Monday, 30 October 2017

பிரச்சனம் ஜோதிடம் ...




தாம்பூலம் பிரச்சனம்
பிரச்சனம் என்றால் என்ன?

கேள்வி கேட்டு பதில் சொல்வது பிரச்சனம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க பிரசன்னம் மூலம் தீர்வு காணலாம்.

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பிரச்சனைகளை வரும் நேரத்தின் அடிப்படையில் லக்கினம் கணித்து கிரக நிலைகளைக் குறித்து பலன் கூறுவார்கள்.

சிலர் சோழிகளை பயன்படுத்தி பிரசன்னம் கூறுவார்கள்.
சிலர் 108க்குள் ஒரு எண்ணைக் கூறி அதன் அடிப்படையில் பிரசன்னம் கூறுவார்கள்.

சில சோதிடர் வரும் நேரத்தில் உள்ள பஞ்சபட்சி அடிப்படையில் பலன் கூறுவார்கள்.

சில ஜோதிடர்கள் சந்திரக்கலை,சூரியகலை என நாடியின் அடிப்படையில் பலன் கூறுவார்கள். 

இவைகள் எல்லாம் கூறுவதற்கு மிகமிக ஜோதிட அறிவு வேண்டும். ஆனால் எளிமையாக மக்கள் புரியும்படி பலன் கூறுவது தாம்பூல பிரசன்னம். இது கேரளாவில் பிரபலமானது. அடிக்கடி பயன்படுத்தி பலன் கூறுவார்கள்.

தாம்பூல பிரசன்னம்:
அமர கோசம் நூலின் கருத்துப்படி தாம்பூலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை கொடி நாகலோகத்தில் உண்டானது அதற்கு நாகவல்லி என்று பெயர்.அது மகா லட்சுமி அம்சமாகும்.

தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறமும், தாம்பூல மத்திய பாகமும் இவை இரண்டும் சிவபெருமனைக் குறிக்கும்.
வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனைக் குறிக்கும்.

ஜோதிட வல்லுநர்கள் 6 அங்குல நீளம் 2 அங்குல உள்ள வெற்றிலையின் அடிப்படையில் பிரச்சனைக்கு உரிய பதிலைக் கூறுகிறார்கள். 

தாம்பூல பிரசன்னம் பார்க்கும் விதம்: 
முதலில் பிரசன்னம் பார்க்க வருபவரிடம் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கற்பூரம் ஊதுபத்தி வாங்கிவரும்படி கூறவும்.
குறிப்பு : வெற்றிலை வாங்கிவரும்பொழுது 12 வெற்றிலைக்கு மேல் வேண்டும். எனவே ஜோதிடர் வெற்றிலையின் விலையை அறிந்து வாங்கி வரும்படி கூறவும்.

1) இவைளை வாங்கி வந்தவுடனே பிரசன்னம் பார்க்க வந்தவரிடம் அவருடைய குலதெய்வம், வண்ங்கும் தெய்வத்தை வணங்கிக் கொள்ளும்படி கூறவும்.

2) பிறகு ஜாதகர் கொண்டுவந்த வந்த வெற்றிலையின் எண்ணிக்கையை முதலில் இரண்டால் பெருக்க வேண்டும்.

3) பெருக்கி வந்த தொகையை 5ஆல் பெருக்க வேண்டும்.

4) பெருக்கி வந்த தொகையுடன் 1யை கூட்டிக் கொள்ள வேண்டும்.

5) வரும் மொத்த தொகையை 7ஆல் வக்க வேண்டும். வரும் மீதி……….

1 எனில் சூரியன்
2 எனில் சந்திரன் 
3 எனில் செவ்வாய் 
4 எனில் புதன் 
5 எனில் குரு 
6 எனில் சுக்கிரன் 
7 எனில் சனி எனக்கொள்ள வேண்டும். 

இது என்ன சித்திர குப்தர் கணக்கு என யோசிக்கிறீர்களா? 

(வெற்றிலையின் எண்ணிக்கை) எண்ணை 2ஆல் பெருக்க வேண்டும். பின்பு அத்தொகையுடன் 1யை கூட்ட வேண்டும்.இதுஏன்? என வாசகர்கள் மனதில் ஐயம் ஏற்படும். அதற்கான பதில் இதோ.

ஒரு குழந்தை பிறக்க, தாய், தந்தை ஆகிய இருவர் இணைய வேண்டும். எனவே தான் பிரசன்னம் பார்ப்பவர் கொண்டுவரும் வெற்றிலையின் எண்ணிக்கையை 2ஆல் பெருக்கிறோம்.

பின்பு இந்த உடல் 5 பூதங்களால் ஆனது என்பதைக் குறிக்க 5ஆல் பெருக்குகிறோம்.

பின்பு இந்த உடல் ஆண், பெண் இணைந்து பஞ்ச பூதங்களால் ஆன பின்பு மனிதனாக பிறக்கிறது என்பதைக் குறிக்க 1யைகூட்டுகிறோம். 

பிறகு, அந்த மொத்த எண்ணிக்கையை ஏழு கிரகங்களைக் குறிக்கும் எண்ணாகிய 7ஆல் வகுக்கிறோம். வரும் மீதியானது பிறந்த குழந்தையின் ஆத்மா கிரகமாகும். அது உள்ள இடமே லக்னம் அல்லது தாம்பூல லக்னம் ஆகும். அவ்வாறு மொத்த எண்ணிக்கையை 7ஆல் வகுத்து வரும் மீதி, தாம்பூல கிரகமாகும்.

சூரியன் என்றால் துக்கமும், சந்திரன் எனில் சுகமும், செவ்வாய் எனில் கலகமும், புதன் & குரு எனில் பணமும்;(புதன்-செய்யும் தொழிலின் மூலம் பணமும் குரு-ஞானம், ஆன்மீகப் பணி மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும்).

சுக்கிரன் எனில் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
சனி எனில் கண்டங்கள், தடங்கல்கள் ஏற்படும் .மாந்தியுடன் சேர்தால் மரணம் எற்படும்.

அடுத்து இந்த தாம்பூலம் கிரகம் உள்ள இடமே தாம்பூல லக்னம் எனப்படும். அதை எப்படி அறிவது?

பிரசன்னம் பார்க்க வந்தவர், வந்த நேரத்தில் பஞ்சாங்கத்தின் உதவியால் கிரகங்களைஉள்ள நிலையை கட்டத்தில் குறித்துக் கொள்ளலாம். பிரசன்னம் பார்க்க வந்தவர் நேரத்தின் அடிப்படையில் ராசிக்கட்டத்தில் கிரகங்களை குறித்துவிட்டோம். இனி பலன்கள் கூற வேண்டும். அதை எவ்வாறு செய்வது எனக் காண்போம்.

தாம்பூல பிரசன்ன பலன் கூறும் முறை:

1. பிரசன்னம் கேட்க வரும் நேரத்தில் அடிப்படையில் வெற்றிலையை எடுத்து பலன்கள் கூறுவோம்.

2. பிரசன்னம் கேட்க வரும் நாளில் சூரிய உதயம் + சூரிய அஸ்தமனம்= வரும் மொத்த நேரத்தை 2ஆல் வகுத்தால் கிடைப்பது அந்த நாளில் மத்திய பாகம் ஆகும்.

எடுத்துகாட்டு:
` கிருஷணகிரியில் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 11 மணிக்கு ஒருவர் பிரசன்னம் பார்க்க வருகிறார்.

ஆகஸ்ட் 21 சனி சூரிய உதயம் காலை 6.09 மணி 
சூரிய அஸ்தமனம் (அதாவது மாலை 6.31) 18.31 மணி
மொத்தம் 24.40 மணி
மத்திய பகுதி (24.40/2)=12.20 மணி
எனவே, காலை 11 மணிக்கு பிரசன்னம் பார்க்க வருபவரிடம் கொண்டு வந்த வெற்றிலையின் மேல்பகுதியிலிருத்து முதல் 12 வெற்றிலையின் அடிப்படையின் 12 பாவங்கட்கும் பலன்கள் கூற வேண்டும்.

வருபவர் மாலை 3 மணிக்கு வந்தால் அடிப்பகுதியிலிருந்து 1,2,3…………………….12 என ஒவ்வொரு வெற்றிலைகளாக எடுத்து பலன்கள் கூற வேண்டும். 

ஏன் 12 வெற்றிலையை வைத்து மட்டும் பலன் கூறுகிறோம்?

ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளதால் 12 வெற்றிலையின் அடிப்படையில் ஜாதகப்பலன்கள் கூறுகிறோம். அந்த பாவங்கள் 12ம் எதைக் குறிக்கிறது என அறிந்தால் தான் பலன்களை எளிதாக கூற இயலும் 

வெற்றிலையை ஆராய்ந்து பலன் கூறும் விதம்:

1. வெற்றிலையின் மொத்த எண்ணிக்கை 24க்கு மேல் எனில்,பூர்வீக இடத்தை விட்டு வந்து இங்கு 2 தலைமுறையாக வாழ்கிறார்கள்.

2. அடிப்பாகம் பெரிய நரம்பு உள்ள பகுதி துவாரம் :கர்ப்பிணி பெண் மரணம்.

3. நடுவில் துவாரம் : துர்மரணம் அடைந்த பிரேத தோஷம் உண்டு.

4. தாம்பூலம் கிழிந்து இருந்தால் : பூர்வ புண்ணியம் தோஷம் உண்டு. இறந்த பிரேத தோஷம் – சர்ப்ப தோஷம்.

5. நுனிப்பகுதி கிழிந்திருந்தல் : தோஷம் அப்பகுதிக்கு 

6. பலன் கூறும்பொழுது பாதகாதிபதி தொடர்பு எந்த பாவத்திற்கு வருகிறதோ அது பாதிக்கும்.

சர ராசிகளான பாதக இடம்
மேஷம் கும்பம்
கடகம் ரிஷபம்
துலாம் சிம்மம்
மகரம் விருச்சிகம்
11ம் இடம். பாதகமாகும்

7.ஸ்திர ராசிகட்கு 9 ம் இடம் பாதகமாகும் 
ராசி பாதக இடம்
ரிஷபம் மகரம்
சிம்மம் மேஷம்
விருச்சிகம் கடகம்
கும்பம் துலாம்

8.உபய ராசிகட்கு 7ம் பாதக இடம்
ராசி பாதக இடம்
மிதுனம் தனுசு 
கன்னி மீனம் 
தனுசு மிதுனம்
மீனம் கன்னி
எடுத்துகாட்டு:

7-2-2004ம் தேதி காலையில் ஒருவர் 17 வெற்றிலைகளைக் கொண்டு வந்து தந்தார்.

மொத்த வெற்றிலையின் எண்ணிக்கை : 17

பெற்றோரைக் குறிக்கும் 2ஆல் பெருக்க : 17*2=34

பஞ்சபூதத்தைக் குறிக்கும் 5ஆல் பெருக்க :34*5=170

ஆன்மா 1யைக் கூட்ட : 170+1=171

7 கிரகங்களுக்கு பங்கிட :171/7=24 ஈவு, மீதி 3

மீதி 3க்கு உரிய கிரகம் :செவ்வாய்

அது உள்ள ராசி மேஷம்.எனவே பிரசன்ன தாம்பூல ஆருட லக்கினம் செவ்வாய் உள்ள வீடு மேஷம் ஆகும்.
அன்றைய கிரக நிலைகள்:

பிரசன்னம் கேட்பவர் காலையில் வந்ததால் மேல் உள்ளா வெற்றிலையை எடுக்க 
முதல் பாவம் :உடல், வாக்கு, உருவம், சுபாவம், சுகதுக்கங்களைக் குறிக்கும்.

முதல் வெற்றிலை நிலை : சிறியது – அடியில் கறுப்பு – ஓட்டை.
எனவே, ஜாதகர் உடல் நிலை பாதிக்கலாம். ஜாதகப்படி லக்னத்த்பில் அதிபதி செவ்வாய் ராகுவுடன். எனவே பாதிப்பு இல்லை. ஏன்? குரு பார்வையால் அது போகும்.

2ம் பாவம் : தனம், குடும்பம், வாக்கு, வித்தை அதில் ஓட்டை, அழுக்கு,எனவே தோஷம் உண்டு. 
2ம் வீட்டு அதிபதி 12ல் உள்ளார். அவரை 11ம் அதிபதி பாதகாதிபதி சனி பார்க்கிறார்.மேலும் சனி வீட்டில் –மாந்தி 11ல்.எனவே,பிரேத தோஷம் உண்டு. மனைவியால் சுகம் இல்லை. கல்விக்கு விரயம். இடமாற்றம்.

3ம் பாவம் : சகோதரம், வீரம், பாக்கியம், சிறிய பயணம்
வெற்றிலையில் ஓட்டை. நல்ல பலன் இல்லை. எப்படி? மேஷத்திற்கு 11ம் அதிபதி சனி 3ல் உள்ளார். எனவே சகோதரர்களால் நன்மை இல்லை.

4ம் பாவம்: மாதா, சுகம், வாகனம், மன நிம்மதி.

4வது வெற்றிலையில் ஓட்டை நல்ல பலன் இல்லை. ஏன்?

4ம் வீட்டை செவ்வாய் பார்க்கின்றார்.3,6க்குடைய புதன் 4ம் வீட்டை பார்க்கின்றார்.5ம் வீட்டின் அதிபதி சூரியன் 4ம் விட்டை பார்க்கின்றார்.4ம் அதிபதி சந்திரனை பாதகாதிபதி சனி பார்க்கின்றார்.

மாந்திக்கு 2,7,12 பார்வை உண்டு.

எனவே,மாதாவால் கடன் உண்டு. அலைச்சல் உண்டு.

5ம் பாவம்: புத்தி – அறிவு – விவேகம் – பூர்வ புண்ணியம் – குழந்தை – பங்கு மார்க்கெட் – காதல்
வெற்றிலையில் நுனி இல்லை – அப்பளம் போல் உள்ளது.

எனவே 5ம் அதிபதி 10ல் பகை வேட்டில் 3ம்ற்றும் 6க்கு உடைய புதன் உடன்.எனவே புதல்வர்களால் பலன் இல்லை.ஆனால் 9,12க்குரிய குரு இருப்பதால் விரய செலவு உண்டு.
6ம் பாவம்: ரோகம் – கடன் – சத்ரு
வெற்றிலை நன்றாக உள்ளது.

6ம் அதிபதி சனி வீட்டில் சூரியனுடன் தொழில் செய்ய கடன்பட்டிருப்பார்.
நண்பர்களுக்காக கடன்பட்டிருப்பார்.
தாய்மாமனுக்கு கடன்பட்டிருப்பார்.

7ம் பாவம் : மனைவி
7ல் கேது வெற்றிலையில் கரும்புள்ளி. மனைவியால் சுகம் இல்லை.மனச்சங்கடம்.

8ல் பாவம்: ஆயுள் – நஷ்டம் – விபத்தைக் குறிக்கும்.
வெற்றிலையில் கரும்புள்ளி .எனவே நோய்ப்படுவான்.விபத்து உண்டு – சாக மாட்டான்.ஏன்? 8ன் அதிபதி செவ்வாய் ஆட்சி 9ம் அதிபதி – பூர்வபுண்ணிய அதிபதி – குரு பார்வை உள்ளது.

9ம் பாவம்: பாக்கியம் – தருமம் – புண்ணிய காரியங்கள் – தந்தை நிலை.
வெற்றிலை நிலை : மத்தியில் ஓட்டை
கிரக நிலைகள் :சனி,குரு பார்வை. குரு பார்வை நன்று.ஆனால் பாதகாதிபதி சனி நல்லதை செய்யமாட்டார்.எனவே தந்தையால் உதவி இல்லை.மேலும் பாதகாதிபதி வீட்டில் மாந்தி.பிரேத தோஷம் உண்டு.

10ம் பாவம் : தொழிலைக் குறிப்பது.
வெற்றிலை நிலை : அடியில் ஓட்டை – 3ஓட்டைகள் – கிழிசல்.
கிரக நிலைகள் : பாதகாதிபதி சனி. அவரது வீட்டில் 6,3 வீட்டு அதிபதி புதன்.5ம் வீட்டு சூரியன் சனிக்கு பகை.அவர் 10ல். எனவே,கடன்ப்ட்டு வணிகம் செய்து இழப்பு.
கிழிதல் : பணத்திற்கு சண்டை ஏற்படும்.சனி வீட்டில் மாந்தி.பிதுர்வகை பிரேத
தோஷம் உண்டு.ஏன்? குளிகன் அல்லது மாந்திக்கு 12ம் பார்வை 10ல் படுகிறது. எனவே பாட்டன்களுக்கு கர்மம் செய்யவில்லை. அதனால் தோஷம்.

11ம் பாவம் : குறிப்பது லாபம் – மூத்த சகோதரர் – ஆசைகள் நிறைவேறல்.

வெற்றிலை நிலை : வளைந்து உள்ளது. ஓட்டை உண்டு.
பலன் : கெட்டது. லாபம் இல்லை. ஆசைகள் நிறைவேறாது.
கிரக நிலை : 11ல் மாந்தி. 11க்கு உரியவர் 3ல் உள்ளார்.

11ல் மாந்தி : பிரேத தோஷம். யாருடைய பிரேதம்? சகோதரர். உடையது. ஏன்? 3ல் 11க்கு உடையவர் உள்ளார். 3ல் மறைகிறார். எனவே ஒரு சகோதரர் பிரேதம் தோஷம் உண்டு.

12ம் பாவம் : குறிப்பன மோட்சம். இடது கண், குடும்ப செலவு, மருத்துவ செலவு.

வெற்றிலை நிலை : ஓட்டை, கிழிதல் 
பலன் : அளவுக்கு மேல் குடும்ப செலவு – மருத்துவ செலவு.
கிரக நிலை : 12ல் 2க்குரிய சுக்கிரன். 3ல் உள்ள சனி பார்வை. எனவே மனைவிக்கு மருத்துவ செலவு. சகோதரர்களுக்கு செலவு. தொழில் செய்ய செலவு ஏற்படும்.

குறிப்பு : வெற்றிலையை வாங்கி வரும் நேரத்திற்கு ஏற்ப பலனை உடனே அறியலாம்.

எடுத்துகாட்டு : குரு ஓரை, சனி அந்தரம். குரு மகனை குறிப்பவர். சூரியன் தந்தை. எனவே சனி அந்தரம் – மகன்களால் தொல்லை ஏற்படும். 

(எ.கா) சுக்கிரன் ஓரை – சூரிய அந்தரம்.
மனைவியால் அவமானப்படல் 
என்ன வாசகர்களே ! வெற்றிலை பிரசன்னம் எளிது தானே ! 
இதில் மாந்தியை குறிக்க வேண்டும்.
மற்ற கிரகங்களையும், சந்திரனையும் பஞ்சாங்கத்தைப் பார்த்துக் குறிக்கலாம்.

மாந்தி உதயமாகும் நேரம் பஞ்சாங்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

அன்றைய சூரிய உதயம் மணி முதல் கீழ் கானும் நேரங்களைக் கூட்டிக்கொள்ள வேண்டும்

திங்கள் 22 நாழிகை அல்லது 8 மணி 48 நிமிடங்கள்
செவ்வாய் 18 நாழிகை அல்லது 7 மணி 12 நிமிடங்கள்
புதன் 14 நாழிகை அல்லது 5 மணி 36 நிமிடங்கள்
வியாழன் 10 நாழிகை அல்லது 4 மணி 00 நிமிடங்கள்
வெள்ளி 6 நாழிகை அல்லது 2 மணி 24 நிமிடங்கள் 
சனி 2 நாழிகை அல்லது 00 மணி48 நிமிடங்கள்
இரவுக்கு அன்றைய பகலின் உதய நாழிகை (மணி) 5வது நாள் இரவுக்கு வரும்.

எடுத்துகாட்டு : 
ஞாயிறு பகலில் மாந்தி உதயமாகும் நேரம் 26 நாழிகை (10 மணி 24 நிமிடங்கள்) இரவுக்கு ஞாயிறுவின் 5வது நாள் வியாழனுடைய 10 நாழிகை (4 மணி) வரும்.

எளிய முறை : 
சூரிய ஸ்புடம் + மாந்தி உதய நாழிகை * 6 எடுத்துக்காட்டு.

சூரிய ஸ்புடம் = 160.15

சனிக்கிழமை மாந்தி உதயம் = 2 நாழிகை

எனவே மாந்தி உதயம் = 6 * 2 =12 நாழிகை

சூரிய ஸ்புடம் + மாந்தி உதயம் = 160.15+12 =172.15 தான் மாந்தி பகலில் . உள்ள இடம்

இத்துடன் 30 யைக் கூட்டினால் மாந்தி இரவில் உள்ள ராசி ஆகும். 

எனவே, இவ்வாறு தாம்பூல பிரசன்னம் மூலம் பலன்களை அறியவும்.

தாம்பூல பிரசன்னம் மூலம் கீழ்கண்ட செய்திகளை எளிதாக அறியலாம்.

வெளிநாடு போக : 

1. 4க்கு உடையவர் சர ராசியில் இருக்க வேண்டும். 

2. 4க்கு உரியவர் ஜல ராசியில் இருக்க வேண்டும்.

3. 10,4க்கு உடையவர் சம்பந்தம் இல்லையா? ஊரை விட்டு போவார்.

இதே போல் நவாம்சம் பார்க்க வேண்டும்.
திருமணம்

7ம் இடம் சுக்கிரன் நிலையைப் பார்.
வீடு கட்ட 
4 & 7 க்கு உடையவர் னிலை 
வேலை

10க்கு உரியவர் நிலை 
காரகர் : குரு, சனி, சூரியன், செவ்வாய் நிலை.
பணம் கிடைக்குமா?

2 & 1ம் இடம்
7ம் இடம் நிவர்த்தி ஸ்தானம் 

பரிகார பலன் அறிய : 10ம் இடம்
7ம் இட அதிபதி நன்கு இருந்தால் :வெற்றி
பிரிவினை : 7 & 8 சந்திரன் நிலை

தாம்பூல பிரசன்னம் மூலம் கோவில் செய்திகள் அறிதல்
30.07.2004 வெள்ளி ஆடி 17 அன்று மதுரை அருகே ஒரு கோவிலில் தாம்பூல பிரசன்னம் போடப்பட்டது. அன்று கிரக நிலைகள் அருகே உள்ளவாறு இருந்தன.

கொண்டு வந்த தாம்பூலத்தின் எண்ணிக்கை 10

எனவே 10 * 2 = 20

பஞ்சபூதங்கள் 5ஆல் பெருக்க = 20 * 5 =100

ஆன்மா 1யை கூட்ட = 100 + 1 = 101

அதை நவக்கிரகங்கள் 7ல் வகுக்க = 101/7 =14 3/7 =மீதி 3.
எனவே,

தாம்பூல கிரகம் 3ம் எண்ணுக்குரியவர் செவ்வாய். செவ்வாய் உள்ள ராசி கடகம். எனவே கடகம் தாம்பூல லக்னம் ஆகும்.
கோவில் பிரசன்னத்தின் பலன்கள் :

கோவில் பிரசன்னத்தின் முதல் பாவம் குறிப்பது :
கோவில் பூர்வீகம் – சிலை - வடிவம்
வெற்றிலை தந்த நேரம் :

காலை 11.26 மணி. எனவே, மேல் இருந்து வெற்றிலையை எடுத்தார்.

வெற்றிலை நிலை :
சில ஓட்டைகள் காணப்பட்டன.

கிரக நிலைப்படி பலன்கள் :
ஆருட லக்னத்தில் சூரிய பகவான் சிவனை குறிப்பவர். ஆனால் சூரியனுடன் செவ்வாய் நீசம். கடக ராசி, நீர் ராசி, செவ்வாய் 5 மற்றும் 10ம் உரியவர். சூரியன் மேஷத்தில் உச்சமாவார்.
எனவே இங்கு பூர்வீகத்தில் ஓர் அம்மன் கோவில் இருந்தது எனக் கூறியவுடனே மக்கள், “ஆம், இருந்தது” எனக் கூறினார்கள்.

அது தென்கிழக்கு எல்லையில் இருந்தது. ஆற்று பக்கம், கிணறு, குளம் இருந்து மூடப்பட்டது.

லக்னத்தில் செவ்வாய். எனவே ஆரம்பத்திலிருத்து இந்த கோவிலுக்காக சண்டை, தகராறு, கோஷ்டி பூசல் இருந்த்து. செவ்வாய் 5ம் வீட்டிற்கு அதிபதி. அவர் நீசம். எனவே ஆதியில் இருந்த மூலஸ்தானம் மாற்றப்பட்டதா?

மக்களின் பதில் :

முதலில் சிவன் கோவில் இருந்தது. இறைவன் பெயர் 
திருமேனிநாதன். பின்பு அம்மன் கோவில் ஆனது. அது 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.

லக்னத்தில் 2ம் அதிபதி சூரியன் உள்ளது. ஜல ராசி. எனவே கீழே விழுந்து தேவதை தலையில் அடிப்பட்டது. 

சூரியன் 10ல் மேஷ ராசியில் உச்சம். எனவே, ஒரு காலத்தில் சிறப்பாக கோவில் திருவிழாக்கள் நடத்தப்பட்டன.

எனவே, 5,10க்குரிய செவ்வாய் நீசம். உடன் சூரியன், சூரியன் மேஷத்தில் உச்சம். எனவே ஆரம்பத்தில் சிவன் கோவில் – பின்பு செவ்வாய் நீசமானதால் அம்மன் கோவில் – மேஷத்தில் ராகு – அம்மனைக் குறிக்கும்.

2ம் வீடு : கோவில் நிர்வாகம் – வரவு – உண்டியல் – பூமாலை –அலங்காரங்கள்
வெற்றிலை நிலை : ஓட்டை இருக்கிறது. எனவே வரவு இல்லை. 

கிரக நிலைப்படி : 2ல் மாந்தி -2ம் அதிபதி சூரியன் 12ல் எனவே வருமானம் இல்லை. சூரியன் அரசை குறிப்பதால் வருமானத்தை அரசு அதிகாரிகள் எடுத்துச் செல்கிறார்கள்.
3ம் வீடு குறிப்பது : நைவேத்தியம் – பாரிகாரகர்கள் –கோவில் நடத்தும் சிப்பந்திகள் மற்றும் சுத்தம் செயிபவர்கள் அதாவது வேலை ஆட்கள்.

வெற்றிலை நிலை : ஓட்டை (அ) துவாரம் உள்ளது. சுவாமிக்கு பிரசாதம், படையல் ஒழுங்காக செய்து படைக்கவில்லை.
கிரக நிலை : 3ம் அதிபதியுடன் மாந்தி உள்ளார்- எனவே நைவேத்திஉயம் இல்லை.3ம் இடம் மடப்பள்ளியில் தயாராகும் நைவேத்தியம் சுத்தம் இல்லை.

4ம் பாவம் : பிரகாரம் – கொடி மரம் – வாகனம் – உப தேவதைகள் மண்டபம் –சாமரம் 

வெற்றிலை நிலை : மேல் தூசு படிந்துள்ளது – துவாரம். எனவே உப தேவதைகள் சிறப்பாக இல்லை 

கிரக நிலை : 4ல் உள்ள கிரகம் கேது. செவ்வாய் பார்க்கிறார். கேது உள்ளதால் பிரேத தோஷம் உண்டு. பசு, பூனைக்குட்டி இறப்பு உண்டு.

பைரவர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பைரவர் தெற்கு முகமாக இருக்க வேண்டும். ஆனால் வடக்கு முகமாக உள்ளது. 

தண்ணீர் – நீர் கிணறு அசுத்தம் உண்டு – குளத்தில் / கிணற்றில் குழந்தை விழுந்து இறந்த்து.

செவ்வாய் 4யை பார்த்தால் சண்டை, சச்சரவு உண்டு.

5ம் பாவம் :

மூல மந்திரங்கள் – சிலை – தேவதைகளைக் குறிக்கும்.

வெற்றிலை நிலை :

பல விக்கரகங்கள் பின்னப்பட்டுள்ளன – விரிசல்கள் உண்டு. மந்திரங்களை பூசாரி தெரியாமல் கூறுகிறார். பூசாரிகளுக்குள் கலகம். வேலைக்காரர்கள் இடையே கலகம்.

6ம் பாவம் : உண்டியல், கோவில் சொத்தை திருடுபவர் – சிலைகளுக்கு தீங்குவிளைப்போர் – கோவிலில் ஏற்பட்டுள்ள அசுத்தம் 

வெற்றிலை நிலை: 
அங்கங்கு துவாரங்கள் தேவதைக்குரிய நிலங்கள் அபகரிப்பு. திருட்டு ஏற்பட்டுள்ளது.

கிரக நிலை : 
குரு பார்வை உள்ளதால் இன்னும் கோவிலுக்கு சொத்து உண்டு.
7ம் பாவம் :
கோவிலுக்கு வாங்கும் நகைகள் – துணிகள் – திருவிழாக்கள் – மக்கள் காணிக்கைகள்.

வெற்றிலை நிலை :
துவாரங்கள். எனவே, திருவிழாக்கள் இல்லை. மக்கள் காணிக்கைகள் இல்லை – வரவு இல்லை 

8ம் பாவம் :
நைவேத்தியம் – வாத்தியம் வாசிப்பவர் – கோவில் மேற்பார்வையாளர் செய்யும் செயல்கள் – கோவிலுக்கு வருபவர் மனப்பான்மை.

வெற்றிலை நிலை :
2 துவாரங்கள் உண்டு. 8ம் இடம் கும்பம். அதிபதி சனி லக்னத்திற்கு 12ல். ராசிக்கு 6ம் அதிபதி புதன் தன் ராசிக்கு 12ல்.
ஒரு சித்தர் உபாசனை செய்த வன துர்க்கா தேவி உள்ளது 

9ம் பாவம் :
கோவில் அமைப்பு – கோவிலுள்ள கோபுரங்கள் – கோவில் நிலங்கள் – மரம் – வருமானத்தைக் குறிக்கும் – கோவில் வரலாறு.

கிரக நிலை : 
9ம் அதிபதி குரு 2ல் மாந்தியுடன். எனவே ஒரு காலத்தில் இந்த கோவிலில் பிராமணர் பூஜை செய்து இருந்தார்கள். குரு, சூரியன் வீட்டில் இருப்பதால் பின்பு அரசாங்கத்திற்கு இக்கோவில் சொந்தமானது. பிராமணரைக் குறிக்கும். குரு மாந்தியுடன் உள்ளதால் பிராமணரிடையே சண்டை ஏற்பட்டு வடக்கு போனார்கள்.

பின்பு செவ்வாய் லக்னத்தில் உள்ளாதால் படைத்தலைவர்கள், க்ஷத்திரியர்கள் ஆதிக்கத்தில் கோவில் வந்தது. பின்பு நம்பூதிரிகள் வந்து அரசர் அனுமதியுடன் பூஜை செய்தார்கள் ஏன்? லக்னத்தில் குரு உச்ச இடம் ஆவதால்.

10ம் பாவம் : 
இது நித்திய பூஜை, உற்சவம், விழாக்களைக் குறிக்கும்.
10ம் வீட்டில் ராகு. 10ம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசம். எனவே பூஜை செய்ய தெரியாதவர் பூஜை செய்கிறார். திருவிழாக்கள் நடைபெறவில்லை. 

வெற்றிலை நிலை : ஒட்டை
11ம் பாவம் :
கோவில் பண வரவு – பூசாரி செய்யும் பூஜை கோளாறு வெற்றிலை இல்லை
11ம் இடம் பாதக இடம் சந்திரன் ஆட்சி. எனவே, ஆரம்பத்தில் பண வரவு இருந்தது.

12ம் பாவம் : 
பூஜை செய்பவன் மனநிலை – பண விரயம் – நஷ்டம் – கோவிலுக்கு ஏற்படும் குற்றம் குறைகள்.

12ம் இடம் மிதுனம். அதன் அதிபதி புதன் மாந்தியுடன் உள்ளார்.
12ல் சனி. எனவே, கோவில் சொத்து கோவிலுக்கு வரவில்லை.
தாம்பூல லக்னப்படி பலன்கள்

சூரியன் - அரச உதவி
சந்திரன் - தெய்வம்
செவ்வாய் - வழக்கு, வம்பு
புதன் - காரிய வெற்றி
குரு - தடங்கல், கடவுள் உதவி
சந்திரன் - வெற்றி
சனி - விபத்து

பிரச்சனைகள் தீர்க்க :
1, 5, 9ல் சுபர் ; 4ல் சுக்கிரன் ; 10ல் உள்ள அதிபதி நிலை குரு ஆருட லக்னத்திற்கு வரும்பொழுது பிரச்சனை தீரும்.

வேலை வாய்ப்பு :
10 – தொழில் ; 11 – வழக்கு வெற்றி ; 6 – ஐ.ஏ.எஸ்.அரசு பணி
எப்பொழுது முடியும்

சூரியன் - 30 நாட்கள்
சந்திரன் - 1 வாரம்
செவ்வாய் - 44 நாட்கள்
குரு - 1 மாதம்
சுக்ரன் - 27 நாட்கள்
சனி - 72 நாட்கள்
விதிகள் :
4,10 - சூரியன்
5,9 - குரு
1,4 - சுக்கிரன்
லக்னம் - புதன், சந்திரன்
சனி, செவ்வாய் - சிபாரிசு நிலை 
ராகு, கேது - இல்லை

திருமணம் :
7ம் இடம் - விரும்பும் பெண்
4ம் இடம் - வெற்றி
10ம் இடம் - பெண் மணப்பாள்
சுபர் பார்வை - தேர்வு பெறும்

இழந்த பொருள் கிடைக்குமா? 

தாம்பூல லக்னம் – அதிபர் உள்ள நிலைப்படி பலன்
வியாதி :
12ம் இடம் - வியாதி
வியாதி - 6
குணமாவாரா? - 10
பரிகாரம் - 5, 9
குழந்தை உண்டா? 

யமகண்டன் + குளிகன் = அனுஷம் நட்சத்திரம்
கரு
க்கலைப்பு
5ம் அதிபதி குருவால் பார்க்கப்பட யமகண்டன் எனில் குழந்தை இல்லை.
யோக ஸ்புடம் 

லக்னம் + எமகண்டம் 
இது மனித ராசி = குழந்தை
இது ஆண் ராசி = ஆண்
இது பெண் ராசி = பெண் 
இது அலி ஆனால் = கரு கலைப்பு (if see அலி)
யோக ஸ்புடம் 
12ல் சூரியன்
4ல் சனி
6ல் குரு = குழந்தை
8ல் செவ்வாய்
9ல் கேது


   














   

Saturday, 28 October 2017

சூரியனின் வரலாற்றில் எமன் செய்தது என்ன?


 வாக்கு வாதத்தின் போது எமன் சாயாதேவியை கீழே தள்ளி உதைத்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த சனி எமனிடம் இதை கேட்க, எமன் தன்னிடம் இருந்த கஜாயுதத்தால் சனியின் கால்களை அடித்தார். இதைக் கண்ட சாயாதேவி தன் மகனை அடித்த மற்றும் தன்னை உதைத்த எமனின் கால்கள் அழுகிப் போகட்டும் என சாபமிட்டாள்.

சாயாதேவியின் சாபத்திற்கு ஏற்ப எமனின் கால்கள் அழுகத் தொடங்கின. அழுகிய காலுடன் எமன் சு+ரியனை காண சென்றார். சு+ரியனும் எமனின் நிலையை கண்டு நடந்தது என்ன எனக் கேட்டார். எமன் அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சு+ரியனிடம் கூறினார்.

எனவே, சு+ரியன், சாயாதேவியை வெறுத்துவிட்டு சமிக்ஞையைத் தேடி சென்றார். அப்போது சமிக்ஞை சு+ரியனிடம், ஒரு நிபந்தனையை விதித்தார். சு+ரியனும் அந்த நிபந்தனையை ஏற்று தனது வெப்பத்தை குறைத்துக் கொள்கிறார். 

(சு+ரியனுடைய அதிகப்படியான வெப்ப சக்தியை வெளியேற்றி சு+லாயுதம் மற்றும் சக்ராயுதத்தை உருவாக்கி அதை சிவபெருமானும், விஷ்ணுவும் எடுத்துக் கொண்டனர்.) சாபம் பெற்ற எமனிடம், சிவபெருமானை நோக்கித் தவமிருக்க ஆலோசனைச் சொன்னார் சு+ரியன். எமனும் சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டு சிவபெருமானின் தரிசனத்தையும், ஆசியையும் பெற்று எமதர்மராகி உயிர்களுக்கு ஏற்படும் மரண காலத்தைக் கணக்கிட்டு கடமையாற்றினார்.

 அதன்பின் சு+ரியனும், சமிக்ஞையும் இணைந்தனர். அதன் பயனாக குதிரை வடிவம் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த இரண்டு குழந்தைகளுக்கு அஸ்வினி தேவர்கள் என்று பெயர் சு+ட்டப்பட்டது.

நட்சத்திர தொகுப்பில் அஸ்வினி தேவர்களே முதன்மையானவர்கள். சனி பகவானும் நவக்கிரக அந்தஸ்து பெற்று நவகிரகங்களில் ஒருவரானார். சு+ரியனுடைய அனைத்து புத்திரர்களுமே உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.

 எனவே, ஒருவர் ஜாதகத்தில் சு+ரியன் அமையும் நிலையைப் பொருத்தே களத்திர தோஷம், புத்திர தோஷம், உத்தியோக பிரபந்த தோஷம், வித்யா பிரபந்த தோஷம் போன்றவைகளும் ஏற்படுகின்றன.

சு+ரிய பகவானும், அவர் தரும் தோஷமும் :

ஒருவருடைய லக்னத்தில் சு+ரியன் நின்றால், அவர் முன் கோபம் கொண்டவராய் இருப்பார்.

லக்னத்திற்கு 5-ல் சு+ரியன் நின்றால், தனது சுகத்தை தானே கெடுத்து கொள்வார் மற்றும் புத்திர பாக்கியம் குறைவு.

லக்னத்திற்கு 7-ல் சு+ரியன் நின்றால் காலதாமதமான திருமணம் அமையும்.

சு+ரிய காயத்ரி மந்திரம் :

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சு+ர்ய ப்ரசோதயாத்

சு+ரிய பகவானுக்கான பரிகாரம் :

ஒருவருடைய ஜாதகத்தில் சு+ரியன் நீசம் பெற்றும், ஜாதகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நின்று தோஷம் தருமாயின், ஆடுதுறை சு+ரியனார் கோவில் சென்று மனதார சு+ரியனை வணங்கி பரிகாரம் செய்ய வேண்டும்.

இக்கோவில் சு+ரிய பகவானுக்கு பரிகாரம் செய்ய முதன்மையான கோவிலாகும்.




சாளக்ராம மகிமை.....

உயர்திரு, பானு வெங்கட்ராமன் அவர்களின் பதிவு, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கே பகிரப்படுகிறது......

வைதீகமான குடும்பங்களில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டும் வருவது சாள க்ராமம்.

இது உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிவப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை பெட்டியில் வைத்திருப்பார்கள்.

தலைமுறை, தலைமுறையாக வழி, வழியாக குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இதனை பெற்று ஆராதித்து வருகிறார்கள் என்பதே இது எவ்வளவு புனிதமானது, மதிப்பிற்குரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை விளக்கும்.

இது கன்னிகாதானத்தின் போது, கன்னிகையுடன் வரனுக்கு தானம் செய்யப்படுவதும் உண்டு.

சாளக்ராமசிலா என்பது விஷ்ணு அம்சம் உடையது. இதனுடைய மந்திரத்திற்கு ரிஷி ஸ்ரீபகவான். தேவதை நாராயணன்.

சாளக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கக்கூடிய ஒருவிதமான கல்.

பவிஷ்யோத்தர புராணம் கூறுவது 

கண்டகி நதிக்கு வடக்கிலும் ஹிமாசலத்திற்கு தெற்கிலும் பத்து யோஜனை விஸ்தீர்ணமுள்ள சாளக்ராமம் என்ற புண்ணிய பூமியுள்ளது.

இங்கு துவாரவதி சாளக்ராமத்தில் ஒன்று கூடுகிறது.

மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்தலம் இது என்பதில் சந்தேகமே கிடையாது.

முக்திமதி அல்லது முக்திக்ஷேத்ரம் என்று சொல்லப்படுவது காட்மாண்டுவிலிருந்து 140 மைல் தொலைவில் இருக்கிறது.

இதையே சாளக்ராம க்ஷேத்ரம் என்றும் கூறுவர்.

சாளக்ராமத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:

பிரம்மனது வியர்வைத் துளியினின்று கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள்.

அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர்.

அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். இது முடியாது என்பதால் தேவர்களை பூமியில் புழுக்காளாகும் படி சபித்தாள். கோபமடைந்த தேவர்கள் அவளை ஒரு ஜடமாக ஆக சபித்தனர்.

இதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரஇதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரனையும், ருத்ரனையும் அணுகி அவர்களது பரிஹாரம் கிட்டமுடியாமல், விஷ்ணுவை அண்டினார்.

இரு சாபங்களையும் அகற்ற இயலாது என்று கூறி விஷ்ணு ஒரு உபாயம் கூறினார்.

சாளக்ராம க்ஷேத்ரத்தில் சக்ர தீர்த்தத்தில் தான் வாசம் செய்வது என்றும் அங்கு தேவர்கள் வஜ்ர கீடம் என்ற புழுக்களாகி அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டியது என்றும் கண்டகி என்பவள் ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும் என்றும் ஏற்பாடாகியது.

அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியனவே சாளக்ராம கற்கள்.

பத்ரிநாத்திலுள்ள பிம்பங்கள் சாளக்ராமத்தினால் ஆனவை.

சாளக்ராமத்தை கோர்த்து மாலையாகவும் பிம்பங்களுக்கு அணிவிக்கலாம்.

சாளக்ராம உடைந்திருந்தாலும், ஸ்வரூப அழிவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும், அதற்கு ஒரு தோஷமும் இல்லை.

அது குற்றமற்றது.

சாளக்ராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு பூஜா விவரணங்களோ தேவையில்லை.

அது இருந்தாலே சந்துஷ்டியை கொடுக்கவல்லது.

சாதாரணமாக புருஷ சூக்த மந்திரத்தால் பூஜிப்பார்கள்.

அது சிரார்த்த காலங்களில் இருக்க வைப்பது பிதுர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.

சாளக்ராம அபிஷேகதீர்த்தத்தை சிரஸில் தெளித்துக் கொண்டு அதை அர்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்ண வேணும்.

இது வைகுண்ட வாசத்தைக் கொடுக்க வல்லது.

சாளக்ராம அபிஷேக ஜலத்தை கீழே கொட்டக்கூடாது.

இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.

இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.

இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், .சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.

பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து ’சாளக்கிராம சாட்சியாக’ சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது.

மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது.

சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல் கூறுகின்றது.

ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும் ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன.

சாளக்கிராமத்தை துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பானது என்று கூறுவர்.

உங்கள் பிள்ளைகளின் ஜாதகம் உங்களை பாதிக்குமா?


 ஜாதகருக்கு திருமணமாகாதவரை அவருடைய ஜாதகத்தின் அடிப்படையில்தான் அவருக்கு நன்மை தீமைகள் அமையும். அதற்கேற்பதான் பலன்களும் கிடைக்கும். ஆனால் திருமணமான பிறகு ஜாதகருடைய மனைவி, குழந்தைகள் ஆகியோருடைய ஜாதக கிரக நிலைகள் பொறுத்தும் பலன்கள் மாறும்.

குடும்பம் என்கிறபோது அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்திற்கே பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவும் குழந்தை பிறப்பதற்கு முன்பு வரைதான்.

ஜாதகருக்கு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தையின் ஜாதகத்திற்கே பலன் அதிகம். உதாரணத்திற்கு தந்தையின் ஜாதகத்தை பொறுத்தவரை அவருக்கு சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பிள்ளையின் ஜாதகப்படி சொந்த வீட்டில் தான் வாழவேண்டும் என்று இருந்தால், அவர்கள் வீடு வாங்கி விடுவார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி ஒரு குழந்தை கருவுற்ற 100 நாட்களுக்கு பிறகு அந்த சிசுவின் ஜாதகப் பலன்களை பெற்றோர்கள் பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

ஒருசில பெற்றோர்களுக்கு, கரு உருவாகும் சமயத்தில் குடும்ப சூழ்நிலையானது சாதாரணமாக இருந்தாலும் கூட, குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துகளை பெற்று விடுகின்றனர்.

இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒருசில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேலே கூறியுள்ள பலன்களுக்கு நேர்மாறான பலன்கள் உருவாவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது

சில நேரங்களில் தந்தையும், பிள்ளைகளும் வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ பிரிந்து வாழ்வார்கள். இதற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது பிள்ளைகளின் ஜாதகம் தான்.

 பிள்ளையின் ஜாதகம் ஒருவரை கோடீஸ்வரனாகவும், கடன்காரனாகவும் மாற்றும் வல்லமை கொண்டது. அதேபோல பரிகாரம் செய்ய நினைப்பவர்களும் பிள்ளைகளின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஏற்றாற்போல பரிகாரத்தை செய்யலாம். இதனால் தலைமுறை தலைமுறையாய் தொடரும் தோஷங்கள் விலகும். 

தாய் தந்தையர்களுக்கு ஜாதகம் இல்லை என்றாலும் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து 85 சதவிகிதம் பெற்றோர்களின் வாழ்க்கையை கணிக்க முடியும்.
உங்கள் பிள்ளைகளின் ஜாதகம் உங்களை பாதிக்குமா?


  ஜாதகருக்கு திருமணமாகாதவரை அவருடைய ஜாதகத்தின் அடிப்படையில்தான் அவருக்கு நன்மை தீமைகள் அமையும். அதற்கேற்பதான் பலன்களும் கிடைக்கும். ஆனால் திருமணமான பிறகு ஜாதகருடைய மனைவி, குழந்தைகள் ஆகியோருடைய ஜாதக கிரக நிலைகள் பொறுத்தும் பலன்கள் மாறும்.

குடும்பம் என்கிறபோது அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்திற்கே பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவும் குழந்தை பிறப்பதற்கு முன்பு வரைதான்.

ஜாதகருக்கு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தையின் ஜாதகத்திற்கே பலன் அதிகம். உதாரணத்திற்கு தந்தையின் ஜாதகத்தை பொறுத்தவரை அவருக்கு சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பிள்ளையின் ஜாதகப்படி சொந்த வீட்டில் தான் வாழவேண்டும் என்று இருந்தால், அவர்கள் வீடு வாங்கி விடுவார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி ஒரு குழந்தை கருவுற்ற 100 நாட்களுக்கு பிறகு அந்த சிசுவின் ஜாதகப் பலன்களை பெற்றோர்கள் பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

ஒருசில பெற்றோர்களுக்கு, கரு உருவாகும் சமயத்தில் குடும்ப சூழ்நிலையானது சாதாரணமாக இருந்தாலும் கூட, குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துகளை பெற்று விடுகின்றனர்.

இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒருசில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேலே கூறியுள்ள பலன்களுக்கு நேர்மாறான பலன்கள் உருவாவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது

சில நேரங்களில் தந்தையும், பிள்ளைகளும் வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ பிரிந்து வாழ்வார்கள். இதற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது பிள்ளைகளின் ஜாதகம் தான்.

 பிள்ளையின் ஜாதகம் ஒருவரை கோடீஸ்வரனாகவும், கடன்காரனாகவும் மாற்றும் வல்லமை கொண்டது. அதேபோல பரிகாரம் செய்ய நினைப்பவர்களும் பிள்ளைகளின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஏற்றாற்போல பரிகாரத்தை செய்யலாம். இதனால் தலைமுறை தலைமுறையாய் தொடரும் தோஷங்கள் விலகும். 

தாய் தந்தையர்களுக்கு ஜாதகம் இல்லை என்றாலும் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து 85 சதவிகிதம் பெற்றோர்களின் வாழ்க்கையை கணிக்க முடியும்.

பூஜையின் போது மணி அடிப்பது ஏன்:


பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை. இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.

மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும். கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர். இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்பது ஐதீகம்.

தொடர்புக்கு......

ஜோதிட ஆலோசனைக்கு,தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:- ஞானகுருஜோதிடநிலையம், வாட்ஸ்அப் எண் 7010520749, செல்,+91 9092566391, தங்களின் பிறந்த தேதி,மாதம்,வருடம், ஊர், பிறந்தநேரம் ,பகல் இரவு , தங்களின் வாட்ஸ்அப் எண் இருந்தால் தங்களுக்கு முழுவிபரம் அனுப்பிவைக்கப்படும், (தாங்கள் எங்கிருந்தாலும்), தங்களின் கேள்விகளுக்கு வாட்ஸ்அப்மூலமாக வீடியோ மூலமாக பதில்கூறப்படும்... விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும், ஆலோசனைக்கட்டணம் உண்டு, செலுத்தும்விபரம், தங்களின் வாட்ஸ்அப்பில் கூறப்படும்.....இனிய இரவு வணக்கங்கள்....

வீரம் காக்கும் கடவுள் வீரபத்திரர் ....



வீரம் காக்கும் கடவுள் வீரபத்திரர் 
வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். 

நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.

சதி என்கிற தாட்சாயினி தட்சனின் இளைய மகளாவாள். சிவன் மீது கொண்ட காதலால், தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார். 

இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள். இதனால் சிவபெருமான் ருத்திரன், மகாகாளி, வீரபத்திரன் முதலிய அவதாரங்களை உருவாக்கி தட்சனை அழித்தார்.

வீரபத்திரருக்கு “வீரம் காக்கும் கடவுள்”என்று பொருள் என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார். 

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சென்னையிலுள்ள மயிலாப்பூர், தாராசுரம், கும்பகோணம், திருக்கடவூர் போன்ற இடங்களிலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கல்வியங்காடு, வியாபாரிமூலை, தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

சென்னை - திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோயில் எனும் ஊர் உள்ளது . இவ்வூரின் தென் கிழக்கே அமைந்துள்ள அனுமந்தபுரம் ஆலயம் வீரபத்திரருக்கான சிறப்பு ஆலயமாக கருதப்படுகிறது .கிட்டத் தட்ட எட்டு அடி உயரம் கொண்ட கம்பீரமான உருவத்துடன் , மேற்கரங்களில் வில்லும் , அம்பும் , கீழ்க் கரங்களில் கத்தி , கேடயத்தையும் தாங்கியவராக எழுந்தருளியுள்ளார்.

இவரைச் சுற்றி அமைந்துள்ள கல்திருவாசியில் வலது கால் புறத்தில் தட்சன் நின்றிருக்க ,வீரபத்திரரின் தலையில் சிவலிங்கம் அமைந்துள்ளது ! வீரபத்திரர் எழுந்தருளிய வரலாற்றை பார்ப்போம்.

தட்ச சம்ஹாரத்திற்குப் பின் , வீரபத்திரரும் , பத்ரகாளியும் தமது கணங்களுடன் பெருமானை வணங்க பெருமான் அவர்களை தென்னகம் சென்று குடியேறும்படி அனுக்ரஹிக்க அதன் படி அவர்கள் விண் வழியே சென்று கொண்டிருந்த போது,வெற்றிலைத் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள இந்த இடம் அவர்களுக்குப் பிடித்துப் போகவே .இங்கு தங்கினர் .

தட்ச யாகத்தில் உயிரிழந்து பேய்களான மனிதர்களும் , தேவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர் . வீரபத்திரர் இங்கு சிவ பூஜை செய்து அவர்களுக்கு விபூதி அளிக்க அவர்களின் பேய் வடிவம் ஒழிந்தது !மனம் மகிழ்ந்த அவர்கள் அவரை வணங்கி ,

'' சிவ குமாரனே எங்கள் மனக்கலக்கம் அழிந்ததுடன் பேய் வடிவமும் தொலைந்தது போல் உம்மை வழிபடும் அன்பர்களுக்கும் நடை பெற வேண்டும் '' என்று வேண்டினர் . அதன் படி இன்றளவும் ஒவ்வொரு அமாவாசையன்றும் திரள் திரளாக மக்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள் ,குறிப்பாக மன நலம் குன்றியோர் , மற்றும் பில்லி, சூன்யம் , ஏவல் இவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து இவரை வழிபட்டு குறை நீங்கப் பெறுகிறார்கள் என்பது ஐதீகம்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வீரபத்திரரை வணங்கி அருள் பெறலாம்.

அரன் மைந்தனாகிய வீரபத்திரர் வீற்றிருப்பதால் இத்தலம் அரன்மைந்தபுரம் என்றழைக்கப்பட்டு , பின் மருவி .அனுமந்தபுரம் ஆனதென்பர் .இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் வீரபத்திரருக்கு ஒரு விசேஷ அம்சம் உண்டு .அதாவது , இம் மூர்த்தி தன்னை உள்ளன்புடன் வழிபடுவோர்க்கு,

காலை வேளையில் குழந்தைப் பொலிவுடனும் ,உச்சி வேளையில் வாலிபத்தோற்றத்துடனும் ,மாலை வேளையில் வயோதிகததோற்றத்துடனும் காட்சியளிக்கிறார் !!

அதிலும் வெள்ளிக் கவசத்துடன் காணும் போது மனம் குளிர்கிறது .இக்கோயிலில் நான்குகால பூஜை சிவாச்சாரியாரால் நடத்தப் படுகிறது .

மகா சிவராத்திரியில் பெரிய இடப வாகனத்தில் வீரபத்திரர் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும் . இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவது மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப் படுகிறது . வெற்றியைக் குறிக்கும் இலையே வெற்றிலையாகும் வெற்றிலைபடல் என்பது , சுவாமியைச் சுற்றி அதற்கென உள்ள பிரபையில் வெற்றிலைகளை பொருத்தி அமைக்கின்றனர் . அரை வெற்றிலைப் படலுக்கு,6400 வெற்றிலைகளும் , முழுப்படலுக்கு 12800 வெற்றிலைகளும் பயன் படுத்தப் படுகின்றன . மேலும் வெண்ணைக்காப்பும் இங்கு சிறந்த பிரார்த்தனையாகும் .

வீரபத்திரரின் வழிவந்தவர்கள் மற்றும் அவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி அல்லது வீரமுட்டி என்று அழைக்கபடுவார்கள். வீரமுட்டிகள் தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .வீரபத்திரசுவாமி வண்ணார்களின் குலதெய்வமாக வணங்கப்படுகிறது

Friday, 27 October 2017

ஜோதிட ஆலோசனைக்கு,தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:- ஞானகுருஜோதிடநிலையம், வாட்ஸ்அப் எண் 7010520749, செல்,+91 9092566391, தங்களின் பிறந்த தேதி,மாதம்,வருடம், ஊர், பிறந்தநேரம் ,பகல் இரவு , தங்களின் வாட்ஸ்அப் எண் இருந்தால் தங்களுக்கு முழுவிபரம் அனுப்பிவைக்கப்படும், (தாங்கள் எங்கிருந்தாலும்), தங்களின் கேள்விகளுக்கு வாட்ஸ்அப்மூலமாக வீடியோ மூலமாக பதில்கூறப்படும்... விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும், ஆலோசனைக்கட்டணம் உண்டு, செலுத்தும்விபரம், தங்களின் வாட்ஸ்அப்பில் கூறப்படும்.....இனிய சுக்ரவார காலை
வணக்கங்கள்..

Thursday, 26 October 2017

ராகு - கேது பெயர்ச்சியின் பலன்கள்



ராகு - கேது பெயர்ச்சி
27.07.2017 முதல் 13.02.2019 வரையுள்ள காலக்கட்டங்களில் 
ராகு - கேது பெயர்ச்சியின் பலன்கள் !
குறிப்பு : இதில் குறிப்பிடப்பட்டுள்ள ராகு - கேது பெயர்ச்சியின் பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் பொதுபலன்கள் ஆகும். எனவே அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ற பலன்களை விரிவாக தெரிந்துக் கொள்ள ஜோதிடரை அணுகித் தெரிந்துக் கொள்ளவும்.



மேஷ இராசி அன்பர்களே..!

  இந்த இராகு கேது பெயர்ச்சியானது உங்கள் இராசிக்கு அதிக நன்மைகளை கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு நற்பலன்களை அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இதுவரை ஐந்தாம் இடத்தில் இருந்த இராகுபகவான் உங்களது ராசிக்கு 4ம் இடத்தில் வந்து அமர்வதால் இனி தடைகள் பல வந்தாலும் அவற்றை தகர்த்தெறியும் சக்தி உங்களுக்கு உண்டாகும். இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு இருந்த கேதுபகவான் இப்போது 10ம் இடத்தில் வந்து அமருகிறார். இதனால் வேலைச்சுமை அதிகமாகலாம். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடும். 

  எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணம் பல வழிகளில் வந்தாலும், செலவுகளும் அதிகமாகும். வீடுகட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த ராகு கேது பெயர்ச்சி விவசாயிகளுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உறவினர்களிடம் உங்களை பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.

  குழந்தைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. பு+ர்வீக சொத்துகளில் பிரச்சனைகள் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு போட்டிகள் அதிகமாகும். கலைத்துறையில் முன்னேற பாடுபட வேண்டும். தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும். அடிக்கடி பயணம் செய்யும் சு+ழ்நிலை உருவாகும். தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களால் கருத்து வேறுபாடு உண்டானாலும் அதை எளிதில் மறந்து அன்பு பாராட்டுவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வாகனங்களை வாங்குவதிலும், பராமரிப்பதிலும் கவனம் தேவை. 

பரிகாரம்!

  ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யலாம், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காளி வழிபாடு செய்யலாம். சனிக்கிழமையன்று அனுமனுக்கு தீபம் ஏற்றி வழிபட மன நிம்மதி கூடும்.



ரிஷபம் இராசி அன்பர்களே...!

  இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்த ராகுபகவான் இப்பொழுது உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்திற்கு வந்து அமருவதால் இனி சவால்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து இருந்த கேதுபகவான் இப்போது உங்களது ராசிக்கு 9ம் வீட்டில் வந்து அமர்வதால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் பல நன்மைகளும், மேன்மைகளும் உண்டாகும். 

  உறவினர்களிடம் அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும். அடிக்கடி உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருமண சுபகாரியம் கைகூடும். ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகும். பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். வீடு, மனை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். 

  கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். தந்தையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களிடம் இருந்து வந்த மனச்சங்கடங்கள், வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் உங்களின் திறமைகளை வெளிக்காட்டி லாபம் அடைவீர்கள். 

பரிகாரம்!

  செவ்வாய் அன்று கேது பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுதல் நலம் மற்றும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துவதால் பிரச்சனைகள் குறையும்.



மிதுன இராசி அன்பர்களே...!

  இந்த இராகு கேது பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் வருவது மத்திம பலன்களையே கொடுக்கும் என்றாலும், உங்களின் முயற்சியால் முன்னேற்றம் அடைவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்யும்முன் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தடைப்பட்ட காரியங்கள் இப்போது கைகூடும். பணம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு விலகும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. 

  மன தைரியம் கூடும். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் பணத் தேவை உடனுக்குடன் பு+ர்த்தியாகும். மனைவியிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. முன்கோபம் அதிகமாகும். மனைவிவழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

  வியாபாரத்தில் புதிய திட்டங்களை புகுத்தி செயல்படுத்துவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை சுமாராக இருக்கும். பெண்களால் மேன்மை உண்டாகும். 

  வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உறவினர் வழியில் விரோதம் ஏற்படலாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். திருமண சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். 

பரிகாரம்!

  சனிக்கிழமைகளில் நவகிரங்களுக்கு அர்ச்சனை செய்யலாம். பவுர்ணமி அன்று அம்மன் சந்நதியில் வழிபடலாம், வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வர நற்பலன்கள் கிடைக்கும்.



கடக இராசி அன்பர்களே...!

  இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசியிலேயே அமர்வதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். பைனான்ஸ், சிட்பண்ட்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் தற்போது பயன் தராது. 

  செலவுகளும் துரத்திக் கொண்டு தான் இருக்கும். சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இருந்தாலும் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். 

  உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

பரிகாரம்!

  ஞாயிறு அன்று இராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம். சனிக்கிழமைகளில் ராமபிரானை வழிபாடு செய்தால் சிறப்பு. வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வர பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.



சிம்ம இராசி அன்பர்களே...!

  இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு புலம்பித் தவிக்கவைத்த ராகுபகவான், இப்போது ராசிக்கு 12ம் வீட்டுக்கு வந்து அமர்வதால் நோய்கள் நீங்கும். இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துகொண்டு தொல்லை தந்த கேதுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சனைகள் தீரும். 

  கடந்த காலங்ளை போல் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. உங்களைப் புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். இனி எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். 

  கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விரும்பிய கல்விப் பிரிவில் எதிர்பார்த்த நிறுவனத்தில் சேருவீர்கள். அறிவாற்றல் கூடும். விவசாயிகளுக்கு அரசாங்க சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை.

பரிகாரம்!

  கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனுக்கு தீபம் ஏற்றலாம். சனிக்கிழமைகளில் துளசி அர்ச்சனை செய்யலாம் மற்றும் சு+ரிய வழிபாடு செய்தல் நலம். 



கன்னி இராசி அன்பர்களே..!

  உங்களுக்கு இந்த இராகு கேது பெயர்ச்சியானது அனைத்து வளங்களையும் அள்ளிக் கொடுக்கும் இராகு யோகத்தை தரப்போகிறது. ராசிக்கு 12ம் இடமான சிமத்தில் இருந்து 11ம் இடமான கடகத்திற்கு செல்கிறது. நீங்கள் தொட்ட காரியங்கள் எளிதில் நடக்கும். சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பணம் பன்மடங்கு தொழில் மூலம் வந்து சேரும். இதுவரை உங்களை வாட்டி வதக்கிக் கொண்டிருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நல்ல வாழ்க்கை கிடைக்க போகும் காலம் இது. வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதில் ஆதாயம் பெரியதாக இருக்கும். ஒரு சில சமயங்களில் யோசிக்காமல் செய்யும் முதலீடுகள் நஷ்டத்தை அளிக்கும், அதனால் கவனமும் தேவை.

  எந்தக் காரியத்தை தொடங்கினாலும் இறுதி வரை விடா முயற்சியுடன் பணியாற்றுவது நல்லது. அதே சமயத்தில் குடும்பத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். திருமணம் தடைபட்டவர்களுக்கு மனதிற்கு தகுந்தாற்போல் நல்ல வரன் அமையும். தொலைதூர செய்திகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கும். சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாரத வகையில் இலாபம் அமையும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் வகையில் ஏற்பட்ட பிரச்சனைகள் இனி மெதுவாக குறையத் தொடங்கும். 

  உத்தியோகத்திற்கு செல்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணி இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். வாகன யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறுசிறு தொந்தரவுகள் இருந்து வந்தாலும் சிறிது நாட்களில் குணமடைந்துவிடும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்கவும். குரு பார்வை உங்களுக்கு நன்றாக இருப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம். இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு எதிரிகளின் பலம் கூடும். அதனால் நண்பர்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்க்கலாம். மற்றவர்கள் உங்களிடம் கருத்துகளை சொல்லும்போது அதனை ஆராய்ந்து செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவீர்கள். 

பரிகாரம்!

  வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யலாம். பிரதோஷத்தன்று நந்தியை வணங்கி நற்பலன்களை பெறலாம். வெள்ளியன்று ராகு காலத்தில் துர்கை வழிபாடு சிறந்தது. 



துலாம் இராசி அன்பர்களே...!

  இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீடான லாப வீட்டில் அமர்ந்திருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் வந்து அமருகிறார். இதனால் உங்களுக்கு பல நன்மைகளும், முன்னேற்றங்களும் ஏற்படப்போகிறது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்துகொண்டு சிந்திக்க விடாமல், பல கசப்பான அனுபவங்களை ஏற்படுத்திய கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்து அமருகிறார். இதனால் தௌpவான சிந்தனை பிறக்கும். 

  பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நடைப்பெற்று முடியும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். ஒரு சிலருக்கு தொழில் தொடங்க வாய்ப்புகள் கைக்கூடி வரும். உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணியாளருக்கு சம்பள உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவர். ஒரு சிலருக்கு வெளியு+ர் செல்லும் யோகம் வரும். உத்தியோகத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் எதிர்ப்பார்த்தவாறு நடைப்பெறும். 

  பணத்தேவைகள் பு+ர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கலைஞர்களுக்கு எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கும். எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளை சாமர்த்தியமாக கையாளுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நன்மதிப்பு பெற விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். படிப்பில் மறதி வரும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்ப்பார்த்த இடத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். விவசாயம் செழிக்க கடினமாக உழைக்க வேண்டும். கேதுவினால் சில வீண் விரயங்கள் ஏற்படலாம். கவனமுடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களுக்கு பல நன்மைகள் கொடுத்தாலும், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பல வெற்றிகள் கிடைக்கும்.

பரிகாரம்!

  நவகிரங்களில் ஒன்றான ராகு கேதுக்கு அர்ச்சனை செய்தல் நலம். சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் வழிபாடு செய்தல் நலம். வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்யலாம்.



விருச்சிக இராசி அன்பர்களே...!

  இதுவரை உங்கள் ராசிக்குப் பத்தாவது வீட்டில் அமர்ந்து ஒரு வேலையும் செய்யவிடாமல் செய்து சோம்பலைக் கொடுத்த ராகுபகவான், இப்போது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் சோம்பல் நீங்கும். உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார். உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவார். இதுவரை செய்து முடிக்க முடியாத காரியங்களை செய்து முடிப்பீர்கள். வருமானம் உயர்வதற்காக பாடுபடுவீர்கள். வீடு கட்டுவதற்கும், வாங்குவதற்கும் வங்கிகளில் கடனுதவி கிடைக்கும். 

  உங்கள் ராசிக்கு தைரியஸ்தானமான 3-ம் இடத்தில் கேது அமர்வதால் யோகம் தான். அப்படிப்பட்ட நற்பலன்களைத் தரும் ராகு - கேது பெயர்ச்சி ஒரு மாத காலத்திற்குள் யோக பலம் பெற்று சுற்றமும், நட்பும் போற்ற வாழலாம். புண்ணிய காரியங்களுக்கு பொருளுதவி செய்வீர்கள். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் அதில் ஏற்றம் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். தாயாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். 

  தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இடமாற்றம் செய்யும் அமைப்பும், அதன் மூலம் எதிர்பார்த்த லாபமும் வந்து சேரும். கடன் சுமை குறையும். எதிர்பாராத விதத்தில் ஒரு சிலருக்கு பதவிகள் கிடைக்கலாம். வீட்டில் ஒரு நல்லதுகூட நடக்காமல் தடைப்பட்டுக் கொண்டிருந்திருக்கும் ஆனால் இனிமேல் சுபகாரியங்களால் வீடு களைகட்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்!

  சனிக்கிழமையன்று அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றலாம். பவுர்ணமி அன்று சிவன் கோவில்களில் கிரிவலம் வரலாம். செவ்வாய்கிழமைகளில் முருகன் வழிபாடு செய்தால் சிறப்புடன் வாழலாம்.



தனுசு இராசி அன்பர்களே...!

  எவ்வளவு சம்பாதித்தாலும் அலட்டிக் கொள்ளாதவர்கள் நீங்கள். மனசாட்சிக்கு பயந்தவர்கள் மற்றும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள். இதுவரை ராகுபகவான் உங்கள் ராசியில் ஒன்பதில் அமர்ந்து கொண்டு வருமானத்திற்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்தார். ஆனால் இப்பொழுது எட்டாம் வீட்டில் சென்று மறைகிறார். அதனால் உங்களுக்கு மன அமைதி உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழி சொத்துகளைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகிச் செல்லும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

  இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேதுபகவான் இப்போது ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு வருகிறார். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் அந்தப் பேச்சாலேயே பிரச்சனைகளிலும், வீண் வம்புகளிலும் சிக்கிக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். எவரிடமும் தேவையில்லாமல் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

  வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். பணத்தை செலவு செய்யும் முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். இந்த ராகு - கேது மாற்றம் புதிய பாடத்தை கற்றுத்தரும், மேலும் முன்னெச்சரிக்கையுடன் எந்த செயலையும் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வைக்கும். விலை உயர்ந்த பொருட்களை இரவலாக தர வேண்டாம். பணப் பற்றாக்குறை நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. 

பரிகாரம்!

  வெள்ளிக்கிழமையன்று நாக வழிபாடு செய்யலாம். சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்யலாம். பிரதோஷத்தன்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வர வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.



மகர இராசி அன்பர்களே..!

  இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை பலவிதங்களிலும் முடக்கிப் போட்ட ராகுபகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்வதால் தன் பலம், பலவீனத்தை உணருவீர்கள். கேதுபகவான் உங்களுடைய ஜென்ம ராசியான மகர ராசிக்கே வந்து சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் முழு திருப்தி இருக்காது. கூடிப் பழகும் நண்பர்களுக்கிடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுறுசுறுப்பாக பல வேலைகள் செய்து முடிப்பீர்கள். 

  சில பேர் அலுவலகம், தொழில் நிலையம், வேலை பார்க்கும் நிர்வாகம் சம்பந்தமான மாற்றங்களை எதிர்கொள்ளும்படி நேரலாம். இந்த ராகு - கேது பெயர்ச்சியிலிருந்து உஷ்ண சம்பந்தமான நோய் நொடிகள் அடிக்கடி ஏற்படக்கூடும். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். நெருடலான, தர்ம சங்கடமான சு+ழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும். 

  எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். 

  அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பணவரவால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆரோக்கியம் பாதித்தாலும் ஆன்மிக பலத்தால் ஓரளவு நிம்மதி இருக்கும். 

பரிகாரம்!

  வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யலாம். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வர சங்கடங்கள் அகலும்.



கும்ப இராசி அன்பர்களே...!

  இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு குடும்பத்தினருடன் ஒட்டு உறவு இல்லாமல் இடைவெளியை ஏற்படுத்தி, திறமை இருந்தும் வெளி உலகில் ஒரு அங்கீகாரம் இல்லாமல் கௌரவக் குறைவை உண்டாக்கிய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்து அமர்கிறார். ராகுபகவான் உங்களின் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனிபகவானின் பு+சம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். 

  உங்களின் திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை புரிந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கேதுபகவான் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். செலவுகள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு சட்ட நிபுணர்களை அணுகித் தௌpவு பெறவும்.

  இதுவரை நல்லவேலை கிடைக்காமல் மனக்கவலையுடன் இருப்பவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பெண்களுக்கு இந்த ராகுகேதுப் பெயர்ச்சி சிறப்பான நன்மைகளைத் தரும். உங்களின் மதிப்பு உயரும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்சனைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். இந்த ராகு-கேது மாற்றம் ஓய்ந்து போயிருந்த உங்களை உயர வைப்பதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்!

  செவ்வாய்க்கிழமையில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யலாம். ஞாயிறு அன்று இராகு காலத்தில் காளி வழிபாடு செய்தல் சிறப்பு. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வர நற்பலன்கள் அதிகரிக்கும். 



மீன இராசி அன்பர்களே....!

  இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துகொண்டு சமூக அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளை தந்ததுடன், வருமானத்தையும் உயர்த்திய ராகுபகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். கேதுபகவான் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து பயணங்களால் அலைச்சல்களையும், அடுத்தடுத்து செலவுகளையும், மனஇறுக்கத்தையும் தந்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் அமர்கிறார். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

  சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

  வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாகக் கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உயரதிகாரிகள் இனி உங்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கைக்கு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி, குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் நல்ல முறையில் நடக்கும்.

பரிகாரம்!

  சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை செய்தல் சிறப்பு. வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனை வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் கிடைக்கும்.