- துலாம் :ReplyDelete
பண்புகளால் மேலோங்கி நிற்கும் துலாம் ராசி நேயர்களே !
பயணங்களால் அனுகூலம் பெறுவீர்கள். இம்மாதம் பாதகாதிபதி சு+ரியன் நீசம் பெறுவதால் வெற்றிகளை குவிப்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தன்னபிக்கைக்கு சோதனைகள் ஏற்படும். மன உறுதி பாதிக்கும். பொறுமையும், பெருந்தன்மை எண்ணங்களும் மேலோங்கும். வங்கி மூலம் கோரப்பட்ட புதிய கடன் வாய்ப்புகள் ஐப்பசி-15ஆம் தேதிக்கு மேல் கிடைக்கும். அரசு அனுகூலம் சற்று குறைவாக தான் இருக்கும். மனைவி வழியில் சில சுப விரயங்கள் உண்டாகும். திடீர் தன யோகம் ஏற்படும். இன்சு+ரன்ஸ் மற்றும் நீண்டகால வைப்பு தொகைகளில் தனலாபம் உண்டாகும். லாட்டரி மூலம் லாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் நன்மதிப்பு உருவாகும். கௌரவ பதவிகள் தேடி வரும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். பணிசார்ந்த இடமாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். படிப்பில் சற்று கவனம் தேவை. பெண்களால் சற்று வீண் பழிகள் சுமக்க நேரிடும். கவனம் தேவை. நண்பர்களுக்கு தன உதவிகளை தவிர்க்கவும்.
பரிகாரம் :
அமாவாசை நாட்களில் பித்ரு தர்ப்பணம் மற்றும் முன்னோர்களின் வழிபாட்டின் மூலம் வெற்றியை காணலாம்.
விருச்சிகம் :
துடிப்புமிக்க விருச்சிக ராசி நேயர்களே !
எண்ணங்கள் எண்ணியவாறு சிறந்த லாபத்தை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பு+ர்வீகத்தில் சாதிக்கும்மான முடிவுகள் ஏற்படாது. பிள்ளைகளால் சுப விரயங்கள் உண்டாகும். வீடு, வாகனங்களால் லாபங்கள் கூடும். பு+ர்வீக சொத்துக்களை உருமாற்றம் செய்வீர்கள். இளைய சகோதரர்களின் மூலம் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். கூட்டாளிகளின் மூலம் லாபங்களை காணலாம். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மாறி, அன்னியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து இன்ப சுற்றுலாக்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். திடீர் யோகத்தால் பண வரவு கூடும். சேமிப்புகளை சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள், தந்தையிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை கவனமுடன் செயல்படுத்தவும்.
பரிகாரம் :
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை, தீபமேற்றி வணங்கி வருவதால் நற்பலன்கள் விளையும். - தனுசு :ReplyDelete
தன்னம்பிக்கைமிக்க தனுசு ராசி நேயர்களே !
எதிலும் இலாபங்கள் ஏற்படும். தாயிடம் அமைதி காக்கவும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபங்கள் கிடைக்காது. சோம்பேறித்தனமும், மந்தகுணமும் அதிகரிப்பதால் தொழிலில் தோய்வுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். பிள்ளைகளால் பொருளாதார உயர்வு ஏற்படும். தொழிலில் முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள். தொழில் சம்பந்தமான எண்ணங்கள் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படும். உத்யோகத்தில் உள்ளோர்க்கு மேன்மை ஏற்படும். மூத்த சகோதரர்களால் இலாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டாளிகள் மூலம் இலாபங்கள் அதிகரிக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுவோர்க்கு நற்பெயர்கள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைக்கூடும். பு+ர்வீக சொத்துகளில் மாற்றம் செய்வீர்கள். தந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்படும்.
பரிகாரம் :
சிவன் ஆலயங்களில் உள்ள பைரவர் வழிபாடு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
மகரம் :
சு+ழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் மகர ராசி நேயர்களே !
எடுத்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் தன லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்கள் மூலமும், வெளிநாட்டு பயணங்கள் மூலமும் நல்ல சாதகமான பலன்கள் கிடைக்கும். தாயினால் ஆதாயம் உண்டு. வீடு, மனை மற்றும் வாகனங்களால் லாபம் உண்டு. வெளிவட்டாரங்களில் மதிப்பும் மரியாதையும் உயரும். பிள்ளைகளால் நற்பெயர் ஏற்படும். பு+ர்வீகத்தில் சாதகமான முடிவுகள் ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு தொழிலில் உள்ள எதிரிகளை வெல்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்வீர்கள். மனைவி மற்றும் கூட்டாளிகள் மூலம் இலாபம் அடைவீர்கள். தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளை முடிப்பதற்கு சாதகமான மாதம் ஆகும். இறைவழிபாட்டால் ஈடுபாடு அதிகரிக்கும்.
பரிகாரம் :
வெள்ளிக்கிழமைகளில் நாகதேவதைகளின் வழிபாடு மேன்மையைத் தரும். - கும்பம் :
அனைவரையும் அனுசரித்து செல்லும் கும்ப ராசி நேயர்களே !
சுயதொழில் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் மேலோங்கும். பணியாளர்களுடன் அன்புடன் நடந்து கொள்வதால் குழப்பமின்றி இலாபம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பாக நடந்து கொள்வதால் இலாபம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். சுய தொழில் செய்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். தாய்மார்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்பட்டு விரைவில் குணமடைவீர்கள். தாமதமான அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியைத் தரும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பு+ர்வீகத்தில் எதிர்பார்த்த சாதகமான முடிவு அமையும். எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. மனைவி மற்றும் கூட்டாளிகளுடன் பொறுமையுடன் பழகவும்.
பரிகாரம் :
மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் செவ்வரளி கொண்டு வழிபடுவதால் பொருளாதார மேன்மை ஏற்படும்.
மீனம் :
நிதானத்துடன் செயல்படும் மீன ராசி நேயர்களே !
மீன ராசிக்கு அதிபதியான குரு 8ல் நிற்பதால் மீன இராசி நேயர்களே இந்த மாதம் பொருளாதார முடக்கம், ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் ஏற்படுவதால் மருத்துவ செலவு ஏற்படும். வாரிசுகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். வாரிசுகளிடம் அமைதி காப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். புதிய தொழில் முதலீடுகள் செய்வதில் மிகுந்த கவனம் தேவை. தனச்சாரகன் 7ல் இருப்பதால் நண்பர்கள் மற்றும் தந்தையின் உறவுகள் மூலம் புதிய தொழில் அமைய வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த மாதத்தில் உறவுகளிடமும் வாகனம் ஓட்டுதலிலும் மிகுந்த கவனம் தேவை. அலைச்சலினால் உடல் சுகம் பாதிக்கப்படும். தாய்மார்களுக்குhpன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்வதால் எதிர்பாராத பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஐந்தாம் அதிபதி ஏழில் இருப்பதால் காதல் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் தோன்றும். ஆறுக்குடையவன் எட்டில் இருப்பதால் திடீர் யோகத்தில் எதிர்பாராத சில வரவுகள் உண்டு. தந்தையால் எதிர்பாராத வரவும் மருத்துவ செலவுகளும் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம் :
ஞாயிற்றுக்கிழமை சு+ரியனை சிவப்பு கலர் மலர்களை கொண்டு வழிபட்டு வரவும்
Thursday, 26 October 2017
Subscribe to:
Post Comments (Atom)
தியாக மனம் படைத்த சிம்ம ராசி நேயர்களே!
இம்மாதம் முழுவதும் இராசி அதிபதி நீச்சம் பெறுவதால் தந்தை மகன் உறவில் சலசலப்பு உண்டாகும். மனோதிடம் சற்று குறையும். தன்னம்பிக்கையும், முயற்சியையும் அதிகப்படுத்துவதாலும், மனோதைரியத்துடன் செயல்படுவதாலும் வெற்றி காணலாம். பொருளாதாரம் ஐப்பசி - 15 ஆம் தேதிக்கு மேல் சீராகும். வாய்ப்பகுதியில் வலிகள் மற்றும் நோய் தொற்றுகள் உருவாகும். பிள்ளைகள் உங்களின் முயற்சிக்கு தடையை ஏற்படுத்துவார்கள். ஆரோக்கியம் சிறப்படையும். உறவில் திருமண முயற்சிகள் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மெதுவாக செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம். உங்களின் பேச்சின் மூலம் புகழ் அடைவீர்கள். தந்தை பற்றிய சில தவறான தகவல் வரும். இதை பெரிதுபடுத்தாமல் தவிர்ப்பது நன்மையை தரும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் பெறுவீர்கள். கடன் மற்றும் எதிரிகளின் தொந்தரவுகளை சிறப்பான முறையில் கையாண்டு வெற்றி காண்பீர்கள். சுய கௌரவத்தை பாதிக்கும் சு+ழல் உருவாகும். இளைய சகோதர உறவில் நெருக்கம் குறையும்.
பரிகாரம் :
சிவன் கோவிலில் திங்கட்கிழமைகளில் தீபமேற்றி வழிபடவும். மேலும் தினமும் காலையில் சு+ரிய நமஸ்காரம் செய்யவும்.
கன்னி :
அறிவால் சாதிக்கும் கன்னி ராசி நேயர்களே !
செல்வாக்கு உயரும். வருமான நிலை சிறப்படையும். குடும்பத்திற்கு தேவையான சில ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களினால் அலைச்சல் உருவாகும். சகோதரர்கள் மற்றும் இளைய சகோதரிகளிடம் வாக்கு வாதங்களை தவிர்ப்பது சிறப்பு. இல்லாவிட்டால் அவர்களால் சில வழக்குகளை சந்திக்க நேரிடும். தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடிய சு+ழலை தவிர்க்க முயல்வது அவசியம். முதலீடு செய்யாத புதிய தொழில் உருவாகும். அது ஆலோசனை, விற்பனை பிரதிநிதிகள், கலைகள் சார்ந்த தொழிலாக அமையும். திருமண முயற்சிகள் மேற்கொள்ளலாம், புத்திர பாக்கியத்தில் தடை உருவாகும். விரக்தி எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மிக பயணங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். மனைவி மூலம் குடும்ப வருமான நிலை உயரும். மனதில் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகள் மேலோங்கும். சட்டத்திற்கு உட்படாத சில வருமானங்கள் உண்டாகும். சில விலை உயர்ந்த பரிசுகள் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சு+ழ்நிலை உருவாகும்.
பரிகாரம் :
ஸ்ரீ ரங்கம் சென்று சக்கரத்தாழ்வாரை தீபமேற்றி, மலரிட்டு அர்ச்சித்து வழிபட்டு வரவும், நன்மைகள் வந்து சேரும்.