Thursday, 26 October 2017

தீராத கடனை தீர்க்கும் தோரண கணபதி மற்றும் மைத்ர முகூர்த்தம் :

சிவாலயங்களில் அம்மன் சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி மூர்த்தங்கள், சக்தி வாய்ந்தவை. இந்த மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பதால் தோரண கணபதி எனப்படுகிறார். 

தோரண கணபதியைசெவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் ஒருநாள் என்று ஆறு வாரங்கள் சென்று கணபதியின் முன்பாக மூன்று நெய்தீபங்கள் ஏற்றி முப்பழங்களாக மாதுளை, மா, கொய்யா இவற்றை வைத்து அறுகம்புல்லைச் சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை சொல்லி தோப்புக்கரணம் செய்து ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றுதல்) செய்து நமஸ்கரித்தல் வேண்டும். 

தோரண கணபதி மூல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதியே சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய, ருணமோசன வ ல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

மைத்ர முகூர்த்தம் :

‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்பது பழமொழி. நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர்க்கு கடனை திருப்பி தருவது அல்லது கணக்கில் போட அல்லது சிறு தொகையை எடுத்து வைக்க, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். தோரண கணபதியை வணங்கி விட்டு இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துங்கள்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் ஓரலவு நல்ல பலன் பெறலாம்.

செவ்வாய் கிழமை அன்று செவ்வாய் ஹோரை காலை 6 - 7 அல்லது மதியம் 1 - 2 இருக்கும் காலத்தில் மைத்ரேய முகூர்த்தம் வருமேயானால் மிகவும் விசேஷமானது.

மாதம் தோறும் அஸ்வினி, அனுஷம் வருகை தந்தாலும், செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து பகல் வேளையில் மைத்ரேய முகூர்த்தம் வருடத்திற்கு சிலநாட்களே வரும்.

மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் பணம் கடன் கொடுத்தல்-வாங்கல் கூடாது என்பதால் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் வரும் மைத்ரேய முகூர்த்தங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

மைத்ர முகூர்த்த காலங்கள்:

19.8.17 சனி காலை 10.08 முதல் 12.08, மாலை 4.08 முதல் 6.08

29.8.17 செவ்வாய் காலை 11.10 முதல் மதியம் 1.10

25.9.17 திங்கள் காலை 7.30 முதல் 9.30

26.9.17 செவ்வாய் காலை 7.34 முதல் 9.34

23.10.17 திங்கள் காலை 6.20 முதல் 8.20

3.11.17 வெள்ளி மாலை 4.56 முதல் 6.56

19.11.17 ஞாயிறு காலை 6.15 முதல் 8.15

30.11.17 வியாழன் மதியம் 3 முதல் மாலை 5

16.12.17 சனி அதிகாலை 4.07 முதல் 6.07

28.12.17 வியாழன் மதியம் 1.10 முதல் 3.10

30.12.17 காலை 7.11 முதல் 9.11, மதியம் 1.11 முதல் 3.11

25.1.18 வியாழன் காலை 11.20 முதல் மதியம் 1.20

20.2.18 செவ்வாய் காலை 9.24 முதல் 11.24

20.3.18 செவ்வாய் காலை 8.20 முதல் 10.20

4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40

ராகுகாலம், எமகண்டம் ஆகியவை விதி விலக்கு.

ராசிகளுக்கேற்ற பொது மைத்ர முகூர்த்த நேரங்கள்.

மேஷம்: வியாழன் காலை 9 – 10½

ரிஷபம்: வெள்ளி காலை 8 – 10½

மிதுனம்: புதன் காலை 7½ – 9

கடகம்: திங்கள் மாலை 4½ – 6

சிம்மம்: ஞாயிறு காலை 11 – 12½

கன்னி: வெள்ளி மாலை 5 – 6½

துலாம்: சனி காலை 10½ – 12½

விருச்சிகம்: வியாழன் மாலை 3 – 5½

தனுசு: செவ்வாய் 10½ – 12½

மகரம்: சனி காலை 9 – 10½

கும்பம்: திங்கள் மாலை 3 – 5½

மீனம்: வியாழன் காலை 9 – 10½ 

No comments:

Post a Comment