரு பிள்ளையை வாங்கி வளர்க்க நேரிடும். புத்திரபாக்கியம் ஏற்பட்ட போதிலும் தன் மக்கள் தன்னை விட்டுப் பிரிந்தோ, மறைந்தோ, போகும்படியாக நேரிடும் தனக்கும் பிள்ளைகளுக்கும் சரியான உறவு இருக்காது. பிள்ளைகளால் கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாகும், சதாகலமும் காமசிந்தையாய் பொருள் விரயம் செய்ய நேரிடுவது உண்டு.
ஆறாமாதிபன் தசை/புத்தி
ஆறாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் எப்பொழுதும் நோயளியாக அல்லது கடனாளியாக இருப்பதும் விபத்துக்குள்ளாக நேர்தலும் வழக்கு வியாஜ்ஜியங்களில் மனோ துக்கம் அடைதலும் மரணத்திற்குச் சமமானகண்டங்களும் ஏற்படும்.
ஆறாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் நிலையான தனமில்லாது அவதிபடுதல் தன் சொத்துக்கள் அன்னியரால் கவரப்படல் வாக்கினால் விரோதங்கள் ஏற்படுதல் குடும்ப சுகமின்மை முதலான தீயபலன்கள் நடைபெறும் பகைவர் அல்லது கள்வராலும் நோய்களாலும் பொருள் நஷ்டங்கள் உண்டாகும்.
ஆறாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பொருள் லாபங்களும் அன்னியர் பொருள்களை தான் அபகரித்தலும் நண்பர்கள் சகோதரர்களுடன் விரோதங்களும் பொய் வஞ்சகம் கோள் சொல்லுதல் போன்ற கெட்ட குணங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தரித்திரம் எவ்விதத்திலும் சுகம் இல்லாமை சரியான கல்வி இல்லாததால் கீழான வேலைகளைச் செய்து பிழைத்தல் கஷ்ட ஜீவனம் முதலானவை உண்டாகும்.
ஆறாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர நஷ்டங்களும் புத்திர விரோதங்களும் உண்டாகும் அதிகமான கல்வி வசதியோ சூட்சும அறிவோ ஏற்படாத போதிலும் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்தலும் திருட்டு புத்தியும் தீயவர் நேசமும் கெட்ட காரியங்களில் மனம் செல்வதும் பெண்களிடம் விரோதமும் உண்டாகும்.
ஆறாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால், முரட்டுத் தைரியமும் வீரசாகச செயல்களில் விருப்பமும் அவ்வழியே பணம் சம்பாதித்தலும் தன்னுடைய சொந்த பந்துக்களை விரோதம் செய்து கொண்டு அந்நிய பந்துக்களை அடைவதும் சத்துரு ஜெயமும் அதனால் பணவசதிகளும் உண்டாகும் திடீரென்று கண்டங்களும் ஏற்படலாம்.
ஆறாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு தனக்கு விரோதமாகவும் அல்லது பயத்தால் அடங்கி ஒடுங்கி நடப்பதும் பகை இல்லாமையும் கல்வி செல்வம் இருந்தபோதிலும் தொழில் முதலானவற்றிலும் ஈடுபாடு கொள்ளாமலும் யார்மேலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், அற்ப லாபங்களும் அற்ப சுகங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் அஷ்மத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் திடீரென்று மரணபயம் உண்டாகும் அல்லது சதா ரோகத்துடன் அழுந்திக்கொண்டு கிடக்க நேரிடும். பெண்ணாக இருந்தால் கணவன் மரணமடைவான் தரித்திரமும் கஷ்டங்களும் பலவிதமான துக்கங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தை, தந்தையின் சொத்துக்கள் முதலானவற்றை இழக்க நேரிடுவதும் சுகபாக்கியங்கள் குறைவும் மரம் வெட்டுதல், கல் உடைத்தல் போன்ற தொழில்களைச் செய்து ஜீவிக்க நேர்வதும் உண்டாகும்.
ஆறாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் முடக்கமும், அன்னியர் தயவால் பிழைக்க நேர்வதும் புகழ்கீர்த்தி நஷ்டமும் உண்டாகும் தொழில் அல்லது வியாபாரத்தில் கடன்காரர் அபகரித்துக் கொள்வார்கள் நோயால் பொருள் நாசம் உண்டாகும்.
ஆறாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கஷ்ட ஜீவனமும் மூத்த சகோதரனுக்கு கண்டமும் அன்னிய பெண்களின் சேர்க்கையும் அதனால் பொருள் நஷ்டங்களும் உண்டாகும். அன்னியருடைய சொத்துக்கள், பெண்கள் மேல் நாட்டமும் அவற்றைத் தனக்கு உடைமை ஆக்கிக்கொள்வதும் உண்டாகும்.
ஆறாமாதிபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால், கல்நெஞ்சமும் ஜீவஹிம்சையும், பாவகாரிய சிந்தனையும் கொலை களவு காமம் போன்ற தீய வழிகளிலேயே நடப்பதும் அவ்வழியிலேயே பணத்தைச் சேர்த்துக் தானும் அனுபவிக்காமல் புதைத்து வைப்பதும் தலைமறைவாக வசிக்க நேர்வதும் உண்டாகும்.
ஏழாமாதிபன் தசை/புத்தி
ஏழாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் இளமையில் பெண்களை சுற்றி அலையும் நடத்தையும் எப்பொழுது காமசிந்தனையாய் இருக்கும். மனைவிக்கு அடங்கிய கணவனாக இருப்பதும் அந்நிய பெண்களின் மேல் நாட்டமும் வெளியூர் சஞ்சாரமும் கூட்டு வியாபாரங்களில் இலாபங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பெண்களால் சம்பாத்தியமும் அவர்களாலேயே செலவுகளும் வழக்குகளால் பொருள் நஷ்டமும் அவமானங்கள் அபாயங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் குழந்தைகள் கர்ப்பத்திலேயே இறந்து பிறக்கும் மனைவியால் சுகம் உண்டாகாது சுமாரான இலாபங்களும் வெளியூர் சஞ்சாரமும் பிராயணங்களின் மூலம் நடக்கும் தொழில்களின் விருத்தியும் உண்டாகும்.
ஏழமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அதிகமான காம வேட்கையும் எப்பொழுதும் பெண்களே கதி என்று கிடப்பதும் தன் மனைவிக்கு கெட்டப்பெயர் உண்டாவதும் புதுக்காரியங்களில் ஈடுபாடும் அரசியல் வெற்றிகளும் உண்டாகும்.
ஏழாமதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நல்ல நடத்தையும் குணங்களும் உண்டாவதும் நற்குணமும் நன்னடத்தையும் உடைய மனைவி வாய்க்கப் பெறுவதும் மேலான நடத்தையும் சகல சம்பத்துக்களும் நிரம்பிய வாழ்க்கை உண்டாவதும் கூடும்.
ஏழாமதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் மனைவி தன்னைக்காட்டிலும் அதிகமான காமியாக இருத்தலும், அவளால் பொருள் செலவும் நோய்களும் உண்டாவதும் சுகம் இல்லாமையும் உண்டாகும்.
ஏழாமதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியால் புகழும் பேறும் அடைவதும், மனைவிக்கு அடங்கி கணவனாக இருப்பதும், தனக்கென்று எதுவும் இல்லாத அற்பஜீவனமும் உண்டாகும்.
ஏழாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நோயாளியான மனைவியை அடைந்து அவளுடைய பணத்திற்காக அல்லது வேறு காரணத்தால் அடிமையைப்போல் இருக்க நேர்வதும் தன் சொத்துக்களை அன்னியரிடம் இழந்து விட நேர்வதும் பிரயாணத்தில் கஷ்டங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னிய ஜாதி மதங்களைச் சேர்ந்த பெண்களின் மேல் மோகமும் பெண்களால் பாக்கியம் உண்டாவதும் அவர்களாலேயே வாழ்க்கை நடைபெறுவதும் உண்டாகும். நீண்ட காலத்திற்கு நன்மை அளிக்கத்தக்க பெரும் காரியங்களிலேயே ஈடுபாடும் ஏற்படும்.
ஏழாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெளியூர் வாசம் அன்னியதேசச் சஞ்சாரம் முதலியன உண்டாகும். வெளியூர்களில் தொழில் உண்டாகும் மனைவி கெட்ட நடத்தை உடையவளாக கெட்ட பெயர் ஏற்படும்.
ஏழாமாதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பெண்களால் அல்லது பெண்கள் விரும்பத்தக்கப்பொருட்களைத் தொழில் அல்லது வியாபாரங்களில் லாபங்களும் அதிகமான காமவேட்கையும் உண்டாகும்.
ஏழாமாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சுய முயற்சியின்றி அந்நியர் சொற்கேட்டு நடப்பதும் தரித்திரமும் கஷ்டங்களும் மனைவிக்கு நோய் ஏற்பட்டு அவளால் பொருட் செலவுகளும் காமவேட்கைக் காரணமாக தன நஷ்டங்களும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் தசை/புத்தி
அஷ்டமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவி உயிருடன் இருக்கும் காலத்திலேயோ அல்லது அவளுக்கு மரணம் எற்படுவதாலோ இரண்டாவது விவாகம் ஒன்று நடைபெறலாம். அந்நியரால் பொருள் நஷ்டங்கள் உண்டாகும். எப்பொழுதும் பொருட் செலவுகளும் தனவிரயங்களும் ஏற்படும். தரித்திர வாழ்க்கையும் அற்ப ஜீவனமும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் இரண்டாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் பொருள் நஷ்டங்களும் அந்நியரை நம்பிப் பிழைக்கும் படியான நிலைமையும் குடும்பத்தைவிட்டு பிரிந்து வசிப்பதும் ஆண்டி போன்ற நிலைமையும் தன் சொற்களுக்கு மதிப்பு இல்லாமையும் எல்லோராலும் பரிகாசம் செய்யத்தக்க வாழ்க்கையும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதர நஷ்டம், பூமி, பொருள் நஷ்டங்களும், தைரியமின்மை பலக்குறைவும் நபும்ஸகத் தன்மையும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாய்க்குக் கண்டம், வீடு வாசல் வாகன நஷ்டம், தரித்திர வாழ்க்கை, உற்றார் உறவினர்களைப் பிரிந்து யாருடைய ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியாக இருக்கும் நிலைமை முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர சோகம் உண்டாதல் பைத்தியம் சித்தப்பிரமை அல்லது புத்தி மாறாட்டம் எற்படல் வயிற்றில் ரோகங்கள், வாக்கிய நாசங்கள் மாமன் வர்கத்திற்கும் கஷ்டங்கள் முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சந்ததி நாசம், தனக்கும் கண்டங்கள் சர்பபயம், உயரத்திலிருந்து விழுவதால் அபாயம், வாதரோகத்தால் கால்கள் முடக்கம், பொருள் நஷ்டங்கள் சகலவிதமான துன்பங்களும் உண்டாகும் மரணமும் ஏற்படக்கூடும்.
அஷ்டமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு கண்டம், இரண்டாவது மனைவி ஏற்படல் தன் மருமகனுக்குக் கண்டம், பிரயாணங்களில் அபாயம், அந்நியரால் பொருள்கள் கவரபடல், வழக்கு வியாஜ்ஜியங்களில் தோல்வி போக சக்திக் குறைவு முதலிய பலன்கள் உண்டாகும்.
அஷ்டமாதிபன் அஷ்டமத்திலேயே இருந்து தசை /புத்தி நடத்தினால், வஞ்சனை, களவு போன்ற கெட்ட வழிகளிலும் குறுக்கு வழிகளிலும் பணம் சம்பாதித்தல் மனைவிக்கு கெட்ட பெயர் உண்டாதல் மனைவியின் சம்பாதியத்தால் அல்லது அன்னியர் தனத்தால் பிழைப்பு நடத்துவது போன்ற பலன்கள் உண்டாகும்.
அஷ்டமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் துணிந்து பாவங்களை செய்வதும், தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபடுதலும், அன்னியர் சொத்துக்கள், மனைவியர் மீது ஆசை கொண்டு கவர முயற்சிப்பதும் அதனால் கஷ்டங்களையும் அவமானங்களையும் அடைவது தர்மம், ஒழுங்கு மதம் ஆகியவற்றுக்கு எதிரான நடத்தையும் பிரச்சாரம் செய்வதும் உண்டாகும்.
அஷ்டமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் நாசம், பெயர் மங்குதல் மரணச் சடங்குகளில் கலந்து கொள்ள அல்லது அவற்றைச் செய்ய நேர்தல் நாடுவிட்டுச்செல்லல் சென்றவிடத்தில் எல்லாம் கஷ்டங்கள், பிச்சைக்காரனுக்குச் சமமான வாழ்க்கை முதலியன உண்டாகும்.
அஷ்டமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மூத்த சகோதரன் மரணம், தான் சம்பாதித்த எல்லாப் பொருள்களையும் இழந்து தரித்திரமடைதல், தன் பிள்ளைகளுக்குத் திருமணம் முதலான சுபகாரியங்களைச் செய்து வைக்க முடியாத கஷ்டங்கள், அதனால் மனோதுக்கம் முதலியவை உண்டாகும்.
அஷ்டமாதபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான கஷ்டங்கள் மனோதுக்கங்களும் ஆண்மைக் குறைவும், நித்திரை இல்லாது தவிக்கும் படியான நிலைமையும், கெட்ட நடத்தையும் பாவ காரியங்களில் ஈடுபாடும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் தசை/புத்தி
ஒன்பதாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தன் முயற்சியின்றியே பாக்கியங்கள் உண்டாதலும் பொருள் லாபங்கள் சொத்துக்கள் விருத்தி குடும்பசுகம் அதிகரிப்பதும், எண்ணிய காரியங்களில் விருப்பமும் தர்ம சிந்தை மேலான எண்ணங்கள் புகழ் முதலியன விருத்தியாவதும் ஆக மிகவும் மேன்மையான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் இரண்டாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மேலும் மேலும் பொருட்சேர்க்கையும், சகல வித்தைகளிலும் பண்டிதனாகி புகழும் பெருமையும் அடைவதும் கதா காலட்சேபம் அல்லது ஆன்மீகப் பிரசங்கங்கள் மூலம் தனமும் புகழும் சேர்வதும் மனைவியிடம் அதிகமான பிரியமும் புத்திரபாக்கியங்களும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் சகோதரர்கள் உண்டாவர். சகோதரர்களுக்கு நன்மை உண்டாகும். செல்வம் சொத்துக்களின் மேல் அதிகமான இச்சையும் அவற்றை அடைவதற்கான கடும் முயற்சியும் உண்டாகும். தந்தை வழி சொத்துக்களுக்குச் சில விரயங்கள் ஏற்படும்.
ஒன்பதாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வியில் மேன்மையும் அழகாகப் பேசும் சாமர்த்தியமும் பெரிய அதிகாரியாக அல்லது தொழிலதிபராக அல்லது இராஜ்யாதிகாரியாக உயர்வு பெறுவதும் அரசாங்க கொளரவங்களும், புகழும் பாராட்டும் மகோன்னதமான நிலைமையும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் தர்ம காரியங்களிலேயே மனம் செல்வது மேலும் மேலும் பாக்கிய விருத்தியும் திருமணம் மக்கட்பேறு போன்ற சுகங்கள் உண்டாவதும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதும் குருபூஜை சிவபூஜை முதலான காரியங்களில் ஈடுபடுதலும் தீர்த்தயாத்திரையும் தயாள குணமும் நீடித்து நிற்கும் படியான தர்மகாரியங்களை செய்து வைத்தலும் அதனால் புகழ் நிலைத்திருக்கும்படியாகச் செய்வதும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஆறாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பித்ரு பாக்கியத்தை இழந்து இளமையிலேயே தரித்திரத்தை அடைவதும் அம்மான்மாரால் வளர்க்கப்படுவதும் நோய்களாலும் பகைவராலும் சொத்துக்கள் அழிவும் கஷ்டங்களும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நல்ல மனைவியும் அவளால் சுகபாக்கியங்களை அடைவதும் உண்டாகும். அவன் திசையில் மேலும் மேலும் பொருள் இலாபங்களும் முயற்சிகளில் வெற்றியும் பிரயாணங்களால் நன்மைகளும் புகழும் சந்தோஷமும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் இளமையிலிருந்தே வறுமை அனுபவிக்க நேரும். தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்கள் நாசம், மூத்த சகோதரர்களுக்குக் கஷ்டங்கள் எவ்வித பாக்கியமும் இன்றி பிறர் கையை எதிர்பார்த்து வாழும்படியான நிலை, மேலும் மேலும் துக்கம் முதலானவை உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பல வழிகளிலும் சொத்து சுகங்கள் உண்டாவதும் இராஜ்யாதிகாரி அல்லது மடாதிபதி போன்ற உயர்ந்த பதவி ஏற்பட்டு புதுச்சொத்துக்களை நிர்வாகம் செய்யும்படியான வாய்ப்புக்கள் உண்டாவதும் தான தர்மங்களால் வெகு புகழை அடைவதும் குடும்பத்தில் சகல நன்மைகளும் ஏற்படுவதும், தன் சகோதரர்களுக்கு நன்மையும் உண்டாகும்.
ஒன்பதாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அற நிலையங்களில் உத்தியோகம் அல்லது அவற்றின் நிர்வாக பொறுப்பை ஏற்றல் கிராமம் நகரம் அல்லது நாட்டின் தலைவராதல் வெகு புகழ் வெகு சம்பாத்தியம் சன்மானங்கள் முதலான சகல நன்மைகளும் உண்டாகும்.
ஒன்பதாமதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அநேகவித சன்மானங்களை அடைவதும் பந்தயம் சூதாட்டம், லாட்டரி போன்றவைகளில் வெற்றியும் காதல் கேளிக்கைகளில் விருப்பமும் தயாளகுணமும் உண்டாகும்.
ஒன்பதாமதிபன் பன்னிரேண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தையின் சொத்துக்கள் விரயமாதல் தரித்திர வாழ்க்கை, மிகவும் கஷ்ட ஜீவனம் முதலியவை உண்டாகும்.
பத்தாமாதிபன் தசை/புத்தி
பத்தாமதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கவித்துவ சக்தியும் தான் இருந்த இடத்திலிருந்தே தொழிலும் புகழும் அடையும் படியான யோகமும் மேலும் மேலும் செல்வமும் புகழும் விருத்தியாவதும் உண்டாகும்.
பத்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எழுத்தாளர் அல்லது பிரசங்கியாக புகழும் பொருளும் அடைதலும் தொழில் விருத்தியும் குடும்ப சுகங்களும் உண்டாகும்.
பத்தாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் விருத்திக் குறைவும் தன் சகோதரர்களை அண்டிப்பிழைக்கும் நிலைமையும், அல்லது சொத்துக்களால் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவனமும் சிறு சிறு தொழில்களை ஆரம்பித்துவிட்டு விடுதலும் எதிலும் நிலையற்ற தன்மையும் உண்டாகும்.
பத்தாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வி மேம்பாட்டால் உயர்ந்த பதவி அடைதலும் வாகன லாபம் அல்லது வாகன சம்பந்தமான விருத்தியும், குருபக்தி, தெய்வபக்தி, முதலானவைகளும் தாய் தந்தையரிடம் விஸ்வாசமும் அவர்களுக்கு நன்மையும் ஏற்படுதலும் புகழ் பராக்கிரமம் பாக்கியம் ஆகியவை விருத்தியாவதும் உண்டாகும்.
பத்தாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான தனலாபங்களும் பல தொழில்கள் ஆரம்பித்து நடத்தி வெற்றியடைதலும் தொழிலிலே கவனமாக இருப்பதும் தொழில் சம்பந்ததப்பட்டதையும் வெகு விரைவில் கிரகித்து கொள்ளும் தன்மையும் புத்திர லாபமும் தன் மக்கள் தனக்கு மீறிய அறிவும் செல்வமும் உடையவராதலும் அல்லது தன் பிள்ளைகளிலோருவன் தனக்கு அடங்காமல் பிரிந்து போய் விடுவதுமான பலன்கள் நடைபெறும்.
பத்தாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் தொழில் புகழ் முதலியவற்றை எதிரிகள் கைகொள்வதும் அல்லது அவற்றை வேறொருவனுக்கு விற்றுவிட்டு தான் புதிய தொழிலை ஆரம்பிக்க முயல்வதும் தொழில் இல்லாமல் அலைய நேர்வதும் பிற்பகுதியில் தொழில் வாய்ப்பும் சுகமும் உண்டாவதும் உண்டாகும். மொத்தத்தில் அலைச்சலும் கஷ்டங்களுமே அதிகமாக இருக்கும்.
பத்தாமாதிபன் ஏழாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் வெளியூர் அல்லது அன்னிய நாட்டில் தொழில் ஏற்படுவதும் மனைவியின் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பொறுப்புகள் உண்டாவதும் மனைவியின் பணத்தைக்கொண்டு தொழில் நடத்தி மேலான நிலைக்கு வருதல் போன்ற பலன்கள் உண்டாகும். பாபக்கிரமாக இருந்தால் கெட்ட வழிகளில் சம்பாத்தியம் ஏற்படும்.
பத்தாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் நோயின் காரணமாக தொழில் முடக்கம் ஏற்படும். அபவாதம், கெட்டப் பெயர், தொழில் நஷ்டங்கள் பலத்த நஷ்டம் முதலானவை ஏற்படலாம். எவ்வித தொழிலும் இல்லாமலும் அன்னியரை அண்டிப் பிழைக்கும் படியான நிலைமையும் தேசாந்திரம் போகும்படியான நிலைமைகளும் உண்டாகும்.
பத்தாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னை தந்தையர் தெய்வகுருபக்தி அவர்களுக்கு சுகமும் ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் நெறிதவறாத நடத்தையும் ஏற்படுவதும், அதிகமான பாக்யம் புகழ் இல்லாத அடக்கமான வாழ்க்கையும், துறவு பூணும்படியான அல்லது சன்யாச மனப்பான்மையும் உண்டாகும்.
பத்தாமாதிபன் பத்தாமிடத்தலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வி மேன்மையும் மேலான தொழிலில் தலைமை ஸ்தானமும் புகழும் உண்டாகும். தொழிலில் நேர்மையும் முறை பிசகாத பண்பும் சத்திய நெறி நடத்தலும் புகழும் கௌரவமும் உண்டாகும்.
பத்தாமாதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழிலில் மேலான நிலைமையும் தன் முயற்சி இன்றியே லாபங்கள் உண்டாதலும் பலவிதமான வருமானங்களால் சொத்து சுகம் ஏற்பட்டு எப்பொழுதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவித்தலும், புத்திரலாபங்களும், புத்திரர்க்கு சுகங்களும் உண்டாவதுமாகும்.
பத்தாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் நஷ்டங்களும் எவ்விதத் தொழிலும் செய்ய சக்தியில்லாதவனாக இருப்பதும் தொழிலில் பகைவரால் நஷ்டங்களும் அடிமைப் பிழைப்பும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் தசை/புத்தி
பதினொன்றாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன் பெயர் புகழ் முதலானவற்றைக் கொண்டே சம்பாத்தியங்கள் உண்டாவதும் மிகவும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கையும் நல்ல குணமும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பரந்த நோக்கமும் நாவன்மையும் எழுத்து பேச்சுத் திறமைகளால் பொருள் லாபங்களும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பந்தயசூதாட்ட வியாபாரங்களில் லாபங்களும் புதையல் கிடைத்தது போல் சொத்துக்கள் வந்து சேர்வதும் தன் வாக்கினாலேயே லாபங்களை அடைவதும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். தானாக பொருள் வந்து சேரும். தீர்த்த யாத்திரை மகான்களின் சேர்க்கை முதலியன உண்டாகும். சகோதரர்களுக்கு லாபங்கள் உண்டாகும். ஆலயங்களைக் கட்டுதல், அற நிலையங்களை ஸ்தாபித்தல் போன்ற பொறுப்புக்களையும் ஏற்று நிதி திரட்டி அவற்றை நடத்தி வைக்கும் படியான பாக்கியமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கல்வியால் மிக உயர்ந்த பதவியை அடைதல், ஞானியாதல் எல்லாவிதங்களிலும் சுகசௌக்கியங்கள் நிறைந்த வாழ்க்கையும் சகல நன்மைகளும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை /புத்தி நடத்தினால் புத்திர லாபங்கள் ஏற்படுவதும், தனக்குத் தன் புத்திரர்களால் லாபங்கள் உண்டாவதும் மேலும் மேலும் சொத்த சுகங்கள் விருத்தியாவதும் சகலசித்திகளும் நடைபெறும் மாந்திரீகப் ஜோதிடம் போன்ற வித்தைகளும் அறியும் சக்தியும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் பகைவரால் தொல்லைகளும் அன்னிய தேசத்தில் அன்னியரிடம் கைகட்டி பிழைக்கும் படியான நிலைமையும் சொத்து சுகம் இல்லாத பரதேசி போன்ற வாழ்க்கையும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவிக்கு மரணமும் இரண்டாவது அல்லது மூன்றாவது விவாகம் ஏற்படும். அன்னிய தேசங்களில் சஞ்சரிப்பதன் மூலம் லாபங்கள் உண்டாகும். அதிகமான காமவேட்கையும் அன்னிய ஸ்திரீகளை அடைவதும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தன்னுடைய சக்தி யுக்தி உழைப்பு முதலியவற்றால் அன்னியரே லாபம் அடைவார்கள் தனக்கு அற்ப லாபங்களே உண்டாகும். குடும்பத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் படியான நிலைமையும் உண்டாகும். எப்பொழுதும் எதற்காவது ஏங்கிக் கொண்டே இருக்கும கேவலமான வாழ்க்கை உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தான தர்மங்கள் யாக எக்கியங்கள் செய்து புண்ணிய லாபங்களை அடைவதும் அரசர்களாலும் பிரபுக்களாலும் பூஜிக்கத் தக்க நிலைமையும் தர்மம் தவறாத வாழ்க்கையும் மதியூகமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தொழில் மேதையாக விளங்குவதும் தான் கூறும் ஆலோசனைகளுக்காகவே லாபங்களை அடைதலும் தொழிற் திறமைக்காக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க நிலைமையும் சகல சுகங்களும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் பலவிதமான லாபங்களும் சுகபாக்கியங்களும் தாமே வந்தடைதலும் அழகிய இளம்பெண்களின் சகவாசமும் கலைத்திறமைகளும் கல்வியால் பிரகாசமும் உண்டாகும்.
பதினொன்றாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அதிகமான காதல் வேட்கையும் பெண்களை சுலபமாக வசீகரம் செய்யும் சக்தியும் காமலீலைகளால் பொருள் விரயமும் உண்டாகும்.
பன்னிரண்டாமாதிபன் தசை/புத்தி
பன்னிரண்டாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் உடல் நலக்குறைவும் கபம் சம்பந்தமான ரோகங்களும் கல்வியும் செல்வமும் இல்லாத தரித்திர வாழ்க்கையும் உண்டாகும் ஆண்மைக்குறைவு, தாம்பத்திய சுகம் இலலாமையும் உண்டாகும் தன்னம்பிக்கை இன்மையும், சுயமுயற்சி இன்மையும் வாழ்க்கையில் விரக்தியும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தரித்திர வாழ்க்கையும், தன்னுடைய வீடு மனைவி எல்லாவற்றையும் பிரிந்து சுற்றி அலையும் வாழ்க்கையும் விஷ்ணு பக்தியும் தயாள சிந்தையும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கோழைத்தனமும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் சகோதரர் இல்லாமையும் தனக்கு உதவி இல்லாமையும் தானே தனியாக வயிறு வளர்த்துக்கொண்டு போகும் அவல நிலைமையும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாய்க்கு கண்டமும் தரித்திர வாழ்க்கையும் வீடு வாசல் சொத்து சுகங்களை இழந்து விடும்படியான நிலைமையும் கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய வாழ்க்கையில் அக்கறை இல்லாமையும் புத்திர நஷ்டங்களும் புத்திர பாக்கியக் குறைவும் கல்வி இன்மையும் கெட்ட வழிகளில் செல்லும் மனப்போக்கும் தன்புத்திக்குறைவால் தன்னிடம் இருந்த சொத்துக்களையும் இழந்து விடுதலும் மந்த புத்தியின் காரணமாக தன்னுடைய சுகபாக்கியங்கள் எல்லாவற்றையும் இழந்து அலையும்படியான வாழ்க்கையும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னிய ஸ்திரீகளைச் சுற்றி அலைவதும் பாவசிந்தையும் புத்திர சோகங்களும் அன்னியரின் சொத்துக்களைத்தான் அடைதலும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியை இழந்து விடுதலும் அல்லது மனைவியிடம் விருப்பமின்மையும் உடல் நலக்குறைவும் சக்தி இன்மையும் பொருள் நஷ்டங்களும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கெட்ட நடத்தையும் பெண்களால் பொருள் விரயமும் பாவகாரியங்களில் மனம் பிரவேசித்து அலைதலும் நரகத்தை அடையும் படியான பாவங்களைச் செய்தலும் உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்களை இழத்தல், பெரிய காரியங்களில் ஆர்வமும் முயற்சியும் இல்லாமை கிடைத்தது போதும் என்ற அக்கறை இல்லாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகும் தன்மை, முதலானவை உண்டாகும்.
பன்னிரெண்டாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியர் காரியங்களைச் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். புத்திரபாக்கியம் இராது. தனக்கென்று தொழில், புகழ் சொத்துக்கள் முதலாவை இல்லாமல் இன்னொருவர் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் படியாக நேரிடும்.
பன்னிரெண்டாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய சுகம் இல்லாமலும் புத்திரபாக்கியம் இல்லாமலும் வாழ்க்கை நடத்த நேரிடும் சொத்து சுகம் இருந்த போதிலும் அனுபவிக்க வாய்ப்பு ஏற்படாது.
பன்னிரெண்டாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியருடைய சொத்துக்கள் மனைவியரை அடைவதும் பாவச் செயல்களில் நாட்டமும் அவற்றில் வெற்றியும் உண்டாகும் தன் பிள்ளைகளால் துக்கமும், பொருள் நாசமும் உண்டாகும் மனைவி மக்களுடன் விரோதமும் குடும்பத்தை விட்டு பிரிந்து அன்னிய ஸ்திரீயிடம் போய் சேர்ந்து விடும்படியான நிலைமையும் ஏற்படும்.
Subscribe to:
Posts (Atom)