Saturday, 28 October 2017

உங்கள் பிள்ளைகளின் ஜாதகம் உங்களை பாதிக்குமா?


 ஜாதகருக்கு திருமணமாகாதவரை அவருடைய ஜாதகத்தின் அடிப்படையில்தான் அவருக்கு நன்மை தீமைகள் அமையும். அதற்கேற்பதான் பலன்களும் கிடைக்கும். ஆனால் திருமணமான பிறகு ஜாதகருடைய மனைவி, குழந்தைகள் ஆகியோருடைய ஜாதக கிரக நிலைகள் பொறுத்தும் பலன்கள் மாறும்.

குடும்பம் என்கிறபோது அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்திற்கே பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவும் குழந்தை பிறப்பதற்கு முன்பு வரைதான்.

ஜாதகருக்கு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தையின் ஜாதகத்திற்கே பலன் அதிகம். உதாரணத்திற்கு தந்தையின் ஜாதகத்தை பொறுத்தவரை அவருக்கு சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பிள்ளையின் ஜாதகப்படி சொந்த வீட்டில் தான் வாழவேண்டும் என்று இருந்தால், அவர்கள் வீடு வாங்கி விடுவார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி ஒரு குழந்தை கருவுற்ற 100 நாட்களுக்கு பிறகு அந்த சிசுவின் ஜாதகப் பலன்களை பெற்றோர்கள் பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

ஒருசில பெற்றோர்களுக்கு, கரு உருவாகும் சமயத்தில் குடும்ப சூழ்நிலையானது சாதாரணமாக இருந்தாலும் கூட, குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துகளை பெற்று விடுகின்றனர்.

இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒருசில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேலே கூறியுள்ள பலன்களுக்கு நேர்மாறான பலன்கள் உருவாவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது

சில நேரங்களில் தந்தையும், பிள்ளைகளும் வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ பிரிந்து வாழ்வார்கள். இதற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது பிள்ளைகளின் ஜாதகம் தான்.

 பிள்ளையின் ஜாதகம் ஒருவரை கோடீஸ்வரனாகவும், கடன்காரனாகவும் மாற்றும் வல்லமை கொண்டது. அதேபோல பரிகாரம் செய்ய நினைப்பவர்களும் பிள்ளைகளின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஏற்றாற்போல பரிகாரத்தை செய்யலாம். இதனால் தலைமுறை தலைமுறையாய் தொடரும் தோஷங்கள் விலகும். 

தாய் தந்தையர்களுக்கு ஜாதகம் இல்லை என்றாலும் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து 85 சதவிகிதம் பெற்றோர்களின் வாழ்க்கையை கணிக்க முடியும்.
உங்கள் பிள்ளைகளின் ஜாதகம் உங்களை பாதிக்குமா?


  ஜாதகருக்கு திருமணமாகாதவரை அவருடைய ஜாதகத்தின் அடிப்படையில்தான் அவருக்கு நன்மை தீமைகள் அமையும். அதற்கேற்பதான் பலன்களும் கிடைக்கும். ஆனால் திருமணமான பிறகு ஜாதகருடைய மனைவி, குழந்தைகள் ஆகியோருடைய ஜாதக கிரக நிலைகள் பொறுத்தும் பலன்கள் மாறும்.

குடும்பம் என்கிறபோது அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்திற்கே பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுவும் குழந்தை பிறப்பதற்கு முன்பு வரைதான்.

ஜாதகருக்கு குழந்தை பிறந்துவிட்டால் அந்த குழந்தையின் ஜாதகத்திற்கே பலன் அதிகம். உதாரணத்திற்கு தந்தையின் ஜாதகத்தை பொறுத்தவரை அவருக்கு சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பிள்ளையின் ஜாதகப்படி சொந்த வீட்டில் தான் வாழவேண்டும் என்று இருந்தால், அவர்கள் வீடு வாங்கி விடுவார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி ஒரு குழந்தை கருவுற்ற 100 நாட்களுக்கு பிறகு அந்த சிசுவின் ஜாதகப் பலன்களை பெற்றோர்கள் பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

ஒருசில பெற்றோர்களுக்கு, கரு உருவாகும் சமயத்தில் குடும்ப சூழ்நிலையானது சாதாரணமாக இருந்தாலும் கூட, குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துகளை பெற்று விடுகின்றனர்.

இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒருசில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேலே கூறியுள்ள பலன்களுக்கு நேர்மாறான பலன்கள் உருவாவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது

சில நேரங்களில் தந்தையும், பிள்ளைகளும் வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ பிரிந்து வாழ்வார்கள். இதற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது பிள்ளைகளின் ஜாதகம் தான்.

 பிள்ளையின் ஜாதகம் ஒருவரை கோடீஸ்வரனாகவும், கடன்காரனாகவும் மாற்றும் வல்லமை கொண்டது. அதேபோல பரிகாரம் செய்ய நினைப்பவர்களும் பிள்ளைகளின் ஜாதகத்தை கணித்து அதற்கு ஏற்றாற்போல பரிகாரத்தை செய்யலாம். இதனால் தலைமுறை தலைமுறையாய் தொடரும் தோஷங்கள் விலகும். 

தாய் தந்தையர்களுக்கு ஜாதகம் இல்லை என்றாலும் பிள்ளைகளின் ஜாதகத்தை வைத்து 85 சதவிகிதம் பெற்றோர்களின் வாழ்க்கையை கணிக்க முடியும்.

No comments:

Post a Comment