மேஷம் :
முயற்சியில் தளர்ச்சியடையாத மேஷ இராசி நேயர்களே !
ராசி அதிபதி செவ்வாயும், 2ம் அதிபதி சுக்கிரனும் 6ல் மறைவதால் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். இதனை சரி செய்ய மனைவியின் உதவி கொண்டு வெற்றி பெறலாம். கடந்த மூன்று வருடங்களாக சனிபகவான் அஷ்டம சனியாகி உங்களுக்கு தாங்க முடியாத சோதனை கொடுத்து வந்திருப்பார். ஐப்பசி 10ம் தேதி முதல் சனிபகவான் தனுசுக்கு சென்று உங்களை சாதிக்க வைக்கப்போகிறார். ஆகவே மகிழ்ச்சிகரமான வாரமிது. மேலும் நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். பதட்டமின்றி சாதனையாளராக மாறும் காலம். தொழிலில் முதலீடு குறித்த கடன்கள் கேட்ட இடங்களில் கிடைக்கும். இதுவரை தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி வெற்றி, புகழ் உண்டாகும்.
பரிகாரம் :
ஐப்பசி 10-ம் தேதிக்கு மேல் சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று, குளத்தில் நீராடி, சனிபகவானை முறைப்படி வழிபட்டால் வெற்றிகளை குவிக்கலாம்.
ரிஷபம் :
அன்பையே ஆயுதமாக கொண்ட ரிஷப இராசி அன்பர்களே !
இராசிநாதன் சுக்கிர பகவான் திரிகோணமேறி, நீச பங்கம் அடைகிறார். ஆகவே முயற்சிகளில் சற்று பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். திடீர் யோகத்தால் திக்குமுக்காடிப் போவீர்கள். மேலும் ஐப்பசி 10-ம் தேதி முதல் சனிபகவான் உங்கள் இராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து, அனுபவ அறிவை தரப்போகிறார். வாரத்தின் இறுதியில் உங்களுக்கு சந்தராஷ்டம் வருவதால் வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. வாகன பழுது உண்டாகும். வேலையாட்களிடம் அமைதியை காக்கவும். முயற்சி சுப பலன்களை தரும். தொழில் வகை மாற்றங்கள் உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் அமைதியை கையாள்வது அவசியம்.
பரிகாரம் :
சித்தர்களின் ஜீவ சாமதிகள் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரலாம். ஸ்ரீPரங்கம் சென்று வழிபட்டு வரவும்.
மிதுனம் :
நகைச்சுவை உணர்வுமிக்க மிதுன இராசி அன்பர்களே !
இராசிநாதன் புதன் திரிகோணமேறி நிற்பதால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடியே நிறைவேறும். இந்த வாரத்தில் காதல் வயப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. முயற்சி ஸ்தானதிபதி சு+ரியன் நீசம் பெறுவதால் மனோதிடம் சற்று குறையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால் வெற்றி பெறலாம். 4ல் சுக்கிரனும், செவ்வாயும் இணைவதால் பெண்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். ஐப்பசி 10ம் தேதி முதல் சனிபகவான் தனுசு இராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு கண்டக சனி ஏற்படுகிறது. கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்லவும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது உத்தமம்.
பரிகாரம் :
பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று, தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவும். குரங்குகளுக்கு வாழைப்பழம் வாங்கி கொடுப்பது நன்மையை தரும்.
கடகம்:
நிர்வாகத்திறமைமிக்க கடக இராசி அன்பர்களே !
இந்தவாரம் முழுவதும் இராசிநாதன் சந்திரன் 6,7,8 ஆகிய ஸ்தானங்களில் வளர்பிறை சந்திரனாக சஞ்சரிப்பதால் ஊக்கமுடன் செயல்படுவீர்கள். வாக்குறுதிகளை தவிர்ப்பது நலம். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிரிகளிடம் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு அவர்களிடம் வெற்றி கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பு+ர்வீக சொத்துகளில் சுமூக நிலை உருவாகும். ஆன்மீக ஈடுபாட்டால் அமைதியை காணலாம். பொருளாதார உயர்விற்கான முயற்சியை அதிகப்படுத்தவும். திருமண முயற்சிகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டு. உறவினர்களால் ஆதாயம் உண்டு. உடல்நலனில் அக்கறை தேவை.
பரிகாரம் :
விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, தீபமேற்றி வழிபடவும்.
சிம்மம் :
ஆளுமை திறமைமிக்க சிம்ம இராசி அன்பர்களே !
இதுவரை அர்த்தாஷ்டம சனியாக நின்று, தேக ஆரோக்கியத்தை அசைத்தும் பார்த்த சனிபகவான் ஐப்பசி மாதம் 10ம் தேதி முதல் இராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். பு+ர்வீக சொத்துகளில் பாக பிரிவினையில் இழுப்பறி உருவாகும். இவ்வார இராசி அதிபதி சு+ரியன் 3ல் நீசம் பெற்று சஞ்சரிப்பதால் சற்று பொறுமையுடன் செயல்படுவது சிறப்பு. வருமானம் தரக்கூடிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். டிராவல்ஸ், பைனான்ஸ் நடத்துபவர்கள் வருமானத்தில் முடக்க நிலை காணப்படும். அடுத்து வரும் வாரங்களில் இது சரியாகிவிடும். கவலை வேண்டாம். தேக ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவத்தை தேர்ந்தெடுப்பதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். பேச்சில் பொறுமையும், நிதானமும் தேவை. தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்:
ஞாயிற்றுகிழமையன்று சிவாலய வழிபாட்டை மேற்கொள்வதால் நற்பலன் கிடைக்கும். சு+ரிய நமஸ்காரம் தினமும் செய்வது நலம்.
கன்னி :
நுண்ணறிவுமிக்க கன்னி இராசி அன்பர்களே !
இராசிநாதன் புதனும், 2ம் அதிபதி சுக்கிரனும், பரிவர்த்தனை பெறுவதால் தேவைக்கேற்ற வரவுகள் இருக்கும். இராசியில் செவ்வாய் நிற்பதால், உணர்ச்சிவசப்பட நேரிடும். பொறுமை அவசியம். வாய், பல், தாடை பகுதிகளில் உஷ்ணத்தால் புண்கள் ஏற்படும். முதலீடு செய்த தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான புதிய வழிமுறைகள் பிறக்கும். தொழில் இடப்பெயர்ச்சி உண்டாகும். வாடகை வரும் சொத்துகளில் முதலீடு செய்து வருவாயை அதிகப்படுத்துவீர்கள். கூட்டு தொழிலில் சிறப்பான வருமானம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம் :
சர்ப்பம் உள்ள கோவில்கள் மற்றும் புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவது சிறப்பு.
துலாம் :
பாசத்தின் மதிப்பு தெரிந்த துலாம் இராசி அன்பர்களே !
பாதாகதிபதி சு+ரியன் நீசம், ஆறாம் அதிபதி குரு அஸ்தமனம், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம் என்பதற்கிணங்க, இராஜயோகம் உங்களுக்கு ஏற்படப்போகிறது. வீடு, வாகன இனங்களில் வருமானம் சற்றும் தோய்வை தரும். விருந்து, கேளிக்கைகளில் மன மகிழ்ச்சி ஏற்படும். மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றும். அரசு அதிகாரிகளிடம் அனுகூலத்தை எதிர்பார்க்க இயலாது. சேமிப்புகள் கரையும், ஆரோக்கியம் சீர்படும். திருமண முயற்சிகள் தாமதப்படும். ஐப்பசி 15ம் தேதிக்கு மேல் அனைத்தும் சரியாகும். தற்போது பொறுமை மட்டுமே அவசியம்.
பரிகாரம் :
சிவாலயத்தில் உள்ள பைரவரை வணங்குவதால், அனைத்து பிரச்சனைகளையும் வெற்றி காணலாம்.
விருச்சிகம் :
வேகம் நிறைந்த விருச்சிக ராசி அன்பர்களே!!
தற்போது ஜென்ம சனியாக இருந்து உடல் மற்றும் பலவிதமான மன வேதனைகள் கொடுத்து வந்த சனிபகவான் ஐப்பசி 10 ஆம் தேதி தனுசு ராசிக்கு மாறி, பாதச் சனியாக உருமாறுகிறார். கடந்த 3 வருடமாக ஏற்பட்ட பல சிரமங்கள் மாறி சுபம் ஏற்படும். தந்தைக்கு சில உடல் உபாதைகளை தருவார். தொழிலில் சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படும். குடும்பத்திற்கு தேவையான சுப விரயம் செய்வீர்கள். உத்தியோகத்திற்கு செல்பவர்கள் பெண்களால் சில சிரமங்களுக்கு ஆளாகுவீர்கள். திருமண முயற்சிகள் சற்றே தாமதப்படும். பெண் நட்புகளால் உபத்திரத்திற்கு ஆளாவீர்கள்.
பரிகாரம் :
வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு தீபமேற்றி வழிபடுவது சிறப்பு. சாந்த சொரூப அம்பிகையை வழிபடவும்.
தனுசு :
பொறுமையை புகழிடமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!!
இராசி நாதன் குரு பகவான் சு+ரியனிடம் அஸ்தணம் அடைவதால் காரிய தாமதம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு கட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு வேலையில் தாமதம் உண்டாகும். திருமண வாய்ப்புகள் கைகூடும். வெளிவட்டார புகழில் தோய்வு நிலை காணப்படும், தந்தையிடம் கருத்து வேறுபாடு காணப்படும். ஐப்பசி-10ம் தேதி முதல் ஜென்ம சனியாக, சனிபகவான் செயல்படுவதால் மனதிலும், உடலிலும் சோர்வு ஏற்படும். இதனால் உங்களின் செயல்திறன் குறையும். வேலையில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் சுமாரான லாபம் உண்டாகும். படிப்பில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். மறதி அதிகம் ஏற்படும்.
பரிகாரம் :
நவகிரகத்தில் உள்ள குருவிற்கு தீபமேற்றி, மஞ்சள் பு+க்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.
மகரம் :
சு+ழ்நிலை புரிந்து கொண்டு செயல்படக்கூடிய மகர ராசி அன்பர்களே!!
ஐப்பசி 10-ஆம் தேதி முதல் ஏழரை சனியின் விரய சனி ஆரம்பமாகிறது. சுப விரயங்களான வீடு கட்டுதல், திருமணம் போன்றவற்றால் ஏழரை சனியின் பாதிப்பை குறைக்கலாம். பின்னர் நடக்கப்போவதை முன்னரே அறியும் தீர்க்க தரிசனம் ஏற்படும். தொழில் வகையில் புதிய முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் செய்வதற்கான கடன் பெற்று, தொழில் துவங்க நேரிடும். பிரபலமானவர்களின் ஆதரவினால் நன்மைகள் நடக்கும். அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். தாய்மொழியில் படிப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். அனைத்து காரியங்களிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். திருமண வாய்ப்புகள் கைகூடும்.
பரிகாரம் :
தேனிக்கு அருகில் உள்ள குச்சனு}ர் சென்று சனிபகவானை வழிபட்டு வரவும்.
கும்பம் :
உணர்ச்சிகளை காட்டாத கும்ப ராசி அன்பர்களே!!
இராசி அதிபதி சனிபகவான் ஐப்பசி -10ஆம் தேதி முதல் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வகை லாபங்கள் அதிகமாகும். வெளி வட்டாரங்களில் உங்களின் பேச்சிற்கு மதிப்பு கூடும். திருமண முயற்சிகளில் சற்று தாமதம் ஏற்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பு+ர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அரசு அதிகாரிகளால் அனுகூலம் குறையும். பெரியவர்களின் வழிகாட்டல் நற்பலனை தரும். ராசிக்கு குருபார்வை இருப்பதால் பாதகம் இல்லை. பொறுமை கடைபிடிப்பதால் வெற்றி காணலாம். படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்பில் மேன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதப்பட்டே நடக்கும்.
பரிகாரம் :
கஞ்சனு}ர் சென்று இறைவனையும் அம்பாளையும் தீபமேற்றி வழிபட அனைத்தும் சுபமாகும்.
மீனம் :
ஆலோசனை கூறுவதில் ஆசான் போன்ற மீன ராசி அன்பர்களே !!
இராசி அதிபதி குரு பகவான் 8-ல் மறைந்து நிற்பதால், எதிர்கால சம்பந்தமான திட்டங்களை தீட்டி, செயல்படுத்த முற்படுவீர்கள். கணவன்- மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். மாமனாரின் ஆலோசனை மாறான செயல் கொடுக்கும். வீடுகட்டும் பணியில் தாமதம் ஏற்படும். புதிய வீடு வாங்கும் பணியில் தோய்வு நிலை, குழப்ப நிலை நீடிக்கும். ஆன்மீக நாட்டம் ஏற்படும். புத்திர பாக்கியத்தை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு சோதனை காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசு அனுகூலம், தந்தையின் ஆதரவு ஆகியவை சற்று குறையும். புதிய தொழில் முயற்சியை தள்ளி வைப்பது சிறப்பு.
பரிகாரம் :
மேதகு தட்சிணாமூர்த்தியை 5 விதமான மஞ்சள் நிற பொருட்களால் ஆராதிப்பதால் நற்பலன்களை பெறலாம்...
No comments:
Post a Comment