சிவ சிவ
*துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் ....
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
*ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்* என அனுபவம்
மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று *ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்*.
இன்று ஈஸ்வரனையும்,
சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் *சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு*.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, *பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம்* என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று . *ஓம் ஆம் ஹவும் சவும்*" என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட *பாவங்கள் அழிந்துவிடும்* என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், *அதிகபட்சமாக 108 முறையும் ஜபித்து* வந்தால் தகுந்த பலன் கிடைக்கும். .
ஆகவே, சனிப்பிரதோஷ தினமான இன்றைய நாளில் *சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள்*.
சொல்லப்போனால், ஈசனை வணங்குவதற்காக அப்படியான நாட்களாக இந்த *வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்*!
சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் *சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள்*. சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்..
*ஓம் நமசிவாய*
திருச்சிற்றம்பலம்
*துன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் ....
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
*ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்* என அனுபவம்
மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று *ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்*.
இன்று ஈஸ்வரனையும்,
சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் *சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு*.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, *பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம்* என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று . *ஓம் ஆம் ஹவும் சவும்*" என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட *பாவங்கள் அழிந்துவிடும்* என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், *அதிகபட்சமாக 108 முறையும் ஜபித்து* வந்தால் தகுந்த பலன் கிடைக்கும். .
ஆகவே, சனிப்பிரதோஷ தினமான இன்றைய நாளில் *சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள்*.
சொல்லப்போனால், ஈசனை வணங்குவதற்காக அப்படியான நாட்களாக இந்த *வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்*!
சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் *சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள்*. சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்..
*ஓம் நமசிவாய*
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment