வாக்கு வாதத்தின் போது எமன் சாயாதேவியை கீழே தள்ளி உதைத்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த சனி எமனிடம் இதை கேட்க, எமன் தன்னிடம் இருந்த கஜாயுதத்தால் சனியின் கால்களை அடித்தார். இதைக் கண்ட சாயாதேவி தன் மகனை அடித்த மற்றும் தன்னை உதைத்த எமனின் கால்கள் அழுகிப் போகட்டும் என சாபமிட்டாள்.
சாயாதேவியின் சாபத்திற்கு ஏற்ப எமனின் கால்கள் அழுகத் தொடங்கின. அழுகிய காலுடன் எமன் சு+ரியனை காண சென்றார். சு+ரியனும் எமனின் நிலையை கண்டு நடந்தது என்ன எனக் கேட்டார். எமன் அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சு+ரியனிடம் கூறினார்.
எனவே, சு+ரியன், சாயாதேவியை வெறுத்துவிட்டு சமிக்ஞையைத் தேடி சென்றார். அப்போது சமிக்ஞை சு+ரியனிடம், ஒரு நிபந்தனையை விதித்தார். சு+ரியனும் அந்த நிபந்தனையை ஏற்று தனது வெப்பத்தை குறைத்துக் கொள்கிறார்.
(சு+ரியனுடைய அதிகப்படியான வெப்ப சக்தியை வெளியேற்றி சு+லாயுதம் மற்றும் சக்ராயுதத்தை உருவாக்கி அதை சிவபெருமானும், விஷ்ணுவும் எடுத்துக் கொண்டனர்.) சாபம் பெற்ற எமனிடம், சிவபெருமானை நோக்கித் தவமிருக்க ஆலோசனைச் சொன்னார் சு+ரியன். எமனும் சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டு சிவபெருமானின் தரிசனத்தையும், ஆசியையும் பெற்று எமதர்மராகி உயிர்களுக்கு ஏற்படும் மரண காலத்தைக் கணக்கிட்டு கடமையாற்றினார்.
அதன்பின் சு+ரியனும், சமிக்ஞையும் இணைந்தனர். அதன் பயனாக குதிரை வடிவம் கொண்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த இரண்டு குழந்தைகளுக்கு அஸ்வினி தேவர்கள் என்று பெயர் சு+ட்டப்பட்டது.
நட்சத்திர தொகுப்பில் அஸ்வினி தேவர்களே முதன்மையானவர்கள். சனி பகவானும் நவக்கிரக அந்தஸ்து பெற்று நவகிரகங்களில் ஒருவரானார். சு+ரியனுடைய அனைத்து புத்திரர்களுமே உயர்ந்த நிலையை அடைந்தார்கள்.
எனவே, ஒருவர் ஜாதகத்தில் சு+ரியன் அமையும் நிலையைப் பொருத்தே களத்திர தோஷம், புத்திர தோஷம், உத்தியோக பிரபந்த தோஷம், வித்யா பிரபந்த தோஷம் போன்றவைகளும் ஏற்படுகின்றன.
சு+ரிய பகவானும், அவர் தரும் தோஷமும் :
ஒருவருடைய லக்னத்தில் சு+ரியன் நின்றால், அவர் முன் கோபம் கொண்டவராய் இருப்பார்.
லக்னத்திற்கு 5-ல் சு+ரியன் நின்றால், தனது சுகத்தை தானே கெடுத்து கொள்வார் மற்றும் புத்திர பாக்கியம் குறைவு.
லக்னத்திற்கு 7-ல் சு+ரியன் நின்றால் காலதாமதமான திருமணம் அமையும்.
சு+ரிய காயத்ரி மந்திரம் :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சு+ர்ய ப்ரசோதயாத்
சு+ரிய பகவானுக்கான பரிகாரம் :
ஒருவருடைய ஜாதகத்தில் சு+ரியன் நீசம் பெற்றும், ஜாதகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நின்று தோஷம் தருமாயின், ஆடுதுறை சு+ரியனார் கோவில் சென்று மனதார சு+ரியனை வணங்கி பரிகாரம் செய்ய வேண்டும்.
இக்கோவில் சு+ரிய பகவானுக்கு பரிகாரம் செய்ய முதன்மையான கோவிலாகும்.
No comments:
Post a Comment